துளித்துளி

உங்கள் மீது வெளிச்சம் விழ விழ, உங்கள் நிழலும் அதிக கருப்பாகத்தான் தெரியும்

இணையம்

About internet and world wide web.

0

Do a barrel roll in googleஇப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே "கூகிள் செய்வது" என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது "ஸெராக்ஸ்" செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand name becoming generic.

சரி, இப்போது "Do a barrel roll" என்னும் சொற்றொடரை கூகிளில் தேடுங்கள். என்ன ஆகிறது உங்கள் புரௌசர் (உலாவி)? ஒருமுறை குட்டிக்கரணம் அடிக்கிறதா? இல்லையென்றால் நீங்கள் இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பாவிப்பவராக இருக்கவேண்டும்; அல்லது அரதப் பழசான உலாவியை பயன்படுத்துபவராக இருக்கவேண்டும்! (கூகிள் குரோம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்திப் பாருங்கள்)

இப்போது "tilt" அல்லது "askew" என்னும் சொற்களை கூகிளில் தேடுங்கள். உங்கள் புரௌசர் சற்றே வலப்புறம் நாணிக் கோணிக்கொண்டு நிற்கிறதா?

அடுத்ததாக "ascii art" என்னும் சொல்லைத் தேடுங்கள்? என்ன ஆகிறது?

சார்ந்த வகை: இணையம் :: நாள்: . மறுமொழி இடுக#

2

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google's aggregator service).

இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே அணிவகுத்து நிற்கும் அனைத்துச் செய்திகளும்!

இதோ என் தமிழ்மணம்:- (தட்டினால் விரியும் படம் கண்டு, பின் அம்பின் துணையுடன் திரும்புக!)

கூகிள் திரட்டி

சார்ந்த வகை: இணையம் :: நாள்: . 2 மறுமொழிகள்#

2

கணிதமேதை வீட்டுத் திண்ணைஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது. மேலும் வாசிக்க…