<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை &#187; சமூகம்</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/tag/social-issues/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளத்தனையது உயர்வு</description>
	<lastBuildDate>Wed, 14 Dec 2011 22:20:21 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>விநோதமான தமிழாக்கம்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 12 Nov 2011 17:03:33 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Norway]]></category>
		<category><![CDATA[pawn]]></category>
		<category><![CDATA[pawns of freedom]]></category>
		<category><![CDATA[peace talks]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நார்வே]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பகடைக்காய்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=451</guid>
		<description><![CDATA[நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன &#034;அமைதிக்கான அடமானங்கள்&#034;? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது &#034;Pawns of Peace&#034; என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது! &#034;Pawn&#034; என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு: அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.</p>
<p><a href="https://lh6.googleusercontent.com/-oBaAabzTJjU/Tr6g8JIDVeI/AAAAAAAAE-M/bwUDOkZFwtk/s800/pawns-1.jpg"><img src="https://lh6.googleusercontent.com/-oBaAabzTJjU/Tr6g8JIDVeI/AAAAAAAAE-M/bwUDOkZFwtk/s400/pawns-1.jpg" alt="Pawns of peace" class="aligncenter" /></a></p>
<p>அது என்ன &#034;அமைதிக்கான அடமானங்கள்&#034;? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது &#034;Pawns of Peace&#034; என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!</p>
<p>&#034;Pawn&#034; என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:
<ol>
<li>அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது</li>
<li>செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர் </li>
<li>பிறரால் &#034;பகடைக்காயாக&#034; பயன்படுத்தப்படுதல்</li>
</ol>
<p>மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் &#034;pawn&#034; என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.<br />
<span id="more-451"></span><br />
&#034;They were used as mere pawn&#034; என்னும் சொல்லாட்சி சாதாரணமாக நீங்கள் காணக்கூடியது. The term &#034;pawn&#034; gets the meaning of &#034;a person, group, etc., manipulated by another&#034; in such a context.</p>
<p>இணயத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு வலைத்தளைத்திலோ வலைப்பதிவிலோ ஒரு தவறான ஆக்கம் பதிப்பிக்கப்பட்டால் அது பலரால் எடுத்துக் கையாளப்பட்டு ஈசல் போல் பரவிவிடும். இதோ பாருங்கள் இநத &#034;அடமானங்கள்&#034; பல்கிப் பெருகிக் கிடப்பதை!</p>
<p><a href="https://lh3.googleusercontent.com/-5z09GUDWkHo/Tr6g8AosKeI/AAAAAAAAE-Q/GMmAJodN60A/s800/pawns.jpg" title="அமைதிக்கான அடமானங்கள்"><img src="https://lh3.googleusercontent.com/-5z09GUDWkHo/Tr6g8AosKeI/AAAAAAAAE-Q/GMmAJodN60A/s400/pawns.jpg" alt="அமைதிக்கான அடமானங்கள்" /></a></p>
<p>நார்வே நாட்டின் இலங்கை அமைதி முயற்சிகள் பற்றிய <a href="http://www.norad.no/en/tools-and-publications/publications/evaluations/publication?key=386346" title="Download the report "Pawns of peace"" target="_blank">அந்த ஆய்வறிக்கையில்</a> அடிநாதமாக அமைந்திருக்கும் வாதம் நார்வே நாடு இந்தப் பிரச்னை தொடர்பான நாடுகள் மற்றும் இயக்கங்களால் பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்பதுதான். அவ்வறிக்கையில் காணும் கீழ்க்கண்ட பகுதிகளை வாசியுங்கள்:</p>
<blockquote><p>
The Norwegian team were aware of these limitations and feared becoming a ‘pawn<br />
in domestic politics’.</p>
<p>While there was awareness amongst the Norwegians of<br />
the growing risks of Norway becoming a pawn in Sri Lanka’s domestic politics, Nor-way should have been more alert to its possible consequences.</p></blockquote>
<p>ஆனால் இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது ஈழத் தமிழர்கள்தான் பகடைக்காய்களாக ஆனார்கள் என்பது பலரது வாதம். இதோ பாருங்கள்:</p>
<p><a href="https://lh5.googleusercontent.com/-CDxeTp3em_Y/Tr6g8IR2VOI/AAAAAAAAE-c/5K9kYQqMdGA/s800/pawns-2.jpg" title="பகடைக்காய்"><img src="https://lh5.googleusercontent.com/-CDxeTp3em_Y/Tr6g8IR2VOI/AAAAAAAAE-c/5K9kYQqMdGA/s400/pawns-2.jpg" alt="பகடைக்காய்" /></a></p>
<p>இதுபோன்ற பல &#034;குண்டக்க முண்டக்க&#034; வகை தமிழாக்கங்களை அன்றாடம் காணமுடிகிறது. நினைவு வரும்போது அவற்றை உங்கள்முன் வைக்கிறேன்!</p>
<p>&#8212;</p>
<p>அது கிடக்கட்டும், நார்வே நாட்டின் அந்த ஆய்வறிக்கையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்? என் பார்வையை அடுத்த பதிவில் பகிர முயற்சிக்கிறேன்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மாடல் அழகியின் சிலிகான் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2011/03/snake-bites-models-bust-dies-of-silicon-poisoning/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2011/03/snake-bites-models-bust-dies-of-silicon-poisoning/#comments</comments>
