பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2005

தோடா !

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

இந்த வருடத்திய குடியரசு தினத்தன்று எனக்கு ஒரு புதிய அனுபவம்!

தன்னோ ஹம்ஸப் ப்ரசோதயாத்சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு (!) ஆற்றவேண்டும் என்று அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஸ்வாமிஜி என்னிடம் ஒரு அன்புக் கட்டளையிட்டார். நான் படித்த பள்ளி என்பதாலும் அந்த நிறுவனம் ஆற்றும் தொண்டின் சிறப்பை நன்கு அறிந்தவன்என்பதாலும் இது எனக்குக் கிடைத்த ஒரு பெரிய கௌரவம் எனக் கொண்டேன். இதை என் மனைவியிடம் பெருமையடித்துக் கொண்ட போது, கிடைத எதிர்வினை இது:

"இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு யாராவது பெரிய மனிதர்களைத்தானே கூப்பிடுவார்கள். ம்ம்ம்!"

சரி, தாமஸ் கார்லைல் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஒரு மனிதன் தனக்கு மிக அருகாமையிலேயே இருக்கும் எவருக்கும் ஒரு ஹீரோவாக இருக்க முடியாது என்பதால், தூரத்தில் இருப்பவர்களை ஏமாற்றுவதே சுலபம் என்று எண்ணி மனைவியை மன்னித்து விட்டேன்.

ஒரு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் கொடியேற்றி விட்டு வந்த பிறகு மையமாக மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் விழா நடந்தது. இரண்டு பாண்டு குழுக்கள் இசைத்துக் கொண்டு முன்னே செல்ல, ஒரு ஊர்வலம் போல் விழா நடந்த மைதானத்திற்கு அழைத்துச் சென்றதுதான் மிக்க கூச்சமாக இருந்தது.

மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள். அதிலும் தபேலா வாசித்த பையன் தேர்ந்த வித்துவான் போல் தன் கைவண்ணத்தைக் காண்பித்து எல்லோர் மனத்தையும் கவர்ந்தான். இரு மாணவர்கள் திருப்பூர் குமரன் மற்றும் நேதாஜி ஆகியவர்களின் தியாகத்தைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்கள்.

பிறகு நான் மைக்கப் பிடிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 849 முறை) ::

நல்லோர்க்கல்ல இவ்வுலகம்!

பொது :: 2 மறுமொழிகள் »

நல்ல உள்ளம்!எங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் ஒரு தனி மனிதன். ஆம், அவரைச் சுற்றி நின்றவை பல லட்சம் தலைகள். ஆனால் அவர் தன்னந் தனியனாகத்தான் அங்கு நின்றார். கண்களில் கண்ணீர் வெள்ளம். கையில் பிடித்திருந்த ஒலி பெருக்கி மூலம் அந்த இளம் உள்ளங்களை நோக்கி வேண்டுகிறார். "இங்கிருந்து கலைந்து சென்றுவிடுங்கள். நான் உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். நான் வெகு தாமதமாக வந்துள்ளேன். நிலைமை கைவிட்டுப் போய்விட்டது. தயவு செய்து விலகிச் செல்லுங்கள். உடனே செல்லுங்கள். இந்த இளந்தளிர்களின் இரத்தம் சிந்துவதை என்னால் தாங்க இயலாது" என்று இறைஞ்சி நிற்கிறார்.

அதுதான் அந்த மனிதர் வெளி உலகத்தைக் கண்ட கடைசி நாள்.

அந்த நாள்: 1989 மே மாதம் 19-ம் தேதி.

அந்த இடம் : டியனன்மென் சதுக்கம், பெயிஜிங், சீனா.

அந்த உயர்ந்த மனிதர் ஸாவோ சியாங் (Zhao Ziyang). அவர் சார்ந்த அமைப்புக்கு ஒவ்வாத நல்ல மனம் படைத்த அவருடைய ஆன்மா கடைசியாக பிரிந்த நாள் ஜனவரி 17, 2005. ஆனால் அவர் 15 வருடங்கள் முன்னமையே ஒருமுறை இறந்து விட்டார்.

