திரைப்படங்களும், ஊடகங்களூம், நாவல்களும் ஏதோ காதல் செய்வதுதான் இளைஞர்களின் வாழ்வின் மிக அத்தியாவசியமான கடமை போன்ற – அன்றாடம் சாப்பாடு சாப்பிட்டு பாத்ரூம் போவது போல் – ஒரு தோற்றத்தை உண்டாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அதைப் பற்றியே துவைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. 45-50 வயது தாத்தாக்களெல்லாம் (டை, விக், பான்கேக் சகிதம்) கல்லூரி இளைஞர் வேஷம் போட்டுக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கால இளைஞர்கள் (நகரங்களில் வசிக்கும் படித்தவர்களைக் குறிப்பிடுகிறேன்) அப்படி ஒன்றும் காதல் திருமணம் செய்வதில் அவ்வளவு முனைப்பாய் இருப்பதுபோல் தோன்றவில்லை. இன்றைய நிலையில் எல்லோர் மனமும் தன் எதிர்காலத்தை நிலைப்படுத்தும் வேலையிலேயே வியாபித்து நிற்கின்றது. They have become so career-oriented that they have neither the time nor inclination for indulging in such fancies!
எனக்குப் பழக்கமான ஒரு இளம்பெண்ணை அன்றைய தினம் இஸ்பஹானி சென்டரில் சந்தித்துக் கேட்டேன், "என்ன மத்ஸ், BPO வேலையிலே சேர்ந்தாச்சு; அடுத்தது யாராவது பையன்களை லவ் பண்ணி அதிலே ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. பார்க்க கொஞ்சம் பரவாயில்லாம இருக்கேயே, பசங்க ஒத்தனும் கண்டுக்கல்லையா" அப்படீன்னு கேட்டேன். அதற்கு அவள், "அங்க்ஸ், கல்யாணமெல்லாம் பெரிய responsibility. அதெல்லாம் அப்பா, அம்மா பாத்துக்குவாங்க. எனக்கு லைஃப்ல செட்டில் ஆகணும். MBA பண்ணனும் (சில படிப்பெல்லாம் "படிக்கிறது" கிடையாது – "பண்ணறது" தான்!). கைல கொஞ்சம் காசு சேக்கணும், நல்லா டிரெஸ் பண்ணனும், ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கணும். அவ்வளவ்தான்" இப்படிப் போகிறது அவளுடைய சிந்தனைகள்.
சரி. இவர்களின் பெற்றோர்கள் செயல்பாடுதான் என்ன? மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: ஏப் 7th, 2005. 12 மறுமொழிகள்.
இந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது! தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், "அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி" என்பதுபோல்! நான் சொல்வது உலகிலேயே மிகச் சிறிய வலைத்தளத்தைப் பற்றி. சரி, அதைப் பார்த்தேயாக வேண்டுமா?
இங்கே சென்றால் தெரியப் போகிறது!
ஆனால் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அலங்காரம் செய்யவேண்டி வந்து, அதற்கு சம்பந்தமில்லாதபடி அநியாயமாக "மூக்குக் கண்ணாடி" என்று பெயரிட்டு, உங்கள் மூக்குக்கு என் மேல் கோபம் வந்தால் நான் ஜவாப்தாரியல்ல! அதுவும் என் இந்தப் பதிவுக்கு அப்புறம்!
சார்ந்த வகை: கணினி :: நாள்: ஏப் 19th, 2005.
சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவர் ஒரு மூத்த அரசுத்துறை அதிகாரி. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? நடிகர் விவேக். நிகழ்ச்சி தொடங்கி வெகு நேரம் கழித்து, வரவேற்புரையெல்லாம் கடந்து, அந்த அரசு அதிகாரி தன் உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மிகவும் ஆர்ப்பாட்டமாக வந்தார் விவேக் – ஒரு கசமுசா சட்டை, குள்ளமான உருவம், முழு மேக்கப், மேடையில் ஏறியபின் ஒரு பெரிய கும்பிடு!
அந்த அதிகாரி பாவம். அவர் தயாரித்து வந்திருந்த உரையை ஏராளமான புள்ளி விவரங்களுடன் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்வையாளர் மத்தியிலிருந்து தொடர்ந்து கைதட்டல்கள். "ஓ" என்ற இரைச்சல். அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பேச்சில்தான் ஏதோ குறை என்றெண்ணி "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். புள்ளிவிவரங்கள் அவ்வளவாக சுவாரஸியமாக இருக்காதுதான். ஆனாலும் என் கடமையைச் செய்யவேண்டாமா" என்று கூறிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் கைதட்டல், கூச்சல், "விவேக் பேசட்டும்".
ஆச்சு, அந்த ஆளை விரட்டியாயிற்று. அவரும் "கிரைண்ட்" பண்ணிக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம். விவேக் மைக்கைப் பிடித்தார். "என்னை வாழவைக்கும் ரசிகப் பெருமக்களே!" – பெருத்த கரகோஷம். முதலில் தனக்குமுன் பேசியவரை மறைமுகமாக கிண்டலடித்தார், "என்ன, ரொம்ப நொந்து போயிருக்கீங்களா? அன்ரிஸர்வ்டுல பிரயாணம் பண்ணினவங்க மாதிரி களைச்சுப் போயிருக்கீங்க". பிறகு அரதப் பழசு இரெயில்வே சம்பந்தமான ஜோக்குகள் சிலவற்றை தட்டுத் தடுமாறி உதிர்த்தார். பிறகு எங்கே விட்டுவிடுவாரோ என்று நினைத்த "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" அயிட்டத்தையும் அவிழ்த்து விட்டார். பிறகு? பிறகென்ன, கைவசம் சரக்கு அவ்வளவுதான். "எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள், நல்ல உள்ளங்களே" என்று விளம்பரம் வைத்தார். சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி, ஒரே சொதப்பல்தான்.
இதிலிருந்து நம் மக்களுக்கு தெளிவாக ஒன்று புரிதல் வேண்டும். நடிகர்களுக்கு வரும் புகழுக்கு முக்கிய காரணம், வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களின் முக்கிய பங்களிப்புதான். அவர்கள் இல்லையெனில் இவர்கள் வெறும் ஓட்டைக் காலணாதான்! ஆனால் நம் மக்கள்தான் சினிமா நடிகர்களின்மேல் உள்ள மோகத்தில் மயங்கியிருக்கிறார்களே! அன்று பல சின்னஞ்சிறிசுகள் விவேக் என்ன உளறினாலும் சிரிப்பு என்று மயங்கி நின்றதைக் கண்டேன். அவரைக் "கண்ணால் காண்பதே எங்கள் பாக்கியம்" என்று முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள் பலர்.
என்று வரும் இவர்களுக்கு விவேகம்?
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஏப் 20th, 2005. 5 மறுமொழிகள்.


சமீபத்திய மறுமொழிகள்