பிரியங்காவின் அட்டகாசமான குரல் வளம்!

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

என் அபிமான பாடகி செல்வி. பிரியங்கா தன் தயக்கத்தை விட்டுப் பாடிய இந்த நிகழச்சியை (வடு மாங்காயை!) ரசியுங்கள்!

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 221 முறை) ::

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா!

இசை :: மறுமொழி ஒன்று »

என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”

ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!

Priyankaஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!

அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?

இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.

என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,
:: (பார்வை 292 முறை) ::

ஜிஎன்பி நூற்றாண்டு விழா

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

GNB practicing at homeஇந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.

மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.

இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (SAFE) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.

இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,
:: (பார்வை 286 முறை) ::

இப்படியும் சில வித்துவான்கள்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

எம்.எஸ்.சௌந்தரம்எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் கர்நாடக இசையைப் பற்றி மட்டும் இல்லாமல் மனித நேயம், அக்கால வாழ்க்கையின் கூறுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 590 முறை) ::

வியவஸ்தை இல்லாதவர்கள்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

மூட்டுவலிக்குக் கூட இப்படித்தான் படம் போட வேண்டுமா!

மூட்டு வலிக் காட்சி

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 846 முறை) ::

மெல்ல மறையும் பின்னல் அழகு!

சமூகம் :: 2 மறுமொழிகள் »

tossed-up-hairஎங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். "ஆத்தாடி மாரியம்மா!" என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!

hairstyle

பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, "இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!"

பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!

பின்னல் போய் வந்தது "போனி டெயில்". பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!

உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!

ப‌டிய‌ வாரிய‌ த‌லை
முத்தில்லா கொலுசு
ஒற்றைப் பின்னல்
கை நிறைய‌ வ‌ளைய‌ல்
க‌ட்டிக் கொள்ள‌ சேலை
சாயம் இல்லா உதடு
மை இல்லா கண்கள்
நகம் இல்லா விரல்கள்
க‌வ‌லை இல்லா சிரிப்பு

பின்னல் அழகுறும் தமிழ்நாட்டுப் பெண்கள்

நல்லெண்ணெய் தேய்த்து விட்டு
நன்றாக ஊற விட்டு
சிகைக்காய்த் தூளெடுத்து
சிகையெங்கும் பரவ விட்டு
வாசனைப் பொடி போட்டு
வாகாக அலசி விட்டு
சாம்பிராணிப் புகை போட்டு
சந்தனம் போல் மணக்க விட்டு
பாசமுடன் விரல்களினால்
பட்டுப் போல் கோதி விட்டு
அழகாக வகிடெடுத்து
அளவாகப் பிரித்தெடுத்து
அம்மா இடும் பின்னலில்தான்
அம்மம்மா எத்தனை ரகம்!

ஆயிரங் கால் பின்னல்
அழகான ஒற்றைப் பின்னல்
பள்ளிக் கென்றே பக்குவமாய்
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்
பின்னாலே பாலம் கட்டும்
பாரமில்லா சைக்கிள் பின்னல்
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த
குஞ்சலம் வைத்த பின்னல்…

நன்றி: கவிநயா

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,
:: (பார்வை 978 முறை) ::

இவ்வளவுதான் உலகம்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

புரிந்துகொள் மகனே!

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 857 முறை) ::

இலவசங்களின் மறுபக்கம்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு

(நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.)

உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச "டிவி', காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.

இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.

சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.

மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. "உழைத் தால் தான் உணவு' என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.

குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு "டிவி' தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு "டிவி'க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 925 முறை) ::

தகடுகள் ஜாக்கிறதை!

கணினி :: 3 மறுமொழிகள் »

hard-diskநேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?

எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. (ஊரெல்லாம் இதைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசுவார்கள்!)

சரி, அந்த பலான கிளுகிளு படங்கள் பப்ளிக்காக வெளியே தெரிய வந்தது எப்படி என்று தினந்தோறும் ”நம்பர் ஒன்” நாளிதழைப் படித்து அறிவைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருக்கும் நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

எல்லாம் அந்த “வண்தகடு” செய்த சேஷ்டைதான்! அதுதான் சார் ஹார்டு டிஸ்க்.

பலான கம்ப்யூட்டர் வாத்தியாருடைய “லாப்டாப்” கணினிக்குள் வைரஸ் புகுந்துவிட்டது. இவர் பண்ணும் ஜல்சாக்களால் பொறாமை கொண்ட எவனோ வைரஸ் அனுபிவிட்டான் என்கிறார் இவர். அந்த லாப்டாப்பின் பழுதை நீக்க திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கணினி ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் வைரைஸை நீக்கியபின் வண்தகட்டினுள் நுழைந்து பார்த்தால், “தோடா” என்று மூக்கில் விரல் வைக்குமளவிற்கு பலான படங்கள் – பல போஸ்களின் (வத்தியார்தான்) பலபல கிளுகிளு இளம் பெண்களுடன் – கொட்டிக் கிடக்கின்றன.

