சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.
வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!
சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!
அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது – அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!
மனதை விரித்தால் மனித நேயம் வளரும்!
சார்ந்த வகை: மனித மனம் :: நாள்: பிப் 12th, 2008. 2 மறுமொழிகள்.
திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஹைகோபி.
சார்ந்த வகை: ஹிந்து மதம் :: நாள்: ஜன 2nd, 2008. 1 மறுமொழி.
ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். '200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்' என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை' என்றனர்.
ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.
இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.
(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)
நன்றி: "விஜய பாரதம்" வார இதழ்.
சார்ந்த வகை: ஹிந்து மதம் :: நாள்: ஜூலை 24th, 2007. 5 மறுமொழிகள்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-
மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான "பாலி"யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:
இப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) – ![]()
இந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் "குணவான்", "சத்தியவான்" என்றூ முடியும்! ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் "சுகர்ண புத்திரி"!
இது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், "கருடா ஏர்வேஸ்". மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, "நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்கள், "நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது" என்று பதிலுரைத்தனர்!
சார்ந்த வகை: பொது :: நாள்: மே 11th, 2007. மறுமொழி இடுக.








சமீபத்திய மறுமொழிகள்