<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை &#187; tamil</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/tag/tamil/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளம் நிறைந்த உணர்வுகள்!</description>
	<lastBuildDate>Fri, 19 Mar 2010 08:13:23 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/#comments</comments>
		<pubDate>Fri, 05 Jun 2009 05:29:16 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[rajnikanth]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[vaiko]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[ரஜனிகாந்த்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=382</guid>
		<description><![CDATA[&#034;பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.&#034;
மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>&#034;பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.&#034;</p></blockquote>
<p>மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக <a href="http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11398">தினமலர் செய்தி</a> வெளியிட்டுள்ளது.</p>
<p>இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.</p>
<p>அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!</p>
<p>இதோ அந்தக் கேள்விகள்:-</p>
<ol>
<li>போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?</li>
<li>பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?</li>
<li>மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?</li>
<li>ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?</li>
<li>ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?</li>
<li>காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?</li>
<li>கென்னடியைக் கொன்றது யார்?</li>
</ol>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>எம்.எம்.தண்டபாணி தேசிகர்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 11 Mar 2008 05:22:31 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[carnatic]]></category>
		<category><![CDATA[dandapani desikar]]></category>
		<category><![CDATA[music]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[தண்டபாணி தேசிகர்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/230</guid>
		<description><![CDATA[  
எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 &#8211; 1972)
பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். &#039;பட்டினத்தார்&#039; தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த &#039;நந்தனார்&#039; படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), &#039;முதல் தேதி&#039; (1955) படங்களிலும் தேசிகரின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://lh5.google.com/skichu/R9X52NV738I/AAAAAAAAApE/x4nZpFomV1o/s144/MMDandapanidesikar01.jpg" alt="MMDandapanidesikar" /> <img src="http://lh5.google.com/skichu/R9X5NNV735I/AAAAAAAAAoo/rTxMHZ_8lko/s144/dandapani.jpg" alt="தேசிகர்" /> <img src="http://lh4.google.com/skichu/R9X5M9V733I/AAAAAAAAAoY/cSSW9VHNP_4/s144/2007062950710302.jpg" alt="தேன்குரல் தேசிகர்" /></p>
<p><strong>எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 &#8211; 1972)</strong></p>
<p>பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். &#039;பட்டினத்தார்&#039; தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த &#039;நந்தனார்&#039; படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), &#039;முதல் தேதி&#039; (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.</p>
<p>தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், &#034;ஜகஜனனீ &#034;, &#034;என் அப்பன் அல்லவோ&#8230;&#034;, &#034;தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்&#034;, &#034;வழிமறித்து நிற்குதே&#034;, &#034;காண வேண்டாமா&#034; முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.</p>
<p>தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-</p>
<p>&#034;துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ<br />
இன்பம் சேர்க்க மாட்டாயா? &#8211; எமக்கு<br />
இன்பம் சேர்க்க மாட்டாயா? &#8211; நல்<br />
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ<br />
அல்லல் தீர்க்க மாட்டாயா? &#8211; கண்ணே<br />
அல்லல் நீக்க மாட்டாயா?&#034;</p>
<p>அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகாளையும் அவர் புனைந்துள்ளர்.</p>
<p><a href="http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=14&#038;cid=14">தென்றல் இணைய இதழில்</a> &#034;ஆதி&#034; அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-</p>
<blockquote><p>சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் &#8211; குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.</p>
<p>ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண &#039;இசை விருந்து&#039; இருக்க வேண்டும். இதற்கான &#039;இயக்கம்&#039; வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.</p></blockquote>
<p>சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-</p>
<blockquote><p>&#8230; இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.</p>
<p>தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.</p>
<p>ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.</p>
<p>ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் &#8211; இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் &#034;காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி&#034; என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, &#034;ஏன் முடிக்கிறார்?&#034; என்று தோன்றியது.</p></blockquote>
<p>&#034;நந்தனார்&#034; மற்றும் &#034;திருமழிசை ஆழ்வார்&#034; திரைப்படங்களில் தேசிகரின் பாடல்களைக் கேட்க இங்கே செல்லுங்கள்:-</p>
<ul>
<li><a href="http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4904/">மியூசிக் இந்தியா தளம்</a></li>
<li><a href="http://cinefolks.com/tamil/AudioSongs/lyrics/Kothamangalam+Subbu/">சினி ஃபோக்ஸ் தளத்தில்</a></li>
<li><a href="http://www.raaga.com/channels/tamil/searchresults.asp">ராகா வலைத்தளம்</a></li>
</ul>
<p>[1] &#034;சங்கீத யோகம்&#034; &#8211; தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு &#8211; தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அபிதான கோசம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/01/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/01/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 21 Jan 2008 03:37:02 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[புத்தகப் பரண்]]></category>
		<category><![CDATA[encyclopedia]]></category>
		<category><![CDATA[lexicon]]></category>
		<category><![CDATA[sanskrit]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[சமஸ்கிருதம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/214</guid>
		<description><![CDATA[சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது &#034;அபிதான கோசம்&#034; என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், &#034;Asian Educational Services&#034; நிறுவனத்தினர்.
அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-

இது
யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ. முத்துதம்பிபிள்ளையால்
செய்து,
இலங்கை இராஜ்மந்திர சபை
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி
ஸ்ரீமான். பொ. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது &#034;<abbr title="ISBN :8120600088">அபிதான கோசம்</abbr>&#034; என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், &#034;<a href="http://www.asianeds.com/" title="ஆசிய கல்விசார் சேவை நிலையம்">Asian Educational Services</a>&#034; நிறுவனத்தினர்.</p>
<p>அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-</p>
<div align="center">
இது<br />
யாழ்ப்பாணத்து மானிப்பாய்<br />
<strong>ஆ. முத்துதம்பிபிள்ளையால்</strong><br />
செய்து,</p>
<p>இலங்கை இராஜ்மந்திர சபை<br />
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி<br />
<strong>ஸ்ரீமான். பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய</strong><br />
வித்தியாபிமான ஞாபகச்சின்னமாகச் சமர்ப்பித்துப்<br />
பிரகடனஞ் செய்யப்பட்டது.
</div>
<p>இந்நூலை ஆக்கியோரான முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம், நாவலர் தோட்டம் முகவரியிட்டு எழுதியுள்ள முகவுரை இவ்வாறு தொடங்குகிறது:-<br />
<span id="more-214"></span></p>
<blockquote><p>பூவுலகத்திலேயுள்ள பாஷைகளுள்ளே வடமொழியும், தென்மொழியும் மிகப்பழமையும், இலக்கண வரம்பும், நூற்பெருக்கமும், அதிப்புராதன இதிகாசங்களும், ஞானநூன் மலிவும், நாகரிகவளமுமுடைய பாஷைகளென்பது ஆய்ந்தோர் துணிபாம். <strong>இருபாஷையாளரும் வைதிக சமயிகளேயாதலின் வேதபுராணேதிகாசங்களும் தரும நூல்களும், ஏனைய சாஸ்திரங்களும் இருவருக்கும் பொது நூல்களேயாம்.</strong> ஒரு நூலிலே ஒருவர்பெயர் கேட்கப்படும்பொழுது அவர் யாரென்றலும், எக்காலத்தவரென்றலும், யாதுசெய்தாரென்றலுமாகிய இன்னோரன்ன வினாக்கள் உதித்தல் வித்தியார்த்திகள் கண்ணும், வித்தியாவிநோதர்கள் கண்ணும் இயல்பேயாம்.</p>
<p>ஆதலின், வேதாகம புராணேதிகாசங்களிற் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், இருஷிகள், முனிவர்கள், அசுரர், யக்ஷர், கந்தருவர், கிந்நரர், அவதர புருஷர், பக்தர், அரசர், புலவர், வள்ளல்கள், வித்துவான்கள் முதலியோர் சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரம், நதி, தடாகம், விருக்ஷ முதலியவற்றின் வரலாறுகளும், தமிழ்நாட்டுப் பண்டைகாலத்து அரசர், புலவர், வள்ளல்கள் முதலியோர் சரித்திரமும், நூல்களின் வரலாறுகளும், வைதிக சாஸ்திரக் கொள்கைகளும் ஆராய்ந்துணர்தல் தமிழ் கற்போருக்கும், தமிழ்க் கலாவிநோதர்க்கும் இன்றியமையாதனவாம்&#8230;</p></blockquote>
<p>இந்நூலை வாசிக்கையில் ஒரு உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவருகிறது. இடைக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்துமுகமாக நம் மக்களை &#034;ஆரியர், திராவிடர்&#034; என்று இனப்பிரிவினை செய்து,  அந்த விஷவித்தை அவர்களுடைய கைக்குக்கூலிகள் அப்பாவி மக்கள் மனத்தில் விதைத்து அதை நீர்விட்டு வளர்த்த காலத்திற்கு முன்னர் தமிழும், சமஸ்கிருதமும் ஒருசேரப் பின்னிப் பிணைந்து அனைவராலும் கற்றுணரப்பெற்ற பொற்காலமாக அந்நாட்கள் விளங்கியிருந்திருக்கின்றன.</p>
<p>யாழ்வாழ் தமிழறிஞரின் நடையைக் காண்கையில் இருமொழிகளும் எவ்வாறு வெறுப்புணர்வின்றி சமநிலையில் மக்களால் கையாளப்பெற்றிருந்தது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.</p>
<p>இனவாத இருளிலிருந்து விலகி சத்திய ஒளியை நோக்கி ஏறுநடை போடுவோம். தமிழ்கூறும் நல்லுலகிலுள்ளோர் அனைவரும் நம் பாரதத்தின் தொன்மையான பாரம்பரியத்தை பேணிக் காப்போம்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/01/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>கர்நாடக இசையும் தமிழிசையும்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/12/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/12/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Mon, 24 Dec 2007 17:27:05 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[gnb]]></category>
		<category><![CDATA[music]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[ஜிஎன்பி]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/206</guid>
		<description><![CDATA[என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!
இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை &#034;மாம்பலம் சகோதரிகளி&#034;ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!</p>
<p><img src="http://cyberbrahma.com/wp-images/mambalam.jpg" alt="மாம்பலம் சகோதரிகள்" class="alignleft" />இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை &#034;<a href="http://kichu.cyberbrahma.com/archives/76">மாம்பலம் சகோதரிகளி</a>&#034;ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.</p>
<p>அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.</p>
<p><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"><img src='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/gnb1.jpg' alt='ஜி.என்.பாலசுப்பிரமணியம்' class="alignright" /></a>தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. <a href="http://www.sangeethapriya.org/~gnb/">ஜி.என்.பாலசுப்பிரமனியம்</a> (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். <a href="http://kichu.cyberbrahma.com/2006/12/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/">ஜி.என்.பி</a>.யின் &#034;திக்குத் தெரியாத காட்டில்&#034;, &#034;சொன்னதைச் செய்திட சாகசமா&#034;, &#034;மா ரமணன்&#034; போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் &#034;காவாவா&#034;, &#034;தாயே யசோதா&#034; போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. </p>
<p>ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை &#034;கர்நாடக இசை&#034; என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும். </p>
<p><a href="http://tamil.webdunia.com/miscellaneous/literature/stories/0706/02/1070602007_1.htm">டாக்டர் க. பூரணச்சந்திரன்</a> என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-<br />
<span id="more-206"></span></p>
<blockquote><p>
வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாய்ப்பாட்டில் அவர்களுக்கு மூன்று ஸ்தாயிகளிலும் உச்சம்வரை எட்டி மூச்சடக்கிப் பாடமுடியாவில்லை என்றாலும், பிறரை கர்நாடக வாய்ப்பாட்டுப் பக்கமே வரவிடாமல் செய்தார்கள்.
</p></blockquote>
<p><img src='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/dandapani.jpg' alt='எம்.எம்.தண்டபாணி தேசிகர்' class="alignleft" />இது எப்பேர்ப்பட்ட பொய்மைவாதம் என்பது இசையறிந்த அனைத்து மக்களுக்கும் தெரியும். காஞ்சீபுரம் நயினாப் பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றவர்கள் முதல், எம்.எம்.தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மதுரை சோமசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற எண்ணிறந்த கலைஞர்கள் வாய்ப்பாட்டிலும் வயலினிசையிலும் தலை சிறந்து விளங்கியது வரலாறு.</p>
<p><a href="http://farm3.static.flickr.com/2250/2133809974_ac53f0ac33.jpg" rel="lightbox[post]" title="Venkat Swaminathan"><img src="http://farm3.static.flickr.com/2250/2133809974_ac53f0ac33_t.jpg" alt="Venkat Swaminathan" width="87" height="100" class="alignright" /></a> &#034;<a href="http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm">தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் &#8211; இன்றைய சித்திரம்</a>&#034; என்னும் கட்டுரையில் எழுத்தாளர் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D">வெங்கட் சாமிநாதன்</a> அவர்கள் தமிழக இசை வரலாற்றை மிகச்சிறப்பாக எழுத்தில் வடித்திருக்கிறார்.</p>
<p>இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர் சாதிப் பாகுபாடின்றி இசையை செவ்வனே கற்று சிறப்பாகப் பாடுகின்றனர். பல இசைக் கருவிகளும் &#8211; தாள வாத்தியங்கள் உட்பட &#8211; &#034;பக்க வாத்தியம்&#034; என்ற நிலையிலிருந்து உயர்ந்து தனி கச்சேரிகளாக நிறைய இரசிகர்களின் ஆதரவைப் பெற்று சக்கைபோடு போடுகின்றன.</p>
<p>இன வெறுப்பை தூக்கிப் பிடிக்கும் குறுமதியினர் இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து, விதண்டாவதங்களை விடுத்து, ஆக்கபூர்வமான சிந்தனையை நோக்கி தங்கள் மனங்களைச் செலுத்துவார்கள் என எதிர்பார்ப்போம்! </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/12/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>இனிமே நாங்கதான்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 24 Nov 2007 03:55:04 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[cartoon]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[கார்ட்டூன்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/188</guid>
		<description><![CDATA[[There is a video that cannot be displayed in this feed. Visit the blog entry to see the video.]