		<pubDate>Wed, 16 Mar 2011 13:37:07 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இது எப்படி இருக்கு]]></category>
		<category><![CDATA[beauty]]></category>
		<category><![CDATA[boob]]></category>
		<category><![CDATA[breast enhancement]]></category>
		<category><![CDATA[culture]]></category>
		<category><![CDATA[fake boob]]></category>
		<category><![CDATA[flase breast]]></category>
		<category><![CDATA[Israeli model]]></category>
		<category><![CDATA[Orit Fox]]></category>
		<category><![CDATA[silicone]]></category>
		<category><![CDATA[snake]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[Tel Aviv]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[இயற்கை]]></category>
		<category><![CDATA[ஒழுக்கம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=441</guid>
		<description><![CDATA[இது போன்ற டுபாக்கூர் (ஃபால்து) சமாச்சாரங்களெல்லாம் எத்தனை டேஞ்சர் பாருங்கள். அந்த பாம்பு பாவம்! (சரி, மனிதனாக இருந்திருந்தால்&#8230;!) இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு நாக பாம்பும் நடித்தது. அவர் பழங்காலத்தில், பெண்கள் அணியும் கவர்ச்சி உடையுடன் நடித்தார். படஷீட்டிங்கின் போது அவர் அந்த நாக பாம்பை பிடித்த படி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார். அப்போது திடீரென அந்த பாம்பு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><em>இது போன்ற டுபாக்கூர் (ஃபால்து) சமாச்சாரங்களெல்லாம் எத்தனை டேஞ்சர் பாருங்கள். அந்த பாம்பு பாவம்! (சரி, மனிதனாக இருந்திருந்தால்&#8230;!)</em></p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/0-thumb11.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/0-thumb11-150x150.jpg" alt="Model Orit Fox and snake" title="Model Orit Fox and snake" width="150" height="150" class="alignright size-thumbnail wp-image-443" /></a>இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு நாக பாம்பும் நடித்தது. அவர் பழங்காலத்தில், பெண்கள் அணியும் கவர்ச்சி உடையுடன் நடித்தார். படஷீட்டிங்கின் போது அவர் அந்த நாக பாம்பை பிடித்த படி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார்.</p>
<p>அப்போது திடீரென அந்த பாம்பு அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் பயந்த அவர் அதன் கழுத்தில் இருந்து பிடியை விட்டார். உடனே அந்த பாம்பு அவர் இடது புறத்தில் பொருத்தியிருந்த சிலிகான் மார்பகத்தில் கடித்தது. </p>
<p><object width="480" height="295"><param name="movie" value="http://www.youtube.com/e/jhdE1DqUv1M"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/e/jhdE1DqUv1M" type="application/x-shockwave-flash" width="480" height="295" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
<p><strong>சிறிது நேரத்தில் சிலிகான் விஷம் ஏறி அந்த பாம்பு செத்து விழுந்தது.</strong></p>
<p>இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாடல் அழகி ஒரிட் பாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.<br />
<span id="more-441"></span><br />
(News: <a href="http://www.maalaimalar.com/2011/03/16155947/dodel-miss-snake-eat-dead.html">Thatstamil.com</a>)</p>
<p><a href="http://timesofindia.indiatimes.com/world/mad-mad-world/Snake-bites-models-bust-dies-of-silicon-poisoning/articleshow/7715176.cms">Times of India reports</a>:</p>
<p><strong>Snake bites model&#039;s bust, dies of silicon poisoning</strong></p>
<p>LONDON: <strong>A snake attacked an Israeli model during a sexy photoshoot by biting into her surgically enhanced breast and later died from silicone poisoning</strong>.</p>
<p>Orit Fox, a B-list model and actress initially looked comfortable during the shoot in Tel Aviv, wrapping the massive boa constrictor around her legs, waist and neck while doing her best to look sexy, reports the Daily Mail.</p>
<p>In a figure hugging red and white striped dress, which revealed maximum cleavage, she gamely tried to take their bonding to the next level by licking the snake&#039;s face. As she maneuvered the animal into position for the &#039;kiss&#039; Fox loosened her grip on its neck, and after being licked the reptile reacted angrily.</p>
<p>It aimed straight for Fox&#039;s prized assets and sunk its teeth deep into her left breast. An assistant rushed in to help her pull the snake off and after a few seconds of struggle the creature released its grip. The peroxide-blond model was rushed to a nearby hospital and given a tetanus shot. However, the snake wasn&#039;t so lucky and died from silicone poisoning.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2011/03/snake-bites-models-bust-dies-of-silicon-poisoning/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மெல்ல மறையும் பின்னல் அழகு!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/09/beauty-of-plaited-hairstyle/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/09/beauty-of-plaited-hairstyle/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 13:36:41 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[beauty]]></category>
		<category><![CDATA[hairstyle]]></category>
