நங்கை மடவன்னம்

புத்தகப் பரண் :: மறுமொழி ஒன்று »

vaduvur duraisamy iyengarஅந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, தெய்வ ரம்பையோ என எவரும் ஐயுற்றுக் கலங்கி உருகும்படி, மக அற்புதமான சிருஷ்டியாய் அமைந்திருந்த அந்த வடிவழகியின் சிரத்தில் நீண்டு கருத்து அடர்ந்து மினுமினுப்பாய் காணப்பட்ட அளகபாரம் கண்கொள்ளாத எழிலாய் விளங்கியது. அவளது முகார விந்தத்தைக் காணும்போது எல்லாம், கபடமற்ற மாடப் புறாவின் முகமே எவர் மனத்திலும் நினைவுக்கு வரும். அந்த முக மண்டலத்தில் இருந்து ஜ்வலித்த அற்புதமான காந்த சக்தி எந்த இடத்தில் ஒளிய வைக்கப்பட்டிருந்தது என்பது அவளைப் படைத்த பிரம்மாவுக்குக் கூட தெரியுமோ, தெரியாதோ என்று நாம் நிச்சயம் ஐயுறலாம்.

அந்த மடவன்னம் அவளது தாயின் கர்ப்பத்தில் ஒளிந்திருந்த காலத்தில் எந்தத் தெய்வம் கூடவே மறைந்திருந்து அளவுகளை எடுத்து வசீகர சக்திகளை அமைத்து, அத்தகைய அற்புத உருவைச் சிருஷ்டித்து உதவியதோ, எதற்காக அந்தத் தெய்வம் மறைந்திருந்து அப்படி அரும்பாடு பட்டதோ என்று எவரும் கருதி பிரமித்து மயக்கும்படி அந்த மாதரசியின் வடிவம் அமைந்திருந்தது. வில் போல வளைந்து அடர்த்தியான புருவ ஜதையும், காதளவோடிய கலகக் கண்களும், அமிர்தம் கசிந்த குங்கும நிற இதழ்களும், முகத்தைப் பழித்த பற்களும், மார்பில் கம்பீரமாய் விம்மி நிமிர்ந்து குவவி நின்ற சக்கரவாள மிதுனமும், சரிந்து குறுகிய துடி இடையும், கான்போர் உயிரைக் குடித்த தொடை, பின் தட்டு ஆகியவற்றின் சாமுத்திரிகா லட்சண அமைப்பும், புஷ்ப இதழின் மிருத்தன்மையையும், தந்தக் குச்சிகளின் தோற்றத்தையும் கொண்டிருந்த கை விரல்களும், ஒன்றுகூடி சதா காலமும் கோடிக்கணக்கில் மன்மத பாணங்களை எய்தபடி இருந்தன. ஆதலால் அந்த இன்பவல்லியைக் காணும்போது பஞ்சேந்திரியங்களும் ஒரே நொடியில் கலங்கிக் கலகலத்து நெக்குவிட்டுப் போமென்று திண்ணமாய்க் கூறலாம்.

எப்படி இருக்கிறது வர்ணனை! மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 1184 முறை) ::

வசந்தத்தின் மேலேறிய திருத்தலம்

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

நிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்!

Sacred heart on a full stomach

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1142 முறை) ::

கூலி போர்ட்டர்களின் நன்கொடை!

மனித நேயம் :: மறுமொழி ஒன்று »

மதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.

ganesh temple

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 1124 முறை) ::

இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல!

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

"பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்."

மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!

இதோ அந்தக் கேள்விகள்:-

  1. போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?
  2. பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?
  3. மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?
  4. ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?
  5. ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?
  6. காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?
  7. கென்னடியைக் கொன்றது யார்?
குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 926 முறை) ::

நெருடல்கள்

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!

