துளித்துளி

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்ப்போம் உயிர் வளர்ப்போமே
— திருமூலர்

islam

2

சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.

வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!

kumarasthavam சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!

அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது – அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!

மனதை விரித்தால் மனித நேயம் வளரும்!

0

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:-

Hindu_idols Hindu_god_at_IndonesiaVandalized_Hindu_God Hindu_Temle_utensil

மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான "பாலி"யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான இராமாயண காவியம் நாடகமாக நடத்தப்படுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்:

scene_from_Ramayana_in_Bali Ramayana dance artists Ramayana balle in Indonesia

இப்படங்களை கிளிக்கியவர் Dan Johansson (datasage) – There is a Creative Commons license attached to this image.

இந்தோனேஷியா ஒரு முழு முஸ்லிம் நாடு. ஆனால் அங்கு பலருடைய பெயர்கள் "குணவான்", "சத்தியவான்" என்றூ முடியும்! ஏன், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பழைய அதிபர் சுகர்ணோவின் மகள் பெயர் "சுகர்ண புத்திரி"!

இது தவிர அந்நாட்டு விமான சேவையின் பெயர், "கருடா ஏர்வேஸ்". மேலும் குபேரன்,மேகவதி என்றும் அங்கு பெயர் வைக்கிறார்கள். ஒருமுறை பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி ஒருவர் அவர்களை, "நீங்கள் முஸ்லிம்களாயிற்றே, ஏன் இவ்வாறு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்கள், "நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோமேயன்றி எங்கள் முன்னோர்களையல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது" என்று பதிலுரைத்தனர்!

சார்ந்த வகை: பொது :: நாள்: . மறுமொழி இடுக#

பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வாசித்தேன். அதன் சுட்டி இதோ.

இது தொடர்புடைய இன்னொரு சர்ச்சை பற்றி இங்கே படிக்கலாம்.

யூஸஃப் யோஹண்ணா மதம் மாறியது ஒரு பெரிய செய்தி அல்ல. இத்தனைநாள் தாக்குப் பிடித்ததே பெரிது. அதிருக்கட்டும். சில மாதங்களுக்குமுன் அவருடைய சொகுசு கார் ஒன்று (பல லட்சங்கள் மதிப்புள்ளது) லாஹூர் நகரின் முக்கிய வீதியில் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் யூஸஃப் புகார் ஏதும் கொடுக்கவில்லை. "ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. எல்லாம் சரி" என்று மழுப்பிவிட்டாராம். ஏதோ "பாதாள லோகம்" தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்கிறது இந்தத் தளம்.

மேல்விவரம் இங்கும் வாசிக்கலாம்.

உங்களுக்கு நினைவிருக்கலாம், அஸாருத்தீன், சங்கீதா பிஜ்லானி, கங்குலி, நக்மா…………………….

சரி, உங்களுக்கு ஒரு கேள்வி:-
ஏன் ஒரு சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை?