3 Comments


  1. அபாயகரம் அபய காரம் ஆனதை சொல்கிறீர்களா..
    சீர்காழி பள்ளியில் படித்த பக்கத்து
    வகுப்பில் அபயம் என்றொரு பெண்ணிருந்ததாக ஞாபகம். அவள் காரமானவளா நிச்சயம் தெரியாது.

    புகைப்படம் எந்த ஊரில் எடுத்தீர்கள்..
    திருநன்றியூர் அருகில் ஒரு வளைவிருக்கும்,முட்டாள்தனமாக.அதுவோ.
    ஒரு ஐயம்: இச்சாலையில் கிழக்கு நோக்கி கொண்டத்தூர் வாய்க்கால் சாலை இருக்கும்,இருமருங்கில் அழகாக தேக்கு மரங்களுடன்..இவை இன்னும் உள்ளனவா அல்லது சின்னம்மா போன்றவர்கள் கபளீகரம் பண்ணிவிட்டார்களா..நன்றி.


  2. அன்றைக்கு போர்டு எழுதியவர் கல்யாணம் ஆனவராக இருந்திருப்பார் என நினைக்கிறேன்!


  3. வாஸ்ஸன் அவர்களே!

    “திருநன்றியூர்”, “கொண்டத்தூர்” – இதுபோல்` இனிமையான (nostalgic) ஊர் பெயர்களைப் பார்த்து ரசிக்க முடியவில்லை. சாலையில் குறுக்கே நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் சோம்பல் முறித்துக் கொண்டும் எவ்வளவு “ஹாரன்” அடித்தாலும் “எங்கேயோ எண்ணை மழை பெய்கிறது” என்பதுபோல் “சிவனே”யென்று கிடந்த ஆட்டுக் குட்டிகள் மேல் கார் ஏறாமல் இருக்க வேண்டுமே என்று ப்ளட் பிரஷர் ஏற்றிக் கொள்வதிலேயே கவனம் போய் விட்ட்து. அதையும் தாண்டி கண்ணில் விழுந்ததுதான் “அபய காரம்”!

    அடடா, தேக்கு!
    ஓஹோ, அது வேறே இன்னும் பாக்கி யிருக்கிறதா?

    ஏய், யாரங்கே, காலடியில் கிடப்பது! எங்கேயோ தேக்குத் தோப்பு இருக்காம். யாருக்குச் சொந்தம் என்று பார். படியல்லைன்னா இருக்கவே இருக்கு “கஞ்சா”. ம்கூம், இது பழசு.
    “கஞ்சி வரதப்பா!”
    இது “புதுசு கண்ணா, புதுசு!”

Comments are closed.