  1. "ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்" என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?
  2. இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?
  3. கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய கூற்று சரியா?
  4. நேரடியாக கச்செரிகளில் கேட்கும்போது நன்றாக இருந்த பாட்டு ரெகார்டு செய்து கேட்டால் நன்றாக இருப்பதில்லையே, ஏன்? ஒருவேளை நேரில் கேட்கும்போது visual effect தூக்கலாக இருப்பதால் பாடுபவர்களின் குறைகள் நம் மனத்தில் பதிவாவதில்லையோ!
  5. கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடகர்களும் பக்க வாத்தியக்காரர்களும் மைக்செட் – சவுண்டு டெக்னீஷியன்களிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்களே, ஏன்?
  6. பி.ஜே.பி தன் தனித்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சியின் B Team போல் ஆகிவிட்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்களே, இது முற்றிலும் சரியா?
குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 765 முறை) ::

சாட்சியாய் நிற்கும் மரங்கள்

மனித மனம் :: மறுமொழி ஒன்று »

மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் – பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் – இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்!

தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக – இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக தற்போது நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும், சட்டப் புத்தகங்களும் பெருத்துவிட்டன. ஆனால் அந்த இடங்களின் நடைமுறைகள் பெரும்பாலும் கற்கால மனிதனின் போக்கில்தான் நிகழ்கின்றன.

courtஇங்கு நீங்கள் காணும் நீதிமன்ற வளாகத்தில் நிழல் தந்துகொண்டிருக்கும் மரங்கள் எத்தனை கதைகளைக் கேட்டிருக்கும்! எத்தனை அழுகைகள், ஆத்திரங்கள், மன மாச்சரியங்கள், சவால்கள், பொய்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், வாதங்கள், பழிவாங்கல், சீரழிவுகளின் சின்னங்கள்…

அந்த மரங்களுக்குமட்டும் எழுதும் திறமை இருந்தால் எத்துணை சுவாரசியமான படைப்புகள் நமக்குக் கிட்டியிருக்கும்!

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 950 முறை) ::

விபரீதக் காரணிகள்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

upanayanamநண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் பிரம்மத்தின் சூக்‌ஷ்மத்தை அறியவைக்கும் “சாவித்திரி” என்ற பெயர் கொண்ட காயத்ரி மந்திரத்தை கற்பித்து, இல்லை – ஓதுவித்து – அதற்கு அடையாளமாக ஒரு முப்பிரி நூலை அந்த ஆண்மகனின் இடப்புறத் தோளில் அணிவிக்கின்ற நிகழ்ச்சி. இந்த பூணல் பற்றிய விவரங்களை பிரிதொரு நாளில் விவாதிப்போம். தற்போது நான் எடுத்துக் கொண்டுள்ள பொருள் அதன் தன்மையைப் பற்றியதல்ல.

அன்று பூணல் “கல்யாணம்” செய்து கொண்ட பையனின் வயது 7 (”கர்ப்பத்தில் இருந்ததைச் சேர்த்து ஏழு” – பையனின் அப்பா). விளையாட்டிலேயே கவனம் கொண்டிருக்கும் சிறு பையன். புகையும், அனலும், இறைச்சலும், பசியும் சேர்ந்து அவனைச் சோர்வடைய வைத்திருந்தன. பிரம்மோபதேசம் முடிந்ததும், உறவினர்களுக்கு நமஸ்காரம் செய்யும் சடங்கு. bikshaiபிறகு வீட்டில் பெரியவர்களிடமிருந்து “பிக்‌ஷை” வாங்கும் நிகழ்ச்சி. பையன் எழுந்து நின்று “பவதி பிக்‌ஷாந்தேகி” என்று ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும். அந்தப் பெண்மணிகள் ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து ஒரு லிட்டர் அளவு அரிசியை எடுத்து பையனிடம் கொடுப்பர். அதை அவன் மறுபடியும் அந்தப் பாத்திரத்திலேயே திருப்பிக் கொட்டிவிடுவான். பிறகு இன்னொரு பெண்மணி. இப்படித் தொடர்ந்தது இந்தச் சடங்கு.