]]></description>
			<content:encoded><![CDATA[<p>[There is a video that cannot be displayed in this feed. <a href="http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/">Visit the blog entry to see the video.]</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா?</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/#comments</comments>
		<pubDate>Mon, 05 Nov 2007 17:27:39 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[கணினி]]></category>
		<category><![CDATA[google]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[transliteration]]></category>
		<category><![CDATA[கருத்து]]></category>
		<category><![CDATA[கூகீள்]]></category>
		<category><![CDATA[தட்டச்சு]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[மறுமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/171</guid>
		<description><![CDATA[இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.</p>
<p>இவ்வாறு மிகப் பிரபலமாகியுள்ள தமிழ் இணையம், அனைத்து மக்களின் பங்கெடுப்பும் இல்லாமல் இருந்தால் விருவிருப்பு இருக்காது என்பதால், அதுபோன்ற இணைய தளங்களில் உங்கள் கருத்துக்களை இடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது- இந்த வலைப்பூவில் உள்ளதுபோல!!</p>
<p>ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.</p>
<p>சரி. என் வலைப் பதிவுக்கு வருகிறேன்!</p>
<p>இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், &#034;தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது&#034; என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் &#8211; இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?</p>
<p>ஆம். இது பிரச்னைதான்! இதனை எப்படித் தீர்ப்பது?<br />
<span id="more-171"></span><br />
என்ன யோசிக்கிறீர்கள்! தீர்வு உங்களுக்கு எளிதாகத் தெரிந்ததுதானே! ஏதேனும் விஷயங்கள் தெரிய வேண்டுமானால் சாதாரணமாக என்ன செய்கிறீர்கள்? &#034;கூகிளாண்டவரை&#034; நாடுகிறீர்களல்லவா! அதேபோல்தான் இதற்கும்!</p>
<p><a href='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/goog2.jpg' title='கூகிள் நேரடி தட்டச்சு - Click to enlarge' rel="lightbox"><img src='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/goog2.thumbnail.jpg' alt='கூகிள் நேரடி தட்டச்சு - Click to enlarge' class="alignright" /></a>ஆம். கூகிள் (Google) இப்போது Transliteration in Tamil முறைப்படி தமிழில் தட்டச்சு செய்ய அவர்களின் தளத்தில் வசதி செய்திருக்கிறார்கள். <a href="http://www.google.com/transliterate/indic/Tamil">இந்தத் தளத்திற்குச் சென்று</a> &#034;தமிங்கிலீஷில்&#034; அடித்தால் தமிழில் தெரியும். எல்லாம் அடித்தபின், அதனை மின்வருடி, நகலெடுத்து, என் கருத்துப் பெட்டியில் இட்டால் (copy and paste) முடிந்தது வேலை!</p>
<p>அந்தத் தளத்தில் அந்த சேவையை எங்ஙனம் பயன் படுத்துவது என்பதைப் பற்றி விரிவான செயல் விளக்கம் அளித்துள்ளார்கள்.</p>
<p>உதாரணத்திற்கு, &#034;அம்மா&#034; என்ற சொல்லுக்கு, முதலில் &#034;Ctrl+G&#034; அழுத்தி தமிழை தெரிவு செய்தபின், &#034;ammA&#034; அல்லது &#034;ammaa&#034; என்று தட்டச்சு செய்து பின்னர் &#034;ஸ்பேஸ்&#034; பாரை அழுத்தினால் &#034;அம்மா&#034; வருவாள்! ஏதாவது கால், கீல் நொண்டியானால் அந்த சொல்லின் மேல் கிளிக்கினால் கால், கையெல்லாம் கிட்டும்!</p>
<p>புகுந்து விளையாடுங்கள் அன்பர்களே!! <img src='http://kichu.cyberbrahma.com/wp-includes/images/smilies/icon_lol.gif' alt=':lol:' class='wp-smiley' />  </p>
<p>எஸ்.கே</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>மலரே மௌனமா&#8230;.!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/11/malare-maunama/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/11/malare-maunama/#comments</comments>
		<pubDate>Sun, 04 Nov 2007 18:41:07 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[cinema]]></category>
		<category><![CDATA[karna]]></category>
		<category><![CDATA[song]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[கர்ணா]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[பாடல்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/170</guid>
		<description><![CDATA[&#034;கர்ணா&#034; படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்&#8230;..!
