துளித்துளி

ஒக்கத் திருந்தி உலகோர் — நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி
— பாரதியார்

autumn leaves

0

வண்ணக்களை மாற்றி குளிர் காலத்திற்கு கட்டியம் கூறி வரவேற்கத் தயாராகும் இலைகள்!

உதிர்வதற்குமுன் உதிர நிறம் ஏன்! மறையும்முன் ஏனிந்த மாற்றம்!

மரங்களின் தோல்மேல் புதிய வண்ணப் பூச்சுடன் கூட, பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்ற அதிசயத்தை இப்போது காண முடிகிறது! ஏன் இந்த இலைகள் இலையுதிர் காலத்திற்குமுன் தங்கள் இயல்பான பச்சை நிறத்திலிருந்து பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறத்திற்கு மாறுகின்றன? இனி வரப்போகும் குளிர்காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காது என்பதால், பச்சையத்தால் பயனில்லை என்று அதனை மறைத்து வித்தை காட்டுகிறதா இயற்கை?

விடைகளை இங்கே, இங்கே காணலாம். இதனைப் பற்றிய கவிதை ஒன்றை இந்தப் பதிவில் வாசியுங்களேன்!

சார்ந்த வகை: இயற்கை :: நாள்: . மறுமொழி இடுக#