		<category><![CDATA[plait]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[ஒழுக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[பின்னல்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>
		<category><![CDATA[முடியலங்காரம்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=400</guid>
		<description><![CDATA[எங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். &#034;ஆத்தாடி மாரியம்மா!&#034; என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது! பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/tossed-up-hair.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/tossed-up-hair-150x100.jpg" alt="tossed-up-hair" title="tossed-up-hair" width="150" height="100" class="alignleft size-thumbnail wp-image-401" /></a>எங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். &#034;ஆத்தாடி மாரியம்மா!&#034; என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hairstyle.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hairstyle-300x246.jpg" alt="hairstyle" title="hairstyle" width="300" height="246" class="aligncenter size-medium wp-image-404" /></a></p>
<p>பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, &#034;இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!&#034;</p>
<p>பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!</p>
<p>பின்னல் போய் வந்தது &#034;போனி டெயில்&#034;. பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!</p>
<p>உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!</p>
<blockquote><p>ப‌டிய‌ வாரிய‌ த‌லை<br />
முத்தில்லா கொலுசு<br />
ஒற்றைப் பின்னல்<br />
கை நிறைய‌ வ‌ளைய‌ல்<br />
க‌ட்டிக் கொள்ள‌ சேலை<br />
சாயம் இல்லா உதடு<br />
மை இல்லா கண்கள்<br />
நகம் இல்லா விரல்கள்<br />
க‌வ‌லை இல்லா சிரிப்பு </p></blockquote>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/girls-of-tamil-nadu.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/girls-of-tamil-nadu-300x225.jpg" alt="பின்னல் அழகுறும் தமிழ்நாட்டுப் பெண்கள்" title="பின்னல் அழகுறும் தமிழ்நாட்டுப் பெண்கள்" width="300" height="225" class="aligncenter size-medium wp-image-403" /></a></p>
<blockquote><p>நல்லெண்ணெய் தேய்த்து விட்டு<br />
நன்றாக ஊற விட்டு<br />
சிகைக்காய்த் தூளெடுத்து<br />
சிகையெங்கும் பரவ விட்டு<br />
வாசனைப் பொடி போட்டு<br />
வாகாக அலசி விட்டு<br />
சாம்பிராணிப் புகை போட்டு<br />
சந்தனம் போல் மணக்க விட்டு<br />
பாசமுடன் விரல்களினால்<br />
பட்டுப் போல் கோதி விட்டு<br />
அழகாக வகிடெடுத்து<br />
அளவாகப் பிரித்தெடுத்து<br />
அம்மா இடும் பின்னலில்தான்<br />
அம்மம்மா எத்தனை ரகம்!</p>
<p>ஆயிரங் கால் பின்னல்<br />
அழகான ஒற்றைப் பின்னல்<br />
பள்ளிக் கென்றே பக்குவமாய்<br />
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்<br />
பின்னாலே பாலம் கட்டும்<br />
பாரமில்லா சைக்கிள் பின்னல்<br />
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த<br />
குஞ்சலம் வைத்த பின்னல்&#8230;</p></blockquote>
<p style="text-indent: 20px;">நன்றி: <a href="http://kavinaya.blogspot.com/2009/03/blog-post_20.html">கவிநயா</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/09/beauty-of-plaited-hairstyle/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>இலவசங்களின் மறுபக்கம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/#comments</comments>
		<pubDate>Sun, 16 Aug 2009 05:16:31 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[freebies]]></category>
		<category><![CDATA[laziness]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலவசம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சோம்பல்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=394</guid>
		<description><![CDATA[இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு (நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.) தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு</p>
<p>(நன்றி. <a href="http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16126">தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009</a>.)</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/plough.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/plough-150x100.jpg" alt="உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்" title="உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்" width="150" height="100" class="alignright size-thumbnail wp-image-396" /></a>தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.</p>
<p>சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச &#034;டிவி&#039;, காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.</p>
<p>நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.</p>
<p>இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.</p>
<p>சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.</p>
<p>மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. &#034;உழைத் தால் தான் உணவு&#039; என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.</p>
<p>குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.</p>