வேறென்ன வேண்டும்!
நீங்களும் சிறிது ரசிக்கலாமே!
[There is a video that cannot be displayed in this feed. Visit the blog entry to see the video.]
]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#034;கர்ணா&#034; படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்&#8230;..!</p>
<p>வேறென்ன வேண்டும்!</p>
<p>நீங்களும் சிறிது ரசிக்கலாமே!</p>
<p>[There is a video that cannot be displayed in this feed. <a href="http://kichu.cyberbrahma.com/2007/11/malare-maunama/">Visit the blog entry to see the video.]</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/11/malare-maunama/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரு ஆட்டோக்காரரின் மனித நேயம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/10/empathy-of-an-auto-driver/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/10/empathy-of-an-auto-driver/#comments</comments>
		<pubDate>Sun, 28 Oct 2007 14:58:53 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித நேயம்]]></category>
		<category><![CDATA[auto]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[driver]]></category>
		<category><![CDATA[empathy]]></category>
		<category><![CDATA[humane]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[ஆட்டோ]]></category>
		<category><![CDATA[ஆட்டோக்காரர்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/165</guid>
		<description><![CDATA[அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே &#034;புர்&#034;ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே &#034;புர்&#034;ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!</p>
<p>அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். &#034;ஆகா, என்னே என் பாக்கியம்!&#034; என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!</p>
<p>ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.</p>
<p>ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.</p>
<p>ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. &#034;தோடா!&#034; &#8211; என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.</p>
<blockquote><p>&#034;சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்.&#034;
</p></blockquote>
<p>அவர் கண்கள் கலங்கி இருந்தன.</p>
<p>நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!</p>
<p>இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/10/empathy-of-an-auto-driver/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>களைகிறது பெரியாரிச மாயை!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/10/%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/10/%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88/#comments</comments>
		<pubDate>Thu, 11 Oct 2007 15:24:14 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[தேசீயம்]]></category>
		<category><![CDATA[dravidian movement]]></category>
		<category><![CDATA[periyar]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[ஈவேரா]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[திண்ணை]]></category>
		<category><![CDATA[திராவிடம்]]></category>
		<category><![CDATA[பெரியார்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/159</guid>
		<description><![CDATA[ஆம், ஏமாந்தது போதும்!. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய &#034;தீரா-விட&#034; அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!
இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>ஆம், ஏமாந்தது போதும்!</strong>. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய &#034;தீரா-விட&#034; அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!</p>
<p>இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!</p>
<ul>
<li>&#034;பெரியார் ஒரு தமிழ் இன விரோதி&#034; என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், &#034;குருவிகள்&#034; என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன் <a href="http://thedatsaram.blogspot.com/2007/10/10.html", title="பெரியார் தமிழ் இன விரோதி!">&#034;தேடற்சரம்&#034; வலைப் பதிவின் மூலம்</a>.</li>
<p></p>
<li>&#034;தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்&#034; என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய &#034;ஆப்பு&#034; ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், <a href="http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&#038;file_name=prasad%2Fprasad227%2Etxt&#038;writer=prasad">தன் ஆங்கிலக் கட்டுரையில்</a>. அதனை தமிழாக்கம் செய்து தன் <a href="http://jataayu.blogspot.com/2007/10/blog-post_6191.html" title="ஜடாயு எண்ணங்கள்">வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு</a> அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!</li>
<p>	
<li>&#034;<a href="http://santhipu.blogspot.com/2007/05/blog-post_24.html">சந்திப்பு என்னும் வலைப் பதிவர்</a>&#034; இத்தகைய &#034;தீரா-விட&#034; சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-</p>
<blockquote><p>பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து &#034;சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!&#034;, என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் &#8211; இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?</p>
<p>அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?
