சிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீனிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் கொடுக்கிறார் என்றார்கள். என் ஃபேவரிட் ராஜாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டவர் என்பதால் பி.பி.ஸ்ரீனிவாஸ் எனக்கு பிடிக்காத பாடகராகத்தான் வெகு நாட்கள் இருந்தார்.
ஆனால் அந்த குழைவான bass குரலினிமையை ரசிப்பதை எவ்வளவு நாட்கள் தவிர்க்க இயலும்? "அடுத்த வீட்டுப் பெண்" பாடல்கள்தான் முதன் முதலில் எனக்குப் பிடித்தவை – கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால். சினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமல் கிராமத்தில் வளர்ந்த எனக்கு எங்கள் வீட்டில் இருந்த Tesla ரேடியோ தான் ஒரே இசை ஊற்று. அதன் மூலம் என் செவிகளை வந்தடைந்தவை பல வரலாறு படைத்த பாடல்கள். "காலங்களில் அவள் வசந்தம்", "நிலவே என்னிடம் நெருங்காதே" போன்ற தேனில் தோய்ந்த பாடல்களுக்கு மயங்கவில்லையென்றால் நான் ஒரு ஜடம்தான்!
லேசான nasal குரல் அவருடையது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.
ஜெமினி கணேசன் தவிர பாலாஜி, முத்துராமன் போன்ற பலருக்கு பின்னணி பாடியிருக்கிறார் பி.பி.எஸ். சத்யனுக்கு குரல் கொடுத்த "அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் திருடாதே என்ற படத்தில் சரோஜாதேவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு வாயசைக்கும் "என்னருகே நீ இருந்தால்" என்னும் பாடல் இவர் பாடியதுதான். அதன் வீடியோவைக் காண இங்கே கிளிக்குங்கள் (It will open on an overlay).
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: ஏப் 14th, 2013. மறுமொழி இடுக.
குழந்தை கடத்தல்
சென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று விட்டாள். இது குறித்து போலீசில் அவர்கள் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை தூக்கிச் சென்ற அந்த மர்ம பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அந்தப் பெண்தான் குழந்தையை திருடியவள் என்று அடையாளம் காட்டப்பட்டாள்.
குழந்தை மீட்பு
இதற்கிடையே ஆவடியில் இருந்து சென்னை வந்த மின்சார ரெயிலில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை பார்த்து விட்டு அது தங்களுடைய குழந்தை தான் என பெற்றோர் உறுதி செய்தனர்.
இந்நிலையில் குழந்தையை திருடிய பெண்ணிட்ம் ஒரு திடீர் குழந்தையைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் கொடுக்க, அவளும் பிடிபட்டாள்; வீடியோ அடையாளம் உறுதி செய்யப்பட்டு அவளிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்டது.
மரபணு சோதனை
இப்போது கைவசமிருக்கும் இரண்டு குழந்தைகளிடையே எந்தக் குழந்தை அவர்களுடையது என்பதை கண்டு பிடிக்க மரபணு சோதனை (DNA genetic fingerprinting) நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான அனுமதி வேணடி நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர்.
யாருடைய சாயல்?
சாதரணமாக பிறந்த குழந்தையை பார்க்க வரும் பெரிசுகள் தவறாமல் உதிர்க்கும் கருத்துக்கள் அக்குழந்தை யாரை "உரித்து" வைத்திருக்கிறது என்பது பற்றித்தான். "அப்படியே அம்மா மூஞ்சியையே உரிச்சு வெச்சிருக்கு பாரு" என்று தாய் வழி உறவுகளும், "நம்ப ராஜு மாதிரியே பெரிய கண்ணு பாரு இந்த நொங்குக்கு" என்று தந்தையின் வீட்டு பெரிசுகளும் ("ம்க்கும், அந்த மேட்டு நெத்தியை கொள்ளாமல் இருந்தால் சரிதான்" – இது கிராஸ் டாக்!), மற்றும் அத்தை, மாமாக்களின் அங்க அடையாளங்களை அந்த பிஞ்சுக் குழந்தையின் மேல் ஏற்றி, குழந்தையை தங்கள் குடும்பத்துடன் இணைத்து ஏற்றுக்கொண்டு விடுவது தான் நம் மரபு.
சில நாட்கள் சென்ற பின் அக்கம் பக்கத்தார் குழந்தை வந்து பார்த்து விட்டு "பையன் அப்பன் மாதிரியே ஜொள்ளு விடரான் பாரு" என்று அந்த மூத்த ஜொள்ளனை ஓரக் கண்ணால் பார்த்தபடி கிசுகிசு கமெண்டுகளும் அரங்கேறும்!
மேலை நாடுகளில் தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு Smart Tag மூலம் மாறி விடாதபடி இணைப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். கண்காணிப்பும் பலமாக இருக்கும். அது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இங்குள்ள மருத்துவ மனைகளிலும் அமையப்போவது எப்போது!
யாருக்கு அப்பன் யாரோ!
இன்னொருவர் மூலம் தனக்குப் பிறந்த குழந்தையை அது தன் கணவன் மூலம்தான் உண்டானது என்று நம்ப வைத்து வளர்ப்பதை "Paternity Fraud" என்று அழைக்கிறார்கள். “Maternity is always certain, paternity is a matter of inference” என்ற legal maxim அடிப்படையில் தாலி கட்டிய கணவன் தந்தை எனும் பட்டம் பெறுகிறான், அதற்கு அவன் chromosome தானம் செய்யாமல் இருந்தால் கூட! இது கொடுமைதான், என்ன செய்வது! இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க மரபணு சோதனைதான் சரியான வழி என்று பலர் வாதிடுகிறார்கள். ஆனால் பல நீதிபதிகள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. இதன் விளைவு – தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்" கதைதான்!
ஆனால் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக எண்ணிக் கொண்டு ஒரு தாய் அதனை பால் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? சிறிது வளர்ந்த பிறகுதான் வண்டவாளம் பல்லை இளிக்கும். அதுவரை குயில் குஞ்சுகளை தனதாக வளர்க்கும் காக்கையின் நிலைதான் அந்த தாய்க்கு!
அப்பா டக்கர் குயிலார்!
சார்ந்த வகை: இது எப்படி இருக்கு :: நாள்: நவ 24th, 2012. மறுமொழி இடுக.
ஊனம் உடலிலா, உள்ளத்திலா! ஊக்கமின்மையே ஊனம்!
சார்ந்த வகை: நல்வாழ்வு :: நாள்: மே 19th, 2011. 3 மறுமொழிகள்.

"சூப்பர் சிங்கர் ஜூனியரா"க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா தற்போது "அவன் இவன்" திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு சிறந்த மெலடி சாங் பாடியிருக்கிறார். அதைக் கேளுங்கள்:
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
சார்ந்த வகை: இசை :: நாள்: ஏப் 24th, 2011. 2 மறுமொழிகள்.
என் அபிமான பாடகி செல்வி. பிரியங்கா தன் தயக்கத்தை விட்டுப் பாடிய இந்த நிகழச்சியை (வடு மாங்காயை!) ரசியுங்கள்!
http://www.youtube.com/watch?v=twhFWfdlJI8
சார்ந்த வகை: இசை :: நாள்: ஜன 9th, 2010. 3 மறுமொழிகள்.
என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”
ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!
ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!
அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?
இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.
என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 28th, 2009. 10 மறுமொழிகள்.
இந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.
மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.
இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.
இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: டிச 16th, 2009. 1 மறுமொழி.


சமீபத்திய மறுமொழிகள்