சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.
வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!
சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!
அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது – அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!
மனதை விரித்தால் மனித நேயம் வளரும்!
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: பிப் 12th, 2008. 2 மறுமொழிகள்.
உலகம் போற்றும் ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் என்பவர் வக்கிரம் பிடித்து அலைகிறார். இந்தத் தள்ளாத வயதிலும் இந்து மதத்தை இழிவு படுத்தி, தன் இஸ்லாமிய அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார். அதையும் பல கோடி இந்துக்கள் பெட்டைகள்போல் சகித்துக் கொண்டு அவரைப் போற்றி வருகின்றனர். சசின் தெந்துல்கர் அவரிடம்போய் ஒரு ஓவியத்தை என்னமோ பெருதற்கறிய பேறுபோல் பெற்றுகொள்கிறார்.
அப்படி என்னதான் அவர் வரைந்தார் என்று கேட்கிறீர்களா? இதோ இந்த வீடியோ தொகுப்பைப் பாருங்கள். உண்மையான இந்தியன் எவருக்கும் இரத்தம் கொதிக்கும் என்பது திண்ணம்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
அவருக்கு கேரள அரசு ராஜா ரவி வர்மா விருது வேறு கொடுக்கப் போகிறதாம். இதைவிட வெட்கக்கேடான விஷயம் ஏதும் நடக்கப் போவதில்லை!
ரவி வர்மா நம் கடவுட்களை எவ்வளவு அழகு பொங்க பக்தி ரசத்துடன் வரைந்திருக்கிறார்! அவர் பெயர் கொண்ட விருதை லட்சுமியையும், சீதையையும், துர்க்கையையும் நிர்வாணமாகவும் மிருகங்களுடன் புணர்வது போலவும் வரைந்து தன் வக்கிர உணர்வுகளுக்குத் தீனி யிட்டிருக்கும் ஒரு மனம் பிறழ்ந்த ஜந்துவுக்கு கொடுக்கப் போகிறதாம் கேரள அரசு. இது எதற்காக? எல்லாம் சிறுபான்மையினர் ஓட்டுக்காகத்தான்!
ஆனால் ராஜா ரவிவர்மா விருதுக்கு ஓவியர் எம்.எஃப். ஹூசைனை தேர்வு செய்ததை வாபஸ் பெற வேண்டும் என்று மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கேரள அரசுக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
இடதுசாரிகள் ஆதரவாளர் என்ற போதிலும் அதற்காக கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஆதரிக்க முடியாது. எம்.எஃப். ஹூசைனுக்கு விருது வழங்கும் முடிவு சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் செயல் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இந்துக் கடவுள்களை ஆபாசமாக சித்திரிக்கும் ஹூசைனுக்கு ராஜா ரவி வர்மா விருது வழங்கக் கூடாது என்று பாஜக, பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்புகள் கோரின. இதனிடையே, ஹூசைனுக்கு ராஜா ரவிவர்மா விருதை கேரள அரசு வழங்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சார்ந்த வகை: ஹிந்து மதம் :: நாள்: செப் 16th, 2007. 7 மறுமொழிகள்.
பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வாசித்தேன். அதன் சுட்டி இதோ.
இது தொடர்புடைய இன்னொரு சர்ச்சை பற்றி இங்கே படிக்கலாம்.
யூஸஃப் யோஹண்ணா மதம் மாறியது ஒரு பெரிய செய்தி அல்ல. இத்தனைநாள் தாக்குப் பிடித்ததே பெரிது. அதிருக்கட்டும். சில மாதங்களுக்குமுன் அவருடைய சொகுசு கார் ஒன்று (பல லட்சங்கள் மதிப்புள்ளது) லாஹூர் நகரின் முக்கிய வீதியில் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் யூஸஃப் புகார் ஏதும் கொடுக்கவில்லை. "ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. எல்லாம் சரி" என்று மழுப்பிவிட்டாராம். ஏதோ "பாதாள லோகம்" தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்கிறது இந்தத் தளம்.
மேல்விவரம் இங்கும் வாசிக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கலாம், அஸாருத்தீன், சங்கீதா பிஜ்லானி, கங்குலி, நக்மா…………………….
சரி, உங்களுக்கு ஒரு கேள்வி:-
ஏன் ஒரு சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை?
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 20th, 2005.
சமீபத்திய மறுமொழிகள்