திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஹைகோபி.
குறிச்சொற்கள்: அகரம், ஓம், hindu, omதிருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஹைகோபி.
குறிச்சொற்கள்: அகரம், ஓம், hindu, omஉலகம் போற்றும் ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் என்பவர் வக்கிரம் பிடித்து அலைகிறார். இந்தத் தள்ளாத வயதிலும் இந்து மதத்தை இழிவு படுத்தி, தன் இஸ்லாமிய அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார். அதையும் பல கோடி இந்துக்கள் பெட்டைகள்போல் சகித்துக் கொண்டு அவரைப் போற்றி வருகின்றனர். சசின் தெந்துல்கர் அவரிடம்போய் ஒரு ஓவியத்தை என்னமோ பெருதற்கறிய பேறுபோல் பெற்றுகொள்கிறார்.
அப்படி என்னதான் அவர் வரைந்தார் என்று கேட்கிறீர்களா? இதோ இந்த வீடியோ தொகுப்பைப் பாருங்கள். உண்மையான இந்தியன் எவருக்கும் இரத்தம் கொதிக்கும் என்பது திண்ணம்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
அவருக்கு கேரள அரசு ராஜா ரவி வர்மா விருது வேறு கொடுக்கப் போகிறதாம். இதைவிட வெட்கக்கேடான விஷயம் ஏதும் நடக்கப் போவதில்லை!
ரவி வர்மா நம் கடவுட்களை எவ்வளவு அழகு பொங்க பக்தி ரசத்துடன் வரைந்திருக்கிறார்! அவர் பெயர் கொண்ட விருதை லட்சுமியையும், சீதையையும், துர்க்கையையும் நிர்வாணமாகவும் மிருகங்களுடன் புணர்வது போலவும் வரைந்து தன் வக்கிர உணர்வுகளுக்குத் தீனி யிட்டிருக்கும் ஒரு மனம் பிறழ்ந்த ஜந்துவுக்கு கொடுக்கப் போகிறதாம் கேரள அரசு. இது எதற்காக? எல்லாம் சிறுபான்மையினர் ஓட்டுக்காகத்தான்!
ஆனால் ராஜா ரவிவர்மா விருதுக்கு ஓவியர் எம்.எஃப். ஹூசைனை தேர்வு செய்ததை வாபஸ் பெற வேண்டும் என்று மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கேரள அரசுக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
இடதுசாரிகள் ஆதரவாளர் என்ற போதிலும் அதற்காக கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஆதரிக்க முடியாது. எம்.எஃப். ஹூசைனுக்கு விருது வழங்கும் முடிவு சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் செயல் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இந்துக் கடவுள்களை ஆபாசமாக சித்திரிக்கும் ஹூசைனுக்கு ராஜா ரவி வர்மா விருது வழங்கக் கூடாது என்று பாஜக, பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்புகள் கோரின. இதனிடையே, ஹூசைனுக்கு ராஜா ரவிவர்மா விருதை கேரள அரசு வழங்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறிச்சொற்கள்: இந்து மதம், இஸ்லாம், ஹுசைன்தமிழகத்தில் அரசு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி நடத்த ஏற்பாடுகள் செய்து அதற்கான பள்ளிகளையும் நிறுவியிருக்கிறது. இன்னிலையில் கேரளா ஒருபடி முன்னே சென்று இந்த முறையை செவ்வனே நடத்திக் காட்டியிருக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், இந்த முயற்சிக்கு கேரள நம்பூதிரிகள் (பிராமண அர்ச்சகர்கள்) முனைப்புடன் முன்னின்று செயலாற்றி வருவதுதான்!!
கேரளாவிலுள்ள கல்பேட்டா என்ற ஊரில் இருக்கும் "பொங்கிணி தேவி" கோயிலில் ஆதிவாசி சிறுவர்கள் 14 பேர் உட்பட அனைத்து சாதிகளையும் சார்ந்த 25 சிறுவர்களுக்கு சமஸ்கிருத மொழி, வேதப் பயிற்சி, கோயில் ஆகமங்கள், மந்திரங்கள் ஆகியவை முறையாக போதிக்கப் படுகின்றன. பையனூர் ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையிலான பல அர்ச்சகர்கள் இச்சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்து சமய பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து வகுப்பினர்களின் பங்கேற்பு இன்றி நடைபெற இயலாது என்பதை நன்குணர்ந்து நம்பூதிரிகள் இந்த முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டிலும், பிராமண சங்கங்கள், அர்ச்சகர் கூட்டமைப்புக்கள் போன்றவை முன்னின்று தலித்துக்கள் உட்படஅனைத்து வகுப்பினருக்கும் வேதம், ஆகமம் முதலிய பயிற்சிகளை அளிக்க முன்வரவேண்டும். இதனைப் பெருமளவில் தமிழகமெங்கும் பரவலாக நடத்த வேண்டும். அரசுடன் கைகோர்த்து இத்தகைய இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் அவா!!
ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். '200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்' என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை' என்றனர்.
ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.
இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.
(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)
நன்றி: "விஜய பாரதம்" வார இதழ்.
சமீபத்திய மறுமொழிகள்