சீன நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அவர். கட்சி (கம்யூனிசம்) வேறு, ஆட்சி வேறு என்ற கொள்கையை கொணர முயற்சித்தவர். சீனப் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் மலர வழிவகுத்தவர். தன் தந்தையை தன் கட்சி அரசியல்வாதிகளே கொன்றபோதும், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பாக இருந்தவர். சீனத்தின் மக்கட் தொகை மிகுந்த சீசுவான் மாநில ஆளுநராக ஸாவோ பணியாற்றும்போது, மக்களுக்கு அவர்களின் நில உரிமையை வழங்கி உற்பத்தியை 80 சதம் பெருக்கினார். அவர் செய்த சீர்திருத்தத்தின் பயனால் அங்கு பஞ்சம் தீர்ந்தது. அக்காலத்தில் அவரைப் போற்றி "yao chi liang, Zhao Ziyang" (உண்ண உணவு வேண்டுமா, ஸாவோ சியாங்கைக் கேள்!) என்று கோஷமிடுவார்களாம். அந்த அளவுக்கு சீனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார்.

The man!கலாசாரப் புரட்சியெனும் கொடுமைகளுக்குப் பிறகு சீன மக்கள் தனி மனித சுதந்திரத்தை சுவாசிக்க ஆரம்பித்தது இவர் காலத்தில்தான். ஆனால் அவர் அதற்காகக் கொடுத்த விலை மிக அதிகம். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஒரு கைதியாக, எந்த தனி மனித உரிமையும் இல்லாமல் 15 வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டு, விடுதலை பெறாமலேயெ நேற்று காலமானார் (ஜனவரி. 8 அன்றே இறந்து விட்டார் என்கிறார்கள் சிலர்). அவர் செய்த தவறு, அப்பாவி மக்கள்மீது ராணுவத்தை ஏவக் கூடாது என்று கட்சியில் வாதாடியதுதான்! ஒரு உண்மையான ஜனநாயகவாதியின் சோக முடிவு அது. He was a right man at the wrong place and time!

அந்நாட்டின் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலராக அவர் இருந்தபோதுதான் சீனாவின் அடக்கு முறை அரசியல் அத்தியாயம் முடிந்து மக்கள் உண்மையான ஜனநாயகத்தை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த
அடிக்குப் பின் விளைவாக மக்களுக்குக் கிடைத்தது மிகப் பெரிய மரண அடி!

The attack
மனித இரத்தத்தினால் எழுதப்பட்ட சீன சரித்திரத்திலேயே ஜூன் 4 (1989) ஒரு மனத்தை உருக்கும் துக்க நாள். அன்றுதான் அந்த நாட்டின் ராணுவம் தன் ராட்சத டாங்க் படையைக் கொண்டு அப்பாவி இளைஞர்களை பல்லாயிரக் கணக்கில் நசுக்கிக் கொன்று கிழட்டு அரசியல்வாதிகளின் ஆதிக்க வெறியைத் தணித்த நாள். அங்கு மக்கள் எப்படி வேட்டையாடப் பட்டார்கள் என்பதை BBC - யின் வீடியோ படத்தில் பார்க்க இங்கே "கிளிக்கி"யுங்கள்.

