இல்லவே இல்லை!

அரசு அலுவலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்), அவர்கள்தம் திருமணத்தின்போது எவ்வளவு வரதட்சிணை பெற்றார்கள் என்பதை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. விவரம் இதோ.

இதோ அறிவித்துவிட்டேன் – நான் வரதட்சிணை வாங்கவில்லை, வாங்கவேயில்லை!

உண்மையைச் சொல்லப் போனால், யாராவது கொடுக்கத் தயாராயிருந்தால்தானே வாங்குவதற்கு!

ஆமாம், யார் உண்மையை அறிவிப்பார்கள்? ஒருவேளை மனசாட்சி குடையட்டுமே என்று எண்ணினார்கள் போலிருக்கிறது!

சௌதியில் பெண்கள் நிறைய வரதட்சிணை வாங்குவதாக சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு திசைகள் இதழில் படித்த ஞாபகம். அந்த நாட்டில் இதுபோன்ற சட்டம் பெண்களுக்கு மட்டும் என்று இயற்றுவார்கள் போல!

1 Comment


  1. Kichu – I also have the same thoughts. Who is going to tell the truth. Yet another eye-wash.

    Contstructiveahna thought dhan, but implementation problem.

    Society is changing I feel ( better change) or it will become like Saudi one day (Every action as an opposite reaction).

    BTW, I didn’t take dowry as well.!!

Comments are closed.