<p>ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு &#034;டிவி&#039; தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு &#034;டிவி&#039;க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/#comments</comments>
		<pubDate>Fri, 05 Jun 2009 05:29:16 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[rajnikanth]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[vaiko]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[ரஜனிகாந்த்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=382</guid>
		<description><![CDATA[&#034;பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.&#034; மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>&#034;பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.&#034;</p></blockquote>
<p>மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக <a href="http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11398">தினமலர் செய்தி</a> வெளியிட்டுள்ளது.</p>
<p>இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.</p>
<p>அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!</p>
<p>இதோ அந்தக் கேள்விகள்:-</p>
<ol>
<li>போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?</li>
<li>பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?</li>
<li>மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?</li>
<li>ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?</li>
<li>ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?</li>
<li>காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?</li>
<li>கென்னடியைக் கொன்றது யார்?</li>
</ol>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/answer-this-first/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சாட்சியாய் நிற்கும் மரங்கள்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/06/witnessing-trees/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/witnessing-trees/#comments</comments>
		<pubDate>Mon, 01 Jun 2009 05:36:06 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[court]]></category>
		<category><![CDATA[shade]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[treachery]]></category>
		<category><![CDATA[trees]]></category>
		<category><![CDATA[witness]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=377</guid>
		<description><![CDATA[மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் &#8211; பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் &#8211; இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்! தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக &#8211; இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் &#8211; பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் &#8211; இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்!</p>
<p>தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக &#8211; இப்படி பலவிதமான வழக்குகள், வியாஜ்ஜியங்கள். மனிதன் தோன்றிய நாளாக அடுத்தவனுடன் அணுக்கமாக இருக்க லாயக்கில்லாதவனாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.</p>
<p>இதுபோன்ற பிணக்குகளையும், தகராறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு சமூகங்கள் தத்தம் வழிகளில் தீர்த்துக் கொண்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக தற்போது நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும், சட்டப் புத்தகங்களும் பெருத்துவிட்டன. ஆனால் அந்த இடங்களின் நடைமுறைகள் பெரும்பாலும் கற்கால மனிதனின் போக்கில்தான் நிகழ்கின்றன.</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/court.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/court-150x150.jpg" alt="court" title="court" width="150" height="150" class="alignleft size-thumbnail wp-image-378" /></a>இங்கு நீங்கள் காணும் நீதிமன்ற வளாகத்தில் நிழல் தந்துகொண்டிருக்கும் மரங்கள் எத்தனை கதைகளைக் கேட்டிருக்கும்! எத்தனை அழுகைகள், ஆத்திரங்கள், மன மாச்சரியங்கள், சவால்கள், பொய்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள், வாதங்கள், பழிவாங்கல், சீரழிவுகளின் சின்னங்கள்&#8230; </p>
<p>அந்த மரங்களுக்குமட்டும் எழுதும் திறமை இருந்தால் எத்துணை சுவாரசியமான படைப்புகள் நமக்குக் கிட்டியிருக்கும்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/witnessing-trees/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பிறர் பிள்ளைகள்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/11/children-of-others/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/11/children-of-others/#comments</comments>
		<pubDate>Thu, 27 Nov 2008 14:24:15 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[parenthood]]></category>
		<category><![CDATA[parents]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தாய்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=185</guid>
		<description><![CDATA[ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை செவி மடுக்காமல் இருக்க முடியுமா, அதுவும் சமாசாரம் சுவாரசியமாக இருந்தால்! விஷயம் இதுதான் &#8211; சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் தன் மகன் வீட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மகனின் குழந்தைகளை சீராட்டிவிட்டு, அவர்களுக்கு baby sitting [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை செவி மடுக்காமல் இருக்க முடியுமா, அதுவும் சமாசாரம் சுவாரசியமாக இருந்தால்!</p>