பாவம்

The rescue

The unknown Rebel!தனி மனிதனாக இராணுவ டாங்குகளை எதிர்கொள்ளும் இந்த இளைஞனின் தீரத்தையும் பயமின்மையும் காணுங்கள். இந்த இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. இவனுக்கு "டாங்க் மனிதன்" மற்றும் "Unknown Rebel" என்ற பட்டப் பெயர்கள் உள்ளன. இவனை சீன ராணுவம் கொன்றுவிட்டது என்கிறார்கள்; இல்லை இல்லை, எங்கோ பதுங்கியிருக்கிறான் என்கிறார்கள் - இது போன்ற பல கதைகள் உலவுகின்றன. ஆனால் மனிதனுக்கு சுதந்திர தாகம் மட்டும் வந்துவிட்டால், எத்தகைய மனத்திட்பம் கொண்டவனாக ஆகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. அவன் ராட்சத டாங்கு களை எப்படித் தடுக்க முயலுகிறான் என்பதை CNN-ன் குறும்படத்தைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள். அவன் நின்று கொண்டிருந்த சாலையின் பெயர் "Great Avenue of Everlasting Peace". What an irony! ஆனால் சீனாவில் இந்த டாங்க் மனிதனைப் பற்றி மக்கள் யாரும் கருத்துரைக்கவோ எழுதவோ முயலுவதில்லை. ஏனெனில் அங்கு அரசு இயந்திரத்தின் அடக்கு முறைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.

டெங்குஅப்பாவி மக்களின்மேல் இந்த அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது யார் தெரியுமா? மாவோவுக்குப் பின் சீனாவின் விடிவெள்ளியாகக் கருதப்பட்ட டெங் சியாவோ பிங் (Deng Xiaoping) மற்றும் அவர் சீடர் லீ பெங். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த லீபெங், சீன மக்களால் மிகவும் விரும்பப் பட்டவரும் தன்னைவிட மக்கள் மத்தியில் புகழ் பெருகிறார் என்பதற்காக அவருடைய புற்று நோய்க்கு மருத்துவம் செய்வதற்கு மாவோவால் அனுமதிக்கப் படாமல் இறந்துபோனவருமான சூ என் லாயின் வளர்ப்பு மகன்.. இந்த சூ யென் லாய் தான் ஜவஹர்லால் நேரு காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர். "பஞ்ச சீலம்", "ஹிந்தி-சீனி-பாய் பாய்" போன்ற வாசகங்கள் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின் எல்லாவற்றிற்கும் "பெப்பே" என்று நம்மீது படையெடுத்து, நேஃபா மற்றும் அக்சாய் சின் பகுதியில் பெரிய நிலப் பரப்பை சீனா தன்வசப்படுத்தியது இன்னொரு சரித்திரம்.

இந்த அடக்கு முறைக்குப் பின் ஸாவோ பதவி நீக்கம் செய்யப் பட்டு சிறையிடப் பட்டார். ஆனால் இறந்த பின்னும் அவர் இன்றைய சீனத்தின் அதிகார வர்க்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவருக்கு முன்னால் சீர்திருத்தம் செய்ய முற்பட்ட தலைவர் ஹ்யூ யாவொ பெங் இறந்த பின் அவர் நினைவாக மக்கள் கூடியபோது வெடித்ததுதான் டியனன்மென் புரட்சி. அதற்கு முன் சூ யென் லாய் இறந்த போதும் இது போன்ற கிளர்ச்சி எழுந்தது.

இந்த உலகத்தில் நல்லவர்கள் கையில் எந்த அதிகாரமும் நிலைக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் ஸாவோ சியாங்!

:: (பார்வை 801 முறை) ::

புத்தக உலகம்!

என்ன நடக்குது இங்கே :: 8 மறுமொழிகள் »

இன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்" - அசரீரி!) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்!) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் வேண்டாமா?

C.1935 காலத்திய பதிப்புகள் சிலவற்றில் வாசம் செய்த ராம பாணங்கள் என்னிடம், "என்னதான் புத்தகங்கள், நூல்கள், இரத்தினங்கள் என்று பல பெயர்களில் நீ அழைத்தாலும் அடிப்படையில் அவை cellulosic material - தான்" என்று கூறிவிட்டுச் சென்றன. என் attic-ஐ அலங்கரிக்கும் இது போன்ற antic-களைப் பற்றி பிரிதொரு நாள் பேசுவோம்!

