‘இசை’ வகைசார்ந்த இடுகைகள்

பிரியங்காவின் அட்டகாசமான குரல் வளம்!

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

என் அபிமான பாடகி செல்வி. பிரியங்கா தன் தயக்கத்தை விட்டுப் பாடிய இந்த நிகழச்சியை (வடு மாங்காயை!) ரசியுங்கள்!

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 406 முறை) ::

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா!

இசை :: 5 மறுமொழிகள் »

என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”

ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!

Priyankaஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!

அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?

இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.

என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,
:: (பார்வை 483 முறை) ::

ஜிஎன்பி நூற்றாண்டு விழா

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

GNB practicing at homeஇந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.

மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.

இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.

இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,
:: (பார்வை 389 முறை) ::

எல்லாம் இன்ப மயம்

இசை :: 3 மறுமொழிகள் »

என் சிறுவயதில் கீழ்வேளுர் வால்வ் ரேடியோவின் மூலம் கேட்ட காலத்திலிருந்து நாளதுவரை இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம்.எல். வசந்தகுமாரியின் கம்பீரமான கார்வைகளும் அதிர் வேட்டு பிருகாக்களும், அதற்கு முழு contrast-ஆக மென்மைமிகு பி.லீலாவின் ஜலஜலவென்று நீரோடைபோல் ஓடிவரும் ஸ்வரக் கோர்வைகளும் இணைந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இசை வெள்ளம் இது!

Ellam Inba Mayamஅந்தப் படத்தைக் காணும் வரையில் இது ஒரு நாட்டியப் பாடல் என்றே எண்ணியிருந்தேன். படம்: மணமகள். நடிப்பு: ”நாட்டியப் பேரொளி” பத்மினி மற்றும் அவருடைய சகோதரி லலிதா. இவர்களோடு இன்னொரு சகோதரியான ராகினியும் இணைத்து அக்காலத்தில் “திருவிதாங்கூர் சகோதரிகள்” என்று பிரபலமானவர்கள்.

நடுவில் பாட்டு வாத்தியாராக அமர்ந்திருப்பவர் பிரபல குணசித்திர நடிகர் டி.எஸ். பாலையா. இந்தப் படத்தில் அவர் வில்லனாக வருகிறார்.

இந்தப் பாடலின் ராகம்: சிம்மேந்திர மத்தியமம்.

இந்தப் பாடல் வரும் காட்சியை டிவியிலிருந்து பதிவு செய்து யாரோ ஒரு புண்ணிவான் Youtube-ல் வலையேற்றியிருந்தார். அதை இதன்கீழ் இணைத்திருந்தேன். ஆனால் அந்தப் பதிவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டனர் – ஒரு மகாபாவி எதிர்ப்பு தெரிவித்ததால்! Spoilsports!

ஆனால், இன்னொருவர் அதை நிச்சயம் வலையேற்றுவார். அதுவரை பொறுத்திருப்போம்.

கிடைத்துவிட்டது! (நன்றி, ஆர்.வி.ராஜு.)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Ellam Inba Mayam

அந்தப் பாடலின் ஒலி வடிவை இங்கே கேட்கலாம்:

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

இதே பாடலை திருமதி நித்யாஸ்ரீயும் இன்னொரு பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பதின் ஒளிப்பதிவை இதன்கீழ் காணலாம்.

ஆனல் எம்.எல்.வியின் கம்பீரமும், சிம்மேந்திர மத்தியம ராகத்திற்கு வேண்டிய காத்திரமும் நித்யாஸ்ரீயின் குரலில் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள்!
(உழைத்துப் பாடியிருக்கிறார்கள். ஆனால் குழைவு மிஸ்ஸிங்!)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Ellam Inba Mayam - by NityaSri

குறிச்சொற்கள்: , , , , , , , , ,
:: (பார்வை 1371 முறை) ::

ஜிஎன்பியின் காம்போதி விருத்தம்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

மறைந்த கர்நாடக இசை மாமேதை ஜிஎன்பி அவர்கள் சகுந்தலை திரைப்படத்தில் பாடியுள்ள நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இந்த காம்போதி ராக விருத்தத்தைக் கேட்டு மகிழுங்கள்!

இந்தத் திரைப்படத்தில் ஜிஎன்பி அவர்களுடைய குரல் வளம் முழுதும் வெளிப்படாமல் தடுக்க நிகழ்ந்த பல சதிகளைக் கடந்து, இந்த ஒரு பாடலிலேயே அவர் தன் இசையின் வீச்சை வெளிக்கொணர்ந்திருப்பதைக் காணலாம்.


YouTube - வீடியோவைக் காணுங்கள் GNB

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1024 முறை) ::

துன்பம் நேர்கையில்…

இசை :: 4 மறுமொழிகள் »

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. "ஓர் இரவு" என்ற பழைய படத்தில், இனிய கர்நாடக இசையில் தேஷ் ராகத்தில்) மெட்டமைக்கப்பட்டு, எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இசை அமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். திரையில் தோன்றியவர்கள் நாகேஸ்வர ராவ், லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி்).
(இந்த வீடியோவை மோசர் பியர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்ததால் யூடியூபிலிருந்து நீக்கி விட்டனர்)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Thunbam Nergaiyil

இந்தப் பாடலின் ஆடியோவை மட்டும் கேட்டு இன்புற விரும்பினால் இந்த சுட்டிக்குச் செல்க.

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1148 முறை) ::

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

MMDandapanidesikar தேசிகர் தேன்குரல் தேசிகர்

எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 – 1972)

பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். 'பட்டினத்தார்' தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த 'நந்தனார்' படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), 'முதல் தேதி' (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், "ஜகஜனனீ ", "என் அப்பன் அல்லவோ…", "தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்", "வழிமறித்து நிற்குதே", "காண வேண்டாமா" முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் தீர்க்க மாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?"

அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகாளையும் அவர் புனைந்துள்ளர்.

தென்றல் இணைய இதழில் "ஆதி" அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் – குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண 'இசை விருந்து' இருக்க வேண்டும். இதற்கான 'இயக்கம்' வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

… இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் – இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, "ஏன் முடிக்கிறார்?" என்று தோன்றியது.

"நந்தனார்" மற்றும் "திருமழிசை ஆழ்வார்" திரைப்படங்களில் தேசிகரின் பாடல்களைக் கேட்க இங்கே செல்லுங்கள்:-

[1] "சங்கீத யோகம்" – தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு – தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 948 முறை) ::

கர்நாடக இசையும் தமிழிசையும்!

இசை :: 4 மறுமொழிகள் »

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 979 முறை) ::

இனிமே நாங்கதான்!

இசை :: 2 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 890 முறை) ::

மலரே மௌனமா….!

இசை :: 5 மறுமொழிகள் »

"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!

வேறென்ன வேண்டும்!

நீங்களும் சிறிது ரசிக்கலாமே!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,
:: (பார்வை 885 முறை) ::

 

2-ல் இது-112
WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 98 access attempts in the last 7 days.