2005

அப்பாடா! ஒரு வழியாக b2Evolution-லிருந்து WordPress-க்கு உஜாலாயிட்டேன்! முதலிலேயே WordPress-க்கு போய் குடியேறியிருக்கலாம். ஆனால் ஒரு வீம்புக்காக b2Evo-வுக்குத் தாவினேன். ஆனால் WordPress செயலியின் வளர்ச்சி மின்னல் வேகம்! அதை பல மென்பொருள் வல்லுனர்கள் தினமும் அமுலும், சத்துணவும் போட்டு போஷாக்களித்து […]

இணைய தள அமைப்பு பற்றியும், டொமைன் பெயர் பதிவு, தளத் தாழ்வார வாடகை முதலிய ராக்கெட் அறிவியல் விளக்கங்களையும் எழுதப் போகிறேன் என்று முன்பு பயமுறுத்தியிருந்தேன். “எழுதுங்கள் பார்க்கலாம்” என்று காசி அவர்கள் வழிமொழிந்திருந்தார். விலாவாரியாக எழுதலாம் என்று ஒத்திப் போட்டுக் […]

நான் தினமும் இந்த இடத்தைத் தாண்டித்தான் அலுவலகத்துக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். ஒரு நாளாவது உள்ளே சென்று அந்த கட்டிடத்தின் சரித்திரத்தை ஆராயலாம் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கெல்லாம் ஒரு குழு சுற்றுப் பயணம் […]

அரிய முகங்களின் அறிமுகம் எனக்குக் கிட்டிய அருமையான மாலைப் பொழுது! ஆம், கிழக்குக் கடலோர மணற்பரப்பில், கிழக்குப் பதிப்பகத்தார் சார்பில் நிகழ்ந்த “அனுமன் வார்ப்பும் வனப்பும்” என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடந்தேறியது. புத்தக அசிரியர், “இணையத் தமிழ் ஆசான்”, “மரபுக் […]

இன்டெர்னெட் டொமைன் பெயர்களைப் பதிவு செய்யும் முறைகளை மேற்பார்வையிட்டு முறைப்படுத்தும் அமைப்பான ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) தற்போது அதன் சட்டதிட்டங்களில் சில மாறுதல்களைச் செய்திருக்கின்றது. அதன்படி உங்கள் டொமைன் பெயரை ஒரு பதிவாளரிடமிருந்து (Registrar) […]

WordPress ஒரு சிறப்பான வலைப்பதிவு மென்பொருள் நிரல். பி.எச்.பி மற்றும் மை-எஸ்க்யூஎல் (PHP & MySql) போன்ற திறமூல மென்கலன்களைக் கொண்டு இயங்குவது. முழுவதும் இலவசமாகக் கிடைக்கும் இந்த இயற்பொதி முழுவதுமாக வளர்ந்து 1.5 என்ற திறனிலக்கை எட்டியுள்ளது. ப்ளாக்கர் போன்ற […]

என் நண்பரொருவர் தன் வலைப்பூவில் ஒரு புகைப் படத்தை இன்னொரு வலைத் தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தார். அதில் ஒரு சைக்கிள் போட்டி வீரரின் படம் இருந்தது. அவருடைய கைத் தசைகள் முறுக்கேறி நிற்பதைத் துல்லியமாக அந்தப் படம் காண்பித்தது. அந்தப் படத்தை […]

இந்த வருடத்திய குடியரசு தினத்தன்று எனக்கு ஒரு புதிய அனுபவம்! சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு (!) ஆற்றவேண்டும் என்று அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஸ்வாமிஜி என்னிடம் ஒரு அன்புக் கட்டளையிட்டார். […]