புது புத்தகங்களை வாங்கி அவற்றின் வாசனையை முகர்ந்து விட்டு, "நம்பளோடதுதானே, எங்க ஓடிடப் போவது; பிற்பாடு சாவகாசமா படிச்சுக்கலாம்" என்று எல்லாவற்றையும் போல் இதனையும் procrastination list-ல் சேர்த்து விட்டு நிம்மதியாக மனதுக்குப் பிடித்தமான வேறு தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டு சென்றதால், புத்தகங்கள்தான் சேர்ந்தன - அறிவு கூடவில்லை! இதற்கிடையில், காலண்டர்கள் புதிது புதிதாய் ஆணியில் மாறிக்கொண்டு செல்வதைத் தடுக்க இயலவில்லையே! காலத்தை rewind செய்யமுடியாவிட்டலும், குறைந்த பட்சம் "Pause" செய்யவாவது இயலவேண்டும். அதற்கான Time Machine யாராவது கண்டு பிடிப்பார்களா? இல்லாவிட்டால் யயாதி கதை தான்! ஐயகோ, அநுபவிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு - அத்தனையும் கொள்ளை போகிறதே? ஆமாம், "அநுபவிப்பது" என்றால் என்ன? அது species களுக்குத் தகுந்தாற்போல் வேறுபடும். இதைப் பற்றி ஒரு கதை இருக்கு - அது அப்புறம். "Stop it!". Ok, I am drivelling!

ஓன்று மட்டும் நிச்சயம். விற்கும் நூல்கள் எல்லாம் படிக்கச் சுவையாயிருக்க வேண்டிய கட்டாய மில்லை. Books sell mostly through hype, promotion campaigns, reviews serving as surrogate ads, just plain ad's and also the snob value associated with ownership. சில பிரபலங்களின் பேட்டிகளை டி.வி-யில் பார்த்தால் backdrop-ல் பல புத்தகங்கள் பளபள வென்று அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அவ்வளவு படிப்பாளி என்று பார்ப்பவர்கள் மதிப்பீட்டுக்காக! அந்த டைட்டில்கள் எல்லாம் அவர்கள் பெரிய அறிவு ஜீவி எனக் காண்பிக்கக் கூடிய அளவில் இருக்கும். மைசூரில் பணியாற்றும்போது ஒருவர் வீட்டில் விசேஷம், செல்ல வேண்டிய கட்டாயம். அவர் வீட்டின் டீபாய் மேல் ஒரு கட்டு Readers' Digest, ஒரு கட்டு National Geographic கருக்கழியாமல் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் யாரும் அவைகளைப் படிக்கும் நிலையிலோ, வயதிலோ இல்லை. எல்லாம் ஒரு "இது"தான். ஆமாம், இவ்வளவு பேர் புக் பேஃரில் அள்ளிச் செல்கிறார்களே, அவற்றில் எத்தனை சதம் முழுவதாகப் படிக்கப்படும்? ஏனென்றால், முழுமையாக ஒருமுறை கூடப் படிக்காமல் ஒரு புத்தகத்தையே தடை செய்தவர்களாயிற்றே நாம்!

2005 புத்தகக் கண்காட்சியில் மேற்கொண்டு வாங்கியவை:-

  • எம்.எஸ் ஞாபகார்த்தமாக "மீரா" VCD (ஒரிஜினல்! ஹிஹி, ஒரு மாறுதலுக்குத்தான்!)
  • மாம்பலம் சிஸ்டர்ஸ் - ஸ்தோத்திரங்கள் - MP3
  • அபுல் கலாம் ஆசாத் - கானா
  • இரா. முருகன் - அரசூர் வம்சம் + சைக்கிள் முனி
  • பி.ஜி.வுட்ஹௌஸ் - 4 (நடைபாதை பேரம்)
  • Edward de Bono - 2 (………. do ………)
  • ஸதாசாரம்
  • கல்கியின் 3 கதைகள்
  • சமையல் சமாசாரங்கள் - 4 (ரோக்கா படி)
  • ஜெயகாந்தனின் ஹரஹர சங்கரா (இதன் வாயைத் தைத்து சிரமப் பட்டிருக்க வேண்டாம்! திராபை!)

இன்னும் சில, பட்டியலிடுமுன் பரண் ஏறிவிட்டன!!