ஒரு நிலையில் அந்தச் சிறுவனால் தாங்க முடியவில்லை. அழத் தொடங்கிவிட்டான். பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். ஆனால் விடவில்லை, பெற்றோரும் உறவினரும். அழுது கொண்டே நின்ற அந்தச் சிறுவனின் நிலை பார்க்க பரிதாபமாக இருந்தது.

பையனின் தந்தையிடம், ”ஏனய்யா அந்தச் சின்னப் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதை வைத்துக் கொள்ளக் கூடாதா? இவனுக்கு இருக்கும் ஸ்கூல், ஸ்பெஷல் கிளாஸ், ஹோம் ஒர்க், கிரிக்கெட், டி.வி இதனூடே இவன் என்ன சந்தியாவந்தனம் செய்து கிழிக்கப் போகிறான்?” என்று வினவியதற்கு அவருடைய பதில்:

“அவ்னுடைய வயதான பாட்டி நான் இருக்கும்போதே பேரனுக்கு பூணல் போட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசைப் பட்டாள். அதனால்தான்”

காரணத்தைப் பார்த்தீர்களா! பையனின் வயதோ, சுகமோ அவனுடய ஒப்புமையோ முக்கியமல்ல. இன்னொருவருடைய ஆசை, fanciful wish அதுதான் முக்கியம்!

இதாவது பரவாயில்லை. பல ஒவ்வாத திருமணங்கள் இதுபோன்ற காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன:

  • சொத்து குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது,
  • ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவு விட்டுப் போகக் கூடாது,
  • பெரியவருக்கு இறக்குமுன் வாக்குக் கொடுத்துவிட்டேன்,
  • மனப் பொருத்தம் பார்க்காமல் ஒரு அறைகுறை ஜோசியனின் வாக்கை நம்பி முடிவெடுத்தல்,
  • சாமியார் சொல்லிவிட்டார் என்று முடிச்சுப் போடுவது
  • பெரிய இடத்து சம்பந்தம்

இப்படி தொடர்பில்லாத காரணிகளையும் அளவுருக்களையும் கருத்தில் கொண்டு திருமணம் என்னும் வாழ்வின் மிகமுக்கிய கட்டத்தினை தீர்மானிக்கின்றனர். இப்படி பொருந்தா மணம் எப்படித் தொடர்கின்றது? அந்தப் பையனோ பெண்ணோ சினிமாக்களாலும் ஊடகங்களாலும் உந்தப்பட்டு படிக்கும் காலையிலேயே காதல் வசப்பட்டிருந்த சிக்கல் வெளியே தெரியவந்தபின் மணமுறிவுக்காக நீதிமன்ற வாசலில் நிற்கும் நிலை வருகிறது. அந்நேரத்தில் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி நின்ற கிரகங்களோ, தேவதைகளோ, மந்திரங்களோ துணை நிற்பதில்லை. வக்கீல்களும், சாட்சிகளும், பிணைகளும் தான் கூட வருகின்றன. அவ்விடத்தில் உண்மைக்கும் வேலையில்லை, உணர்வுக்கும் வேலையில்லை.

சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறை மாற்றங்களையும், வெளிச் சூழலின் பாதிப்பால் நிகழும் மனவெழுச்சிகளையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தினிடையே எழுந்துள்ள பழமை எதிர்ப்பையும் மனத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தால், பின்னர் தோன்றும் பல கசப்பான நிகழ்வுகளை தடுக்கலாம்.

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 722 முறை) ::

அன்னையர் தினம்

ஹிந்து மதம் :: மறுமொழி இனிமேல்தான் »

பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல.

ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் அமைக்கப்பெற்றிருக்கும் அறிவிப்புப் பலகையைக் காணுங்களேன்!

