தகடுகள் ஜாக்கிறதை!

hard-diskநேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?

எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. (ஊரெல்லாம் இதைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசுவார்கள்!)

சரி, அந்த பலான கிளுகிளு படங்கள் பப்ளிக்காக வெளியே தெரிய வந்தது எப்படி என்று தினந்தோறும் ”நம்பர் ஒன்” நாளிதழைப் படித்து அறிவைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருக்கும் நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

எல்லாம் அந்த “வண்தகடு” செய்த சேஷ்டைதான்! அதுதான் சார் ஹார்டு டிஸ்க்.

பலான கம்ப்யூட்டர் வாத்தியாருடைய “லாப்டாப்” கணினிக்குள் வைரஸ் புகுந்துவிட்டது. இவர் பண்ணும் ஜல்சாக்களால் பொறாமை கொண்ட எவனோ வைரஸ் அனுபிவிட்டான் என்கிறார் இவர். அந்த லாப்டாப்பின் பழுதை நீக்க திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கணினி ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் வைரைஸை நீக்கியபின் வண்தகட்டினுள் நுழைந்து பார்த்தால், “தோடா” என்று மூக்கில் விரல் வைக்குமளவிற்கு பலான படங்கள் – பல போஸ்களின் (வத்தியார்தான்) பலபல கிளுகிளு இளம் பெண்களுடன் – கொட்டிக் கிடக்கின்றன.

அவ்வளவுதான். மேட்டர் பரவலாக மென்தகடுகள் (CD) மற்றும் செல்ஃபோன் கார்டுகள் மூலம் பல்கிப் பரவத் தொடங்கி விட்டன. ஆசாமி இப்போது கைது!

அது கிடக்கட்டும். இப்போது என் இடுகையின் மேட்டர் என்னவென்றால், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம் அந்தரங்க விஷயங்களை அடுத்தவர் கண்ணுக்கும் கருத்துக்கும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதுதான்.

ஒரு பெண் தன் கணவனிடம் வாழாமல் தனியாக இருந்தார். மணமுறிவுக்கு ஒப்பாமல் கணவனிடமிருந்து ஒருகணிசமான துகையைக் கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவளுடைய செல்ஃபோனை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்தார். அதில் இருந்த கார்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய குறிப்புகள், பான் கார்டு விவரங்கள் இன்னும் சில முக்கிய தரவுகள் பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் சிலரோடு சேர்ந்து இருக்கும் ஃபோட்டோக்களும் இருந்தன. அந்த ரிப்பேர் கடையின் முதலாளி கணவனுக்கு வேண்டியவர். அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பெண்ணின் வழக்கு தோற்றுவிட்டது.

உங்கள் கணிப்பில் ஒன்று முக்கிய விவரமாகத் தோன்றா விட்டாலும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாமல்லவா. அதனால் செல் ஃபோனை பிறரிடம் கொடுப்பதற்கு முன்னால் அதிலுள்ள மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுங்கள். அதற்கு முன் ஃபோன் மெமரியிலுள்ள அனைத்து சமாசாரங்களையும் கார்டுக்கு மாற்றிவிடுங்கள். அதன்பின் ஃபோன் மெமரியை சுத்தம் செய்துவிடுங்கள். நிறைய சேமித்து வைத்திருந்தால் அனைத்தையும் உங்கள் கணினியில் back-up செய்துவிடுங்கள்.

சரி. கணிணியின் Hard disk-ல் முக்கிய கோப்புக்களை (files) நீக்கிவிட்டால் (delete) யாரும் பார்க்க முடியாதே என்கிறீர்களா? ஐயா, நீங்கள் டெலீட் செய்த கோப்புகள் உணமையில் அழிக்கப் படுவதில்லை. அவற்றைப் பற்றிய விவரம் மட்டும் வண் தகட்டின் அட்டவணையிலிருந்து (index) நீக்கப் படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் தகட்டின் அந்த பிரதேசங்களில் வேறு கோப்பு எழுதப்படும் வரை அவை அங்கே பத்திரமாக இருக்கும். இதனால் நீக்கியவற்றை சுலபமாக மீள் கொணரலாம் (Undelete).

தவிர, பழுதான ஹார்டு டிஸ்கிலிருந்து கோப்புக்களை மீட்பதற்காக சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன (data recovery software). இவற்றின் துணை கொண்டு தகடுகளில் ஆழப் பதிந்திருக்கும் 0-களையும் 1-களையும் வெளிக் கொணர இயலும்.

ஆகையால் மகா ஜனங்களே, உங்கள் வண் தகடு பழுதாகிப் போனால், அல்லது அது தேவையில்லை என்று எண்ணினால், யாரிடமும் தானம் கொடுக்காதீர்கள்; பழைய சாமான் வாங்குபவரிடம் போடாதீர்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு சுருட்டிக் கொண்டு கிடக்குமோ! ஹார்டு டிஸ்கை ஒரு நல்ல சுத்தியல் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். மென் தகடுகள், மெமரி கார்டுகளுக்கும் இதே மரண அடி முறைதான் சிறந்தது.

அமேரிக்க தற்காப்பு அமைச்சக அலுவலங்களில் (Pentagon) வண் தகடுகளை நூடில்ஸ் போல் shredding செய்துவிடுவார்களாம்.

மைக்ரோசாஃப்டின் இந்த வலைப் பக்கத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாக பல அறிவுரைகளை எழுதியிருக்கிறார்கள். படியுங்கள்.

7 Comments


  1. kilmana ungalukku pudikumo?


  2. கில்மா, அஜால்குஜால், ஜிகிர்தண்டா இதெல்லாம் பிடிக்காதவங்க யாருங்க!

Leave a Reply

Your email address will not be published.