</p></blockquote>
</li>
<li>திராவிட மாயை என்பது ஒரு &#034;விஷச் செடி&#034; என்று துகிலுறித்துக் காட்டுகிறார், <a href="http://manamay.blogspot.com/2007/09/blog-post_21.html", title="ஒரு மனதின் ஒலம்">தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்</a>.</li>
<p>
<li>&#034;திண்ணை&#034; இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள <a href="http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=20609291&#038;format=html", title="திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை">இந்தக் கட்டுரை</a> வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.</li>
<p>
<li>ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய &#034;ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்&#034; என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை &#034;திண்ணை&#034; வலை இதழில் <a href="http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=60503113&#038;format=html">கட்டுரைகளாக வரைத்திருக்கிறார்</a>, &#034;விஸ்வாமித்ரா&#034; அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த <a href="http://www.thinnai.com/?module=archives&#038;op=searchauth&#038;search_string=+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE">சுட்டியில்</a> காணலாம்.</li>
<p>
<li>ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், <a href="http://www.kalachuvadu.com/issue-93/page11.asp">தன் &#034;காலச்சுவடு&#034; கட்டுரையில்</a>.</li>
</ul>
<p>தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயலாற்றும் இயக்கங்களுக்குத் துணைபோகாதீர்கள்.</p>
<p>வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/10/%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>சுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2006/01/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2006/01/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sat, 21 Jan 2006 10:42:07 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[breakfast]]></category>
		<category><![CDATA[pongal]]></category>
		<category><![CDATA[south india]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[taste]]></category>
		<category><![CDATA[ஆனந்தா லாட்ஜ்]]></category>
		<category><![CDATA[உணவு]]></category>
		<category><![CDATA[காலை]]></category>
		<category><![CDATA[சுவை]]></category>
		<category><![CDATA[டிஃபன்]]></category>
		<category><![CDATA[நெய்]]></category>
		<category><![CDATA[பொங்கல்]]></category>
		<category><![CDATA[மனம்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>
		<category><![CDATA[ரவாபொங்அல்]]></category>
		<category><![CDATA[வெண்பொங்கல்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=104</guid>
		<description><![CDATA[சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் &#034;ப்ரேக்ஃபாஸ்ட்&#034; என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் ஸ்டேஷனில் வண்டி ஏறித்தான் பொன்மலை செல்லவேண்டும். இரவு சாப்பாடு &#034;மாயவரம் லாட்ஜ்&#034; அல்லது &#034;ஆர்.டி.ஸி&#034;யில்.
