சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கப்போகும் இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
அடுத்து நிகழப்போவது என்ன?
செயல் வீரரான கலைஞர், இந்தச் சமுதாயப் புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதில் தானே முன்னோடியாகத் திகழ, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொந்தமான "கலைஞர் டிவி" மற்றும் இப்போது சண்டை சச்சரவெல்லம் ஒரு வழியாக ("ரவுண்டாக") முடிந்து ராசியாகி விட்ட "சன் டிவி" நிறுவனங்களில் உடனடியாக இட ஒதுக்கீடு அமல் படுத்திவிட்டதாக ஒரு அறிவிப்பு வரப்போகுது பாருங்கள்!
வாழ்க சமூக சிர்திருத்தம். வளர்க இட ஒதுக்கீட்டு அரசியல்!!
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: டிச 13th, 2008. 1 மறுமொழி.
சமீபத்திய மறுமொழிகள்