‘மணமுறிவு’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்!

மனித நேயம் :: மறுமொழி ஒன்று »

இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:-

இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும் நல்லது.

ஆனால் இலக்கியப் படைப்புகளை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து மதிப்பிட்டு நோக்கவும் விவாதிக்கவும் கோட்பாடுகளின் உதவி தேவை. பெரும்பாலும் இக்கோட்பாடுகள் மொழியியல் தத்துவம் மதம் அரசியல் அறிவியல்துறைகள் போன்று இலக்கியமல்லாத ஒரு துறையின் கருவிகளை இலக்கியத்தின் மீது பிரயோகித்துப் பார்ப்பவையாகவே உள்ளன. இலக்கியம் மீதான பல கோணங்களினாலான ஆய்வுக்கு இவை உதவும். அவ்வளவுதான்.

எழுத்தாளர் ஜெயமோஹன் தன் வலைப்பதிவில் எழுதியுள்ள ஒரு விளக்கத்திலிருந்து பிய்த்த பகுதி இது. என்ன சொல்லவருகிறார் என்பது உங்களுக்கு ஏதாவது புரிகிறதோ! எனக்குப் புரியவில்லை ஐயா!

முதலில் 'பின் நவீனத்துவம்" என்னும் அறிவுசால் குறிச்சொல்லை எடுத்துக் கொள்வோம். பரமபத சோபன படத்திலுள்ள மகாப் பெரிய ஏணிபோன்றது இந்த பரிபாஷை. நீங்கள் எதை எழுதினாலும் அதில் இந்தச் சொல்லை சகாயமாக ஆங்காங்கே தெளித்துவிட்டீர்களானால் திராவிட மற்றும் இடதுசாரி அறிவு ஜீவிகள் மத்தியிலும் பொதுவாக இலக்கியவாதிகள் குழுமத்திலும் உங்கள் மதிப்பு ஜிவ்வென்று உயர்ந்துவிடும். எங்கும் பரவலாகப் பேசப்படுவீர்கள். இத்தன்மையான வெகுஜனப் புரிதலுக்கு அப்பாற்பட்ட அறிவாளிகளுக்கென்று உள்ள அலங்காரங்களான குர்தா, ஜோல்னாப்பை ஏதும் தேவையில்லை! நீங்கள் உங்கள் தெரிவுக்குற்கேற்ப சஃபாரி சூட் பொன்ற நாட்டு சோக்காளி உடையலங்கரங்களை மாட்டிக்கொண்டு பவனி வரலாம்!

கிழ்க்கண்ட சொற்சிதைவுகளை ஏதோவொரு வலைப் பதிவில் பர்த்தேன் - எதிலென்று நினைவில்லை. இதுபோன்று சொற்களால் சிலந்திவலை பின்னுவதும் ஒரு "பின் நவீ…" முறைதான்!
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 488 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in