அந்த ஆனந்தா லாட்ஜில் ரெகுலராக சாப்பிடுபவர்களுக்கு &#034;பில்&#034; கொடுப்பது கிடையாது. சாப்பிட்ட பிறகு &#034;கல்லா&#034;வில் இருக்கும் கணக்கு நோட்டில் நம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="/wp-images/Ven_pongal.jpg"><img src="/wp-images/_Ven_pongal.jpg" alt="வெண் பொங்கல்" title="வெண் பொங்கல்" align="left" height="166" hspace="2" width="250" /></a>சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் &#034;ப்ரேக்ஃபாஸ்ட்&#034; என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் ஸ்டேஷனில் வண்டி ஏறித்தான் பொன்மலை செல்லவேண்டும். இரவு சாப்பாடு &#034;மாயவரம் லாட்ஜ்&#034; அல்லது &#034;ஆர்.டி.ஸி&#034;யில்.</p>
<p>அந்த ஆனந்தா லாட்ஜில் ரெகுலராக சாப்பிடுபவர்களுக்கு &#034;பில்&#034; கொடுப்பது கிடையாது. சாப்பிட்ட பிறகு &#034;கல்லா&#034;வில் இருக்கும் கணக்கு நோட்டில் நம் பக்கத்தை எடுத்து நாமாக எவ்வளவு அணாவுக்கு சாப்பிட்டோம் என்று கணக்கு போட்டு எழுதிவைக்க வேண்டியதுதான். அடுத்த மாத ஆரம்பத்தில் கூட்டுப் புல்ளி போட்டு கணக்கை நேர் பண்ணவேண்டும். அநேகமாக யாரும் ஏமாற்றுவது கிடையாது. இப்படி நம்பிக்கையிலேயேதான் ஓடிக்கொண்டிருந்தது.</p>
<p>ஆனந்தா லாட்ஜில் டிஃபன் மிக ருசியாக இருக்கும். ஒருநாள் காலையில் &#034;கமகம&#034;வென்று நெய்ப்பொங்கல். நல்ல பசி வேறு எனக்கு.  ஒரு &#034;பிடி&#034; பிடித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு &#034;புஸ்தி&#034; மீசைக்காரப் பெரியவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று <span id="more-104"></span>அவர் தன் &#034;அதிர் வேட்டுக்&#034; குரலில், &#034;தம்பி, என்ன காரியம் பண்றீங்க? எங்க வீட்டுப் பையனா இருந்தா இன்னேரம் &#034;பளார்&#034;னு கோட்டறையா அறைஞ்சு, கட்டி வைச்சு புளியம்ப்ளாரால  விளாசியிருப்பேன்&#034; என்றார். எனக்கு ஒன்றுமே புரியல்ல. எல்லாரும் வேறே வேடிக்கை பாக்கறாங்க. உடனே அவர், &#034;ஏன் தம்பி,  இந்த பொங்கல்ல குந்துமணி கணக்கா முழிச்சுக்கிட்டு இருக்கு பாருங்க, இந்த நெய்யில வறுத்த மிளகையெல்லாம் பொங்கலோட சேர்த்து கண்ணில தண்ணி வற்ற மாதிரி கடிச்சு சாப்பிட்டு விட்டு, அதுமேலயே சுடச்சுட இந்த ஐயர் கொடுக்கற &#034;டிக்காக்ஷண்&#034; காப்பியையும் ஊத்திகிட்டு, அந்த ஆனந்தத்தை அனுபவிக்கறத்துக்காவே அஞ்சு மைல் வண்டி கட்டிக்கிட்டு இங்க வற்றேன் நான். நீங்க என்னடான்னா, &#034;குந்தினாப்ல&#034; ஒரொரு மிளகா எடுத்து எலைக்கு வெளீல போடறீங்களே&#034; என்று கடிந்து கொண்டார்.</p>
<p>அன்று தான் எனக்கு கீதோபதேசம் ஆயிற்று. &#034;ஆகா, எத்தகைய ப்ரஹ்மானந்தத்தை &#039;மிஸ்&#039; பண்ணிக் கொண்டிருக்கிறோம்&#034; என்று தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பொங்கலில் ஆழப் புதைந்திருக்கும் ரகசிய உருசிகளை தேடிச் சுவைப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, நாளது வரையில் அந்தத் தேடுதலிலேயே அனவரதமும் ஈடுபட்டு ஒரு முழுநேர வெண்பொங்கல் பக்தனாக மாறியுள்ளேன்.</p>
<p>திருமணமான புதிதில் நாங்கள் மயிலை லஸ் முனையில் மாடியில் இருந்த &#034;சாந்தி விஹார்&#034; ஹோட்டலில் பொங்கல் சாப்பிட்டோம் (இப்போது அந்த ஹோட்டல் இல்லை. ஆனால் அதே பெயரில் உள்ளடங்கி கேண்ட்டின் போல் ஒறு சிறிய கடைதான் இருக்கிறது). இன்றுவரை அதே பொங்கல் ருசியைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைக்கவில்லை. இப்போதுகூட என் மனைவி பொங்கல் செய்யும்போதெல்லாம் &#034;என்ன, சாந்தி விஹார் பொங்கல் மாதிரி வந்துடுச்சா?