அங்கே நுழைந்தவுடன் ஒரு கொஞ்ச வயசு சாமியார் என்னமா போஸ் கொடுக்கறார்ங்கிறீங்க - ரமேஷ் பிரபா எல்லாம் சும்மா ஜுஜூபி! அந்த சாமியார் பேசாம Fashion TV - லே சேரலாம். மூஞ்சி கொஞ்சம் effeminate-ஆ பட்டது! வோணாம்ப்பா!! Nay, I'm not one of those!!

தெரிந்தவர்கள் தயவுசெய்து சீக்கிரம் சொல்லுங்களேன், தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகம் பிரசுரித்துள்ள அகராதி வாங்கலாமா? ரூ.600 விலையுள்ள அந்த ஆ-த அகராதியை ரூ.450-க்குக் கொடுக்கிறார்கள். நன்றி.

:: (பார்வை 793 முறை) ::

புத்தகக் கண்(கொள்ளாக்) காட்சி!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

ஜனவரி 8, சனிக்கிழமை

புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று "கிரௌண்டில்" விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று நிதானமாக் கேட்டுக் கொள்ளலாம் என்று நிறுத்தினால் (நான் கொஞ்சம் "மெற்குரி வேபர்" லைட்), மொபைல் பார்ட்டியின், "ரோட்டிலே நிறுத்தாதீங்க" அறிவுருத்தல் - (ஆனால் உண்மையில் நான் எங்கு வண்டியை பார்க் பண்ணினேன் என்பது வேறு விஷயம்!). சென்றமுறை நடு புல்வெளி மைதானத்தில் பார்க்கிங் இருந்தது. இப்போது அங்கே அரங்கு அமைத்திருப்பதால் இந்த ஏற்பாடு என்று தோன்றுகிறது.

கண்காட்சி என்றாலே கட்டாயம் இடம்பெற வேண்டிய பொருள் மெகா சைஸ் அப்பளாம்! மண்ணோடு கலந்த இந்த வஸ்துவுக்கு அங்கும் இடம் இருந்தது. அந்த பூகோளப் புத்தக அப்பளத்தில் edible ink-ஐ பயன் படுத்தி ஏதேனும் சுவையான செய்தியை அச்சடிக்கலாமே என்று தோன்றியது (ஜெயேந்திரரின் காம லீலைகள் - போன்றவையாக இருந்தால் மக்களுக்கு
சுவாரஸியமாக இருக்கும்!)

இட்லி, வடை, பிஸ்கெட், காப்பிகளைத் தாண்டி நுழைவாயில் நோக்கிச் சென்றால் அனுமதிச் சீட்டு வாங்குமிடத்தில் நம்
கண்ணைக் கவரும் வண்ணம் கிழக்குப் பதிப்பகத்தார் அமைத்துள்ள விளம்பர வளைவு, அந்த ஸ்டாலுக்குள்ளேயே நுழைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

நுழைந்தவுடன் தென்படுவது கேண்டீன். இசை விழாவின் போது ஏற்பட்ட பழக்கத்தால் என் கால்கள் தன்னையறியாமல் அதை
நோக்கிச் சென்றதை மனைவி தடுத்து நிறுத்தி விட்டார், "எப்பப் பார்த்தாலும் சாப்பிடற நினப்புத்தானா" என்ற கேள்வியுடன்.
மேற்கொண்டு இது பற்றியும், எங்கள் குடும்பத்தார்களின் அடிப்படை குண இயல்புகளைப் பற்றியும் நாங்கள் sotto voce-ல் பரிமாறிக்கொண்ட டயலாகுகள் வாசிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்காது என்பதால் அவற்றிற்கு இங்கு இடம்
கொடுக்கவில்லை.

நிறைய ஸ்டால்கள். பரவலாகப் பட்ட இடவசதி. இன்னொரு நிறைவான விஷயம், நிறைய தமிழ்! ஆனால் ஸ்பீக்கரில் ஒரு
பெண் தவறான ஆங்கிலத்தில் (வேடிககையான உச்சரிப்புடன்), மறுநாள் நடக்கப் போகும் பேச்சுப் போட்டியைப் பற்றி
அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரே அதைத் தமிழில் சொல்லியிருந்தால், எவ்வளவு கொலை செய்திருப்பார் என்று
எண்ணிப் பார்த்ததில், "போட்டுத் தாக்கு ஆங்கிலத்தை" என்று விட்டு விட்டேன்!