<p>விஷயம் இதுதான் &#8211; சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் தன் மகன் வீட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மகனின் குழந்தைகளை சீராட்டிவிட்டு, அவர்களுக்கு baby sitting சேவைகளை செவ்வனே செய்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.</p>
<p>ஆனால் அவர்களுடைய பேரக் குழந்தையை சிறிது கடிந்து பேசிவிட்டாள் அந்த அம்மாள் என்பதற்காக அவர்களுடைய மருமகள் கோபப் பட்டிருக்கிறாள். அவர்களுடைய மகனும் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.</p>
<p>இதுதான் அந்த அம்மாளுடைய மனத்தாங்கலுக்குக் காரணம். &#034;அவர்களுக்குச் செய்வதற்குத்தான் நானா? கண்டிப்பதற்கு உரிமை இல்லையா&#034; என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள், அந்த அம்மையார். அவருடைய புருஷன் சமாதானம் செய்து கொண்டிருந்தார், &#034;இதைப்பார், பிறருடைய குழந்தைகளைக் கொஞ்சி சீராட்டி வளர்க்கலாம். அவர்களுடன் விளையாடலாம். ஆனால் கடிந்துபேச நமக்கு உரிமை இல்லை. அது அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு மட்டும்தான் உரிமையான விஷயம். அதுதான் சரியான அணுகுமுறை. இது நம் பேரக் குழந்தைகளுக்கும் பொருந்தும்&#034; என்றார் அவர். </p>
<p>கூர்மையாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூற்று சரியானதுதான் என்று தோன்றுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்ற பேச்சே இல்லாத இக்காலத்தில் சில நாட்கள் குழந்தைகளோடு இருக்கும் போது இனிமையாக பொழுதைக் கழிக்காமல் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் தலையிட்டு, குழந்தைகளின் தற்கால எண்ணப் பாங்கினையும் அவர்கள் வளரும் சூழலின் தன்மையையும் அறியாமல் அவர்களுக்கு அறிவுரை சொல்ல முயன்றால் பிணக்குதான் மிஞ்சும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/11/children-of-others/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பண்பாடு</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/08/how-responsible-we-are/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/08/how-responsible-we-are/#comments</comments>
		<pubDate>Fri, 22 Aug 2008 15:57:22 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[நல்வாழ்வு]]></category>
		<category><![CDATA[culture]]></category>
		<category><![CDATA[responsibility]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[பண்பாடு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=270</guid>
		<description><![CDATA[]]></description>
			<content:encoded><![CDATA[[There is a video that cannot be displayed in this feed. <a href="http://kichu.cyberbrahma.com/2008/08/how-responsible-we-are/">Visit the blog entry to see the video.]</a>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/08/how-responsible-we-are/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்கள் ஜாக்கிரதை</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/06/womenfolk-beware/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/06/womenfolk-beware/#comments</comments>
		<pubDate>Sun, 15 Jun 2008 16:42:52 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[498a]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[men]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<category><![CDATA[women]]></category>
		<category><![CDATA[ஆண்கள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=235</guid>
		<description><![CDATA[சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்: இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் &#8211; அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:</p>
<ol>
<li>இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் &#8211; அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும்  என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.</li>
<li>ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர். </li>
<li>ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.</li>
<li>ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.</li>
</ol>
<p>இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.</p>
<p>அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் &#8211; ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.</p>
<p>கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/06/womenfolk-beware/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>தலித்துக்களும் பிராமணர்களும் ஒரே இனம்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/10/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/10/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 05 Oct 2007 22:15:59 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[தேசீயம்]]></category>
		<category><![CDATA[brahmin]]></category>
		<category><![CDATA[caste]]></category>
		<category><![CDATA[dalit]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[தலித்]]></category>
		<category><![CDATA[தீண்டாமை]]></category>
		<category><![CDATA[பிராமணர்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/163</guid>
		<