பொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு ஆல்பம், கிழிந்து சிதிலமாக இருந்தது. திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷன் அருகில் பிளாட்பாரம் கடையில் வாங்கியதாக நினைவு.
அந்தப் படங்களை மெனக்கெட்டு தோசை வார்ப்ப்பது போல் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து (சரி, மின்வருடி), அதை சரி செய்து இதன் கீழ் இட்டிருக்கிறேன்.
Enjoy!