மேலும், கார்பெண்டர், காண்டிராக்டர், வேலுசாமி, கன்னிகா பரமேஸ்வரி என்று யார் யாரையோ கூவி அழைத்துக்
கொண்டிருந்தார்கள். "என்னை இல்லைப்பா" என்று மகிழ்ச்சியுடன் கடைகளை மேய ஆரம்பித்தேன்.

அநேகமாக எல்லா ஸ்டாலிலும் முகப்பிலேயே தென்படுவது கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்"
போன்றவற்றின் மலிவுப் பதிப்புகள்தான். அவைகள் சிரஞ்சீவியாக நிறையவே விற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற நீண்ட நெடிய நாவல்கள் அதற்கப்புறம் மக்களைக் கவரும் வண்ணம் தமிழில் வரவில்லையோ என்று எண்ணுகிறேன். ஆனால் அப்படியும் மற்றவர்களிடமிருந்து தன்னை தனிப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், "கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிப்பதில்லை" என்று சொல்லிக்கொள்ளும் மேதாவிகளும் இருக்கிறார்கள். Each one to his cup of tea!

Topical-ஆக ஜெயேந்திரரையும் சிறுபதிப்புக்கள் மூலம் காசக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்! பெரும்பாலும் சுற்றி வளைத்து அவரையும், அதைச் சாக்கிட்டு பார்ப்பனர்களையும் திட்டி எழுதப்ட்டிருந்ததைப் பார்த்தேன். ஆனால் ஜெயகாந்தன்
எழுதியுள்ள "ஹரஹர சங்கர"வைப் பற்றி பத்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தபின் அதை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் தோன்றியுள்ளது.

மற்றபடி வகை வகையான சமையல், சுய முன்னேற்றம், கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி, ஜோக்குகள், ஆன்மீகம்,
கையடக்க நூல்கள் ஆகியவைகள் பில் போடப்படுவதைப் பார்த்தேன்.

கையில் ஒரு பெரிய பையாக எடுத்துச் செல்லல் நலம். முடிச்சு முடிச்சாக சிறு பைகளை சுமந்து "இடி"பாடுகளில் செல்வது
சிரமமாக இருந்தது! தண்ணீர் ஒரு பாட்டில் தவறாமல் கொண்டு செல்லுங்கள்.

நான் வாங்கியவை:-

திருக்குறள் (விளக்கமான உரை)
லிஃப்கோவின் விட்டுப் போன Great Little Books
தனிப்பாடல் திரட்டு
சித்தர் பாடல்கள்
சிலேடைகள்
காளமேகப் புலவர் பாடல்கள்
திருமண சடங்குகளின் விளக்கம்
தெனாலி ராமன், முல்லா, பரமார்த்த குரு, விக்கிரமாதித்தியன் கதைகள் (குழந்தைகளை தூங்கச் செய்ய!)
ஈவேராவின் மறுபக்கம் - ம. வெங்கடேசன்
ஹிந்துத்வா - ஒரு அறிவியல் கண்ணோட்டம்
வெறுக்கத்தக்க பிராமணீயம்
Chidrens' Book Trust பதிப்புகள் - மலிவு விலையில் இரத்தினங்கள்

எந்த ஒரு திட்டத்துடனும் செல்ல வில்லை என்பதால், ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி இறங்கி, பலருடைய பிருஷ்ட பாகங்களால் இடி பட்டு நீந்திச் சென்றதில் நேரமாகி விட்டது. பார்க்க வேண்டியவை பாதிக்குமேல் பாக்கி. "திறையை மூடுங்கள்" என்ற ஆணை வந்துவிட்டது. வெளியே செல்லலாமென்றால் அங்கு "பரிசு விழுமா" என்று சீட்டின் அடிக்கட்டையை கையில் பிடித்து நிற்கும் கூட்டம். நமக்கு அதுபோல் ஏதும் விழுந்த சரித்திரம் இல்லையென்பதால், நாங்கள் கீழே விழாமல், நெளிந்து நெளிந்து வெளியே வந்து விட்டோம்.

