இப்போதெல்லாம் தமிழ்மணத்தால் திரட்டப்படும் வலைப் பதிவுகள் பலவற்றில் பிராமணர்களை தரக் குறைவாக தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வகை தொகை இல்லாமல் வாய்கூசும் சொற்களால் ஏசப்படுகிறது. இது தவிர எனையோர் பதிவுகளிலும் பின்னூட்டங்களில் பல பெயர்களிலும் பெயரிலிகளாகவும் நுழைந்து இன்னும் பல மடங்கு தரம் தாழ்ந்த முறையில் பார்ப்பன அர்ச்சனை நடக்கிறது. இவற்றை சிலர் மட்டுறுத்தல் செய்கின்றனர். ஆனால் பலர் அப்படியே விட்டுவிடுகின்றனர். பார்ப்பானைத்தானே திட்டுகிறார்கள், நமக்கென்ன என்கிற எண்ணமா அல்லது இவ்வாறு திட்டும் நபர் யாரென்று பலருக்குத் தெரியுமென்பதால் (அவருடைய எழுத்தை மட்டுறுத்தல் செய்தால் தாமும் தம் குடும்பத்தாரும் சந்தி சிரிக்கும் அவலத்தை சந்திக்க நேரிடும் என்பதால்) எதற்கு வம்பு என்கிற தற்காப்பு அணுகுமுறையா, நான் அறியேன்.
சரி. இதுபோன்று பதிவுகளை எழுதுபவர்கள் உண்மையில் பார்ப்பனர்கள்மேல் வெறுப்பு கொண்டவர்களா, அல்லது பார்ப்பன ஆதிக்க வெறியினால் பாதிக்கப்பட்டவர்களா என்கிற கேள்வியை கேட்டோமானால் அதற்கு பதில் அத்தகைய இடுகைகளைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். நீங்கள் இவற்றில் பொதுவாக ஒரு pattern-ஐக் காணலாம். அதாவது, பார்ப்பன வசை பாடுதலும், இந்துமத எதிர்ப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஓரிழையாக செல்வதைக் காணலாம். இந்து மதக் கடவுட்களையும், வேதங்கள், உபநிஷத்துகள், இதிஹாஸங்கள் போன்றவற்றை திரித்து மனம் போனபடி விமரிசித்து, அதனூடே இதெல்லாம் பார்ப்பனர்கள் சூத்திரர்களையும், ஏனைய தமிழர்களையும் இரண்டாம்தர குடிகளாக நடத்துவதற்கான சூழ்ச்சிகள் எனக் கொண்டு செல்வார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது, இத்தகைய பதிவுகள் ஒரு திட்டத்துடன் செயல்படுகின்றனவோ என்று ஐயுறுகிறேன். அதாவது, முதலில் பார்ப்பானைத் திட்டு; அனைத்து பிரச்னைகளுக்கும் அவனையே காரணமாக்கு (இந்தியா பங்களாதேஷிடம் தோற்றது உட்பட). சரி, பார்ப்பன வெறுப்பை உமிழ்ந்தாயிற்றா, பின் இந்து மதம் பார்ப்பனருக்காக, பார்ப்பனரால் தோற்றுவிக்கப்பட்ட மதம், பார்ப்பனரல்லாத ஏனைய சாதியினருக்கும் இந்து மதத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்ற வாதத்தை நிலைநிறுத்த முயற்சி செய் – இதுதான் அவர்களின் முயற்சி. உண்மையில் அவர்களுக்கு பார்ப்பனர்மேல் யாதொரு வெறுப்பும் கிடையாது. இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சிலரால் ஏவப்பட்டு இவர்கள் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்கிற அச்சம் எழுகிறது.
ஆனால் இவர்களின் இத்தகைய முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்று பார்க்க எண்ணினால், ஒரு முறை ஏதாவதொரு கோவிலுக்கோ, சமயச் சொற்பொழிவுக்கோ, திருவிழாவுக்கோ சென்று பாருங்கள். எங்கு பார்த்தாலும் "ஜேஜே" என்று கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் பக்தியும், ஆன்மீக ஈடுபாடும் பன்மடங்கு பெருகி வருவதைக் காண முடிகிறது.
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: மனித நேயம் :: நாள்: மா 19th, 2007. 38 மறுமொழிகள்.
"வைGo" மருவி "வைKo" ஆனதுபோல, காஃபி, "காப்பி"யாகி "சூப்பர்" மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், "சூப்பர்" என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து, பழைய இலக்கியங்கள் எதிலாவது ஒரு புலவர் தன் ("போத்தீஸ்" என்று 200 சைஸ் ஃபாண்டில் எழுதப்பட்ட) பிக் ஷாப்பர் பை சகிதம் வந்து, "மன்னா, உங்கள் அழகைப் பற்றி ஒரு 'சூப்பர்' பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். கட்டாயம் 25 பொற்காசுக்குக் குறையாமல் கொடுக்காவிட்டால், எதிரி மன்னன் அணியில் சேர்ந்து விடுவேன்" என்று மிரட்டும் வெண்பா எதாவது கண்டுபிடிக்கலாம். சரி நேயர்களே (அந்தக் காலத்தில் "ரேடியோ சிலோனி"ல் 'ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம்' இப்படித்தான் அடிக்கடி சொல்வார்!), இப்போது நாம் கதைப்பது காப்பியைப் பற்றியல்லவா!
சமீபத்திய மறுமொழிகள்