இவளல்லவோ புதுமைப் பெண்!

ஆண்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் போலவும், பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கடைசியில் சாதித்துவிடுகிறார்கள். ஆண்களின் சூரத்தனமெல்லாம் சும்மா பந்தாவோடு சரி. “Last laugh” குறிப்பிடப்படும் கடைசி வெற்றி பெண்கள் கையில்தான். இந்த உண்மை சரித்திர நிகழ்வுகள் முதல் அன்றாட நடப்புகள் வரை மீண்டும் மீண்டும் பலவிதங்களீல் நிருபிக்கப்படுன்றது.

சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தன் திருமணத்தன்று ஓடிப்போய் தன் பழைய காதலனைக் கைப்பிடித்திருக்கிறார். ஆனால் திருமண மண்டபத்தில் இவளுக்காக பட்டுப் புடவை, தாலி, மோதிரம் போன்றவற்றிற்கு ஏராளமாக செலவழித்து விட்டு, தாலியும் கையுமாக பேஸ்தடித்துக்கொண்டு நிற்கிறான் மணமகன்!

கடைசியில் அவன் காவல்துறையில் புகார் கொடுத்தபிறகு பெண்வீட்டார் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய இன்றைய தினமலர் செய்தி இதோ:-

திருமணத்தன்று ஓடிப்போனவள்!

3 Comments


  1. In our puranas and ethics ladies are shown for their valour,duty conciousness and family bondage .They do what they need.In Ramayana,Seetha ;In mahabharatha Droubathi ;in the storyof harishchandra the boldness of chandramathi,savithri in sathyavan charitham like that many example I can quote,The Great Bharathi wondered about the qualities of ladies(penngal)The present days kiren bedi,serina williams,lathika charan and others YARUM MUNBOL PENGALAI SIRAI PADUTHA MUDIYADHU)– BHARATHI RAMACHANDRAN


  2. http://kichu.cyberbrahma.com/archives/160 தளத்தை கண்டேன். மேலும் உங்களது அனேக வலைப்பதிவுகளையும் கண்டேன் . மிக அழகான வலைத்தளம். எளிமையாகவும் அதே நேரம் மனதை கவரும் பதிவுகள். வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு !!! .. வளர்க இந்த சமூகத்தொண்டு….!!

    http://kichu.cyberbrahma.com/archives/160 ல் தாங்கள் இட்ட செய்தி கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

    இன்றைய புதுமை பெண்கள் பலர், ஆண்களை இழிவுபடுத்தி, பொய் புகார்களில் கைது செய்து / செய்வித்து, அவர்களைடம் இருந்து பணம் பரித்து வருகின்றனர். கொலையும் செய்வாள் பத்தினி என்பது புலனாகி வருகிறது

    பொய் டவுரி வழக்குகள் என்று கேள்விப்பட்டதுண்டா ?

    கேள்விப்படிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லையெனில், கூகிளில் 498a அல்லது false dowry cases என்று தேடிப்பார்க்கவும். நம்ப முடியாத அளவில் பொய் டவுரி வழக்குகள் குவிந்து வருகின்றனர்

    இந்தியா முழுவதும் சில லட்சம் வழக்குகள் நீதி மன்றங்களில் கிடக்கின்றன.

    டெல்லி போன்ற சில பெரிய நகர்களில், முன் ஜாமீனுக்கு (anticipatory bail) வரும் வழக்குகளில் பெரும் பகுதி பொய் டவுரி வழக்குகளில் ஜாமீனே…

    பெண்கள் டவுரி சட்டங்களை துஷ்பிரயோகம் செய்து தங்களது மாமனார், மாமியார், திருமணம் ஆகாத நாத்திகள், கணவன் ஆகியோரை கைது செய்து …அல்லது கைது செய்வதாக மிரட்டி பணம் பரித்து வருகின்றனர். படித்த மத்திய வகுப்பு அல்லது வசதிவாய்ந்த பெண்கள் இதில் அடக்கம்

    இந்த உண்மை அறியாத ஊடகங்கள் பெரும்பாலும் இந்தியா பெண்களை எரிக்கும் நாடு என்ற வித்ததில்,.. the curry and dowry country என்றே நம் நாட்டை சித்தரித்து வருகின்றன

    இந்த மோசடியை வேளிப்படுத்தி பின் சந்ததியினரை காப்பது உங்களை போன்ற அறிவார்ந்த வலைப்பதிவாளகளின் கையில் தான் இருக்கிறது …

    பெய் டவுரி வழக்குப் பணப் பரிப்புக்கு சில வக்கீலக்ளும், சில போலீசாரும் உதவுகின்றனர்

    முன் ஒரு காலத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக ஒரு பக்கமாய் … பெண்களுக்கு சாதகமாக … இயற்றப்பட்ட சட்டங்கள் துணையாகின்றன

    ஒரு பெண் இ பி கோ பிரிவு 498a வில் புகார் கொடுத்தால், தகுந்த விசாரணை செய்த பின்பே தேவையெனில் மட்டுமே போலிசார் கைது செய்வேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசாணை இருப்பினும், பெண் புகார் கொடுத்த உடனேயே இதுதான் சாக்கென கருதி, போலீசார் பிள்ளை அல்லது கணவனையும் … கணவன் வீட்டரையும் கைது செய்து விடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனையே முன் பின் பார்க்காத அப்பாவி பிள்ளை வீட்டார் பெரிய அவமானத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். இத்தகைய இக்கட்டான தருணத்தில் மிரட்டலாலும், சமூகத்தில் தங்கள் பெயர் போய்விடுமே என்ற பயத்தாலும் பிள்ளை வீட்டார் மிரட்டப்பட்டு, பிள்ளை வீட்டாரிடம் (அல்லது கணவன் வீட்டாரிடம் ) இருந்து பணம் பறிக்கப் படுகிறது

    பல நகரங்களில் கோர்டாருக்கே இந்த் அனியாயம் புரிய ஆரம்பித்து விட்டது. கோர்ர்டுகள் இத்தகைய பொய் வழக்குகளை சாடி வருகின்றன. மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகளை காணவும்

    http://batteredmale.blogspot.com/2007/09/brother-in-law-tried-to-force-himself.html

    http://batteredmale.blogspot.com/2007/09/taunt-is-not-sufficient-to-convict.html

    http://batteredmale.blogspot.com/2007/09/re-advice-please-tormented-husband.html

    http://batteredmale.blogspot.com/2007/09/file-fir-against-errant-wife-occupying.html

    இந்த அநீதியை எதிர்த்து போராட தாங்கள் ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பி இருகையை முடிக்கிறேன்

    அன்புடன்
    விநாயக்


  3. This is a cognizable & non bailable offence. That means just on a mere complaint by a married woman the police can arrest husband or his relative without a warrant and can be remanded. That is, can be sent behind bars. The investigation or the materials on which the complaint lodged comes latter.

Leave a Reply

Your email address will not be published.