ஏற்கனவே லாஃப்ட்களில் அடுக்கி வைக்கப்பட்டு, அந்துருண்டைகளை வெற்றி கொண்ட அம்புப் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் என் வாழ்நாளுக்குள் என்று வாசித்து முடிக்கப் போகிறேனோ தெரியவில்லை. ஆனால் மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்கள் கூறியிருந்தது போல, மேன் மேலும் வாங்கி அடிக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்! கையெட்டும் இடத்தில் வைத்தால் படிக்கத் தோன்றும் என்றால் அவை காற்றை சுத்தம் செய்யும் புனித சேவையில் ஈடுபடுகின்றன.
ஒரு Murphy's law நினைவுக்கு வருகிறது:-

Law of conservation of Filth

For making something cleaner, you have to make something else dirtier!

Corollary to this law

You can still make everything dirtier without making anything cleaner!

இன்றைய Wish List:-

அபிதான சிந்தாமணி
கல்கி, தேவன், எஸ்.வி,வி - இவர்களின் படைப்புக்களில் என்னிடம் இல்லாதவை
Rare Books - ல் முத்துக் குளித்து அள்ள வேண்டிய antics
முன்னே குறிப்பிட்ட ஜெயகாந்தனின் படைப்பு
இன்னும் கொஞ்சம் காரக் கடலை!

வரட்டுமா!

:: (பார்வை 789 முறை) ::

மனித சுனாமி

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

பேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது.

பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் பல பாதிக்கப் பட்ட நாடுகளில் நடந்திருக்கின்றன. பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த சிறுமிகள் இலங்கையில் கற்பழிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும், அவர்களுக்கு வழங்கப் படுவதற்காக கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் பல இடங்களில் திருடப்பட்ட கதைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தாய்லாந்தில் ஹோட்டல் அறைகள் சூறையாடப்பட்டன. ஸ்வீடன் நாட்டின் மக்கள் பலர் இந்த ஊழ் அலைகளால் மாண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொண்டு, அவர்களின் உடைமைகள் திருடப்படுவது அந்நாட்டில் நிகழ்வதால், உயிர்ச் சேதம் பற்றிய முழுத்தகவல்களையும் அந்நாட்டு அரசு வெளியிடாமல் வைத்திருக்கிறது. அதன் அண்டை நாடான நார்வேயிலும் இதே நிலை தான்.

மேலும் சில வக்ர புத்திக் காரர்கள் உதவி நிறுவனக்கள் போலவே பொய் ஈமெயில்கள் மூலம் பணம் திரட்டுகிறார்கள். இறந்தவர்கள் பற்றிய முக்கிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். வங்கி சேமிப்புகள், காப்பீட்டுத் தொகை முதலியவற்றை ஏமாற்றி அள்ளிக் கொண்டுபோக இது போன்ற முயற்சிகள் நடக்கின்றன. இன்னும் பலர் தங்கள் பெயரை பாதிக்கப் பட்டவர்களின் பட்டியலில் எப்படியாவது நுழைத்து விட்டு, அரசும், வேறு பல தொண்டு நிறுவனங்களும் அளிக்கும் ரொக்கம் மற்றும் வேறுவகை நிவாரணங்களையும் கொள்ளை கொண்டுபோகும் பலே பேர்வழிகளும் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிகிறோம்.

இது போன்ற மனிதர்கள் பிறக்காமலிருக்க Genome project முடிவுறும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்!

சமீபத்தில் நாகை சென்று வந்துள்ள என் நண்பர் அங்குள்ள நிலவரத்தைக் கூறினார். மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 748 முறை) ::

 

5-ல் இது-5«12345

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in