நாகை நீலாயதாக்‌ஷி ஆலயம்

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 756 முறை) ::

கேலிக்கூத்து!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

செய்தி: தினமல்ர் 2009-04-04

செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வனிதாகுமாரி(24). கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி தாம்பரத்திலிருந்து கல்பாக்கத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். பின் சீட்டில் அமர்ந்திருந்த முகையூரைச் சேர்ந்த வக்கீல் அன்பழகன் அவரை உரசியதாகக் கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த அவர் அன்பழகனை கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டருக்கும், வக்கீலுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அன்பழகன் மானபங்கப்படுத்தியதாக வனிதாகுமாரியும், சில்லரை கேட்டதால் கண்டக்டர் தாக்கியதாக அன்பழகனும், அன்பழகன் தாக்கியதாக தங்கவேலும் தனித்தனியே சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். பணியிலிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா தன்னை தாக்கியதாக வக்கீல் அன்பழகன் செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் சுகுணா ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு அளிப்பதற்கான மனுவையும் தாக்கல் செய்யவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சுகுணாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 794 முறை) ::

எல்லாம் இன்ப மயம்

இசை :: 3 மறுமொழிகள் »

என் சிறுவயதில் கீழ்வேளுர் வால்வ் ரேடியோவின் மூலம் கேட்ட காலத்திலிருந்து நாளதுவரை இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம்.எல். வசந்தகுமாரியின் கம்பீரமான கார்வைகளும் அதிர் வேட்டு பிருகாக்களும், அதற்கு முழு contrast-ஆக மென்மைமிகு பி.லீலாவின் ஜலஜலவென்று நீரோடைபோல் ஓடிவரும் ஸ்வரக் கோர்வைகளும் இணைந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இசை வெள்ளம் இது!

Ellam Inba Mayamஅந்தப் படத்தைக் காணும் வரையில் இது ஒரு நாட்டியப் பாடல் என்றே எண்ணியிருந்தேன். படம்: மணமகள். நடிப்பு: ”நாட்டியப் பேரொளி” பத்மினி மற்றும் அவருடைய சகோதரி லலிதா. இவர்களோடு இன்னொரு சகோதரியான ராகினியும் இணைத்து அக்காலத்தில் “திருவிதாங்கூர் சகோதரிகள்” என்று பிரபலமானவர்கள்.

நடுவில் பாட்டு வாத்தியாராக அமர்ந்திருப்பவர் பிரபல குணசித்திர நடிகர் டி.எஸ். பாலையா. இந்தப் படத்தில் அவர் வில்லனாக வருகிறார்.

இந்தப் பாடலின் ராகம்: சிம்மேந்திர மத்தியமம்.

இந்தப் பாடல் வரும் காட்சியை டிவியிலிருந்து பதிவு செய்து யாரோ ஒரு புண்ணிவான் Youtube-ல் வலையேற்றியிருந்தார். அதை இதன்கீழ் இணைத்திருந்தேன். ஆனால் அந்தப் பதிவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டனர் – ஒரு மகாபாவி எதிர்ப்பு தெரிவித்ததால்! Spoilsports!

ஆனால், இன்னொருவர் அதை நிச்சயம் வலையேற்றுவார். அதுவரை பொறுத்திருப்போம்.

கிடைத்துவிட்டது! (நன்றி, ஆர்.வி.ராஜு.)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Ellam Inba Mayam

அந்தப் பாடலின் ஒலி வடிவை இங்கே கேட்கலாம்:

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

இதே பாடலை திருமதி நித்யாஸ்ரீயும் இன்னொரு பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பதின் ஒளிப்பதிவை இதன்கீழ் காணலாம்.

ஆனல் எம்.எல்.வியின் கம்பீரமும், சிம்மேந்திர மத்தியம ராகத்திற்கு வேண்டிய காத்திரமும் நித்யாஸ்ரீயின் குரலில் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள்!
(உழைத்துப் பாடியிருக்கிறார்கள். ஆனால் குழைவு மிஸ்ஸிங்!)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Ellam Inba Mayam - by NityaSri

குறிச்சொற்கள்: , , , , , , , , ,
:: (பார்வை 1521 முறை) ::

 

21-ல் இது-212345...கடைசி »
WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 5451 access attempts in the last 7 days.