துளித்துளி

உண்மையும் பொய்யே
உடல்வெறும் பையே!

உலகம்

1

நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.

Pawns of peace

அது என்ன "அமைதிக்கான அடமானங்கள்"? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது "Pawns of Peace" என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!

"Pawn" என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:

  1. அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது
  2. செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர்
  3. பிறரால் "பகடைக்காயாக" பயன்படுத்தப்படுதல்

மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் "pawn" என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . 1 மறுமொழி#

1

இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:-

சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தார். முதல்வரின் "கான்வாய்' 9.30 மணிக்கு கோட்டைக்கு வந்தது. நுழைவாயிலுக்குள் நுழையும் போது, அருகில் உள்ள பூங்காவில் இருந்து முதியவர் ஒருவர் ஓடி வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரிப்பதற்குள், "தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள், முதல்வரிடம் புகார் கொடுத்தும் லஞ்சம் கேட்கிறார்கள்' என்று கத்தியபடியே கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, முதல்வரின் கார் மீது வீசினார். காற்றில் பறந்த வேட்டி, பாதுகாப்பு காரின் மீது விழுந்தது.

முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை பிடித்து, துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.கே., நகரில் வசிப்பவர். பெயர் நாராயணன்(64); விவசாயி. இவருக்கு 60 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்திற்கு பட்டா கேட்டு, இருபது வருடங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா தருவோம் என்று அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், இவரது மகள் வாங்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்துகிறார். முதல்வரிடம் புகார் கொடுத்தும், பட்டா கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இப்படி செய்து விட்டேன்' என்று தெரிவித்தார். ண்எனினும், கோட்டை பாதுகாப்பில் "குறட்டை' விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் யார் யார், என்ற விவரங்களை சேகரித்துள்ளனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக போலீசார் விசாரித்து வருகின்றனர்

இதை வாசிக்கும்போது தெரியவரும் ஒரு விசனத்துக்குறிய உணமையைப் பார்த்தீர்களா:
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . 1 மறுமொழி#

3

அமேரிக்காவில் எதைத் தொட்டாலும் "இது சீனாவில் செய்யப்பட்டது" என்று பறை சாற்றும் வாசகத்தைக் காணலாம். சென்ற ஆண்டு மட்டும் செஞ்சீனா சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து அமேரிக்காவுக்கு (U.S) ஏற்றுமதி செய்திருக்கிறது! ஆனால் சீனா அமேரிகாவிலிருந்து பெற்ற வணிக மதிப்பு சுமார் 60 பில்லியன் டாலர் மட்டுமே!

ஆனால் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் மதிப்புப்படிப் பார்த்தால், 21% அமேரிகாவில்தான் தயாரிக்கப்படுகிறது சீனாவின் பங்கு 8% தான்!

அமேரிக்க மண்ணில் தயாராகும் பொருட்களில் சில:

விமானம் கார் ஆயத்த ஆடைசீஸ் மதுபானம்கோழி தபால் தலை பத்திரிக்கை பற்பசை அந்தரங்கம் மின்னியந்திரம் வேதியல் மருந்து எஃகு

நன்றி : "ஃபோர்ப்ஸ்" வலைத்தளம்.

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . 3 மறுமொழிகள்#

0

மறக்காமலிருக்க!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

பயங்கரவாத உணர்வுகளைக் களைவோம்!

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . மறுமொழி இடுக#

0

ப்ரூனை சுல்தான்உலகின் மிகப்பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது.

ப்ரூனை வரைபடம்ஆனால் சமீபத்தில் அவர் மீது நடந்து வரும் ஒரு நீதிமன்ற வழக்கின் தொடர்ச்சியாக அந்த நீதிமன்றம் அவரது செலவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆடம்பரங்கள் உலகத்திலுள்ள எந்த பணக்கரரும் கனவில் கூட என்ணிப்பார்க்க இயலாது! Indulgence at its extreme!

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்படத் துறையைச் சார்ந்த நடிகைகளை வரவழைத்து அவர்களைப் "பாராட்டி", "மனம் குளிர நனைத்து அனுப்புவது" சுல்தானின் பொழுதுபோக்கு திருவிளையாடுகளில் ஒன்று. இந்த பட்டியலில் பிரபல பாப் பாடகிகள் மற்றும் முன்னணி மாடல் அழகிகளும் அடங்குவார்கள்.

இந்த விவரங்கள் வெளிவந்த காரணம் அவருக்கும் அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அவரது சகோதரர் இளவரசர் ஜெஃப்ரிக்கும் இடையே நடந்து வரும் உலகப் பிரசித்திபெற்ற குடும்ப வழக்குதான்!

இவருடைய ஆடம்பரங்களை சற்றே எட்டிப் பார்ப்போம்! :roll:
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: உலகம் :: நாள்: . மறுமொழி இடுக#