அவ்வளவுதான். மேட்டர் பரவலாக மென்தகடுகள் (CD) மற்றும் செல்ஃபோன் கார்டுகள் மூலம் பல்கிப் பரவத் தொடங்கி விட்டன. ஆசாமி இப்போது கைது!

அது கிடக்கட்டும். இப்போது என் இடுகையின் மேட்டர் என்னவென்றால், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம் அந்தரங்க விஷயங்களை அடுத்தவர் கண்ணுக்கும் கருத்துக்கும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதுதான்.

ஒரு பெண் தன் கணவனிடம் வாழாமல் தனியாக இருந்தார். மணமுறிவுக்கு ஒப்பாமல் கணவனிடமிருந்து ஒருகணிசமான துகையைக் கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவளுடைய செல்ஃபோனை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்தார். அதில் இருந்த கார்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய குறிப்புகள், பான் கார்டு விவரங்கள் இன்னும் சில முக்கிய தரவுகள் பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் சிலரோடு சேர்ந்து இருக்கும் ஃபோட்டோக்களும் இருந்தன. அந்த ரிப்பேர் கடையின் முதலாளி கணவனுக்கு வேண்டியவர். அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பெண்ணின் வழக்கு தோற்றுவிட்டது.

உங்கள் கணிப்பில் ஒன்று முக்கிய விவரமாகத் தோன்றா விட்டாலும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாமல்லவா. அதனால் செல் ஃபோனை பிறரிடம் கொடுப்பதற்கு முன்னால் அதிலுள்ள மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுங்கள். அதற்கு முன் ஃபோன் மெமரியிலுள்ள அனைத்து சமாசாரங்களையும் கார்டுக்கு மாற்றிவிடுங்கள். அதன்பின் ஃபோன் மெமரியை சுத்தம் செய்துவிடுங்கள். நிறைய சேமித்து வைத்திருந்தால் அனைத்தையும் உங்கள் கணினியில் back-up செய்துவிடுங்கள்.

சரி. கணிணியின் Hard disk-ல் முக்கிய கோப்புக்களை (files) நீக்கிவிட்டால் (delete) யாரும் பார்க்க முடியாதே என்கிறீர்களா? ஐயா, நீங்கள் டெலீட் செய்த கோப்புகள் உணமையில் அழிக்கப் படுவதில்லை. அவற்றைப் பற்றிய விவரம் மட்டும் வண் தகட்டின் அட்டவணையிலிருந்து (index) நீக்கப் படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் தகட்டின் அந்த பிரதேசங்களில் வேறு கோப்பு எழுதப்படும் வரை அவை அங்கே பத்திரமாக இருக்கும். இதனால் நீக்கியவற்றை சுலபமாக மீள் கொணரலாம் (Undelete).

தவிர, பழுதான ஹார்டு டிஸ்கிலிருந்து கோப்புக்களை மீட்பதற்காக சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன (data recovery software). இவற்றின் துணை கொண்டு தகடுகளில் ஆழப் பதிந்திருக்கும் 0-களையும் 1-களையும் வெளிக் கொணர இயலும்.

ஆகையால் மகா ஜனங்களே, உங்கள் வண் தகடு பழுதாகிப் போனால், அல்லது அது தேவையில்லை என்று எண்ணினால், யாரிடமும் தானம் கொடுக்காதீர்கள்; பழைய சாமான் வாங்குபவரிடம் போடாதீர்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு சுருட்டிக் கொண்டு கிடக்குமோ! ஹார்டு டிஸ்கை ஒரு நல்ல சுத்தியல் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். மென் தகடுகள், மெமரி கார்டுகளுக்கும் இதே மரண அடி முறைதான் சிறந்தது.

அமேரிக்க தற்காப்பு அமைச்சக அலுவலங்களில் (Pentagon) வண் தகடுகளை நூடில்ஸ் போல் shredding செய்துவிடுவார்களாம்.

மைக்ரோசாஃப்டின் இந்த வலைப் பக்கத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாக பல அறிவுரைகளை எழுதியிருக்கிறார்கள். படியுங்கள்.

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 1642 முறை) ::

இன்று தந்தையர் தினம்

மனித நேயம் :: 2 மறுமொழிகள் »

தந்தையின் பாசம்!

Happy Fathers Day

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் …

(கவிதைக்கு நன்றி: அமுதா)

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 1107 முறை) ::

 

21-ல் இது-112345»...கடைசி »
WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in