&#034; என்பார். நானும், &#034;அந்த ருசியை நீ மிஞ்சி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது&#034; என்று சொன்னாலும், இன்னும் ஒரு மாத்திரை கம்மியாக இருப்பதாகவே படுகிறது. அரிசி, பயத்தம்பருப்பு, பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, ஜீரகம், நெய் எல்லாம் அதது சரியான அளவில், சேரும் வரிசையில் (sequence), வேகும் பதத்தில் ஒன்றாகச் சேர்ந்து, ஸூபின் மேஹ்தாவின் இசைக்குழுவினர் வாசிக்கும் முத்தாய்ப்புச் சிகரம்போல் (crescendo of his symphony) அப்படியே &#034;ஜிவ்வென்று&#034; ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்கும் ரேஞ்சில் ஒரே தூக்காகத் தூக்கவேண்டும்!</p>
<p>என்னை இந்தப் பொங்கல் பைத்தியம் நன்றாகப் பிடித்துக் கொண்டு விட்டது. நள்ளிரவில் எங்கேயோ தூரத்தில் &#034;பொங்கல்&#034; என்று கிசுகிசுத்தால் போதும். அரக்கப் பரக்க எழுந்து லஜ்ஜையில்லாமல் உங்கள் கூட &#034;எங்கே எங்கே&#034;யென்று ஓடிவருவேன். என் உறவினரெல்லாம், &#034;ஏண்டா, இன்னும் &#039;பொங்கல் பொங்கல்&#039;-னு அலையறையாடா&#034; என்று கிண்டலடிக்கும்போதெல்லாம் என் மனைவி தலையில் தட்டிக் கொள்வார்.</p>
<p>ஒரு முறை பொங்கல் திருநாளன்று தியாகராஜ ஆராதனை உத்சவம் சென்றிருந்தேன். மதியம்தான் மாதம் பிறக்கப் போகிறது எனபதால் சாவகாசமாகப் பூஜை செய்யலாமென்று கச்சேரிகளைக் கேட்டுவிட்டு, தஞ்சை செல்ல பஸ் ஏறிய நான் சாலை திருப்பத்தில் திருவையாறு ஹோட்டல் ஒன்றில் &#034;சுடச் சுட நெய்ப் பொங்கல்&#034; என்று சாக்பீஸால் எழுதப்பட்ட போர்டைக் கண்டவுடன் குதித்து இறங்கி விட்டேன். முற்றிய கேஸ்தான்!</p>
<p>அதேபோல சாக்பீஸ் போர்டை இன்று சென்னையில் மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில்தான் காணலாம். அங்கும் முன்பு பொங்கல் நன்றாக இருந்தது. இப்போது ரொம்ப &#034;கமர்ஷியலாக&#034; ஆகிவிட்டது.</p>
<p>நிங்களும் ஒரு வெண்பொங்கல் அபிமானியா? சென்னையில் இன்றைய தேதியில் இரண்டு இடங்களை சிபாரிசு செய்வேன்:</p>
<ol>
<li>டிரைவின் வுட்லேண்ட்ஸ்</li>
<li>எழும்பூர் ஹோட்டல் அசோகா</li>
</ol>
<p>5 விண்மீன் விடுதிகளில் போய் உருசி தேடாதீர்கள். அந்தத் தாரகைகளின் எண்ணிக்கை குறிப்பதே, அங்கு உணவு எவ்வளவு வாரங்கள் ஆழுறை கொள்கலனில் உறங்கிக் கிடந்தது என்பதைத்தான்.</p>
<p>இன்னொன்று தெரியுமா? திர்லக்கேணி இரத்தினா கஃபே யில் இட்லி-சாம்பார் அணைக்கட்டு (கட்டம் கட்டி வெட்டுடா தமிழா!)  தான் சிறப்பு என்றெண்ணி வெண்பாவெல்லாம் பாடுகிறார்கள் &#034;ராயர் காபி கிளப்&#034; குழுமத்தில். அங்கு நல்ல பொங்கலும் கிடைக்கும் என்பது பலர் அறிவாரில்லை (ஒரு ஸ்பூன் நெய் கேட்டு அதன்மேல் ஊற்றிக் கொள்ளுங்கள்- அந்த சுதந்திரமெல்லாம் தனியாகப் போனால்தான் கிட்டும். &#034;கொலஸ்ட்ரால்&#034; மந்திரத்தை காதில் ஓதுபவர்கள் எழுமுன்னே நடையைக் கட்டுங்கள்!). ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை காலாற நடந்து சென்று ருசித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.</p>
<p>ம்ம். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. என்போன்ற பரம ரசிகர்களின்் வேண்டுகோளுக்கு இணங்க, டிரைவ் இன்னில் ஞாயிற்றுக் கிழமைதோறும் மாலையிலும் பொங்கல் போடுகிறார்கள். மேலும் வாரம் 3 நாட்கள் மதியத்திலும் பொங்கல் எட்டிப் பார்க்கிறது. பி.பி.ஸ்ரீனிவாசோடு நீங்களும் சேர்ந்து சாப்பிடலாம்!</p>
<p>ரவா பொங்கலைப் பற்றி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி யிருக்கிறேன். சீக்கிறமே நான் கண்டறிந்த இரகஸியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2006/01/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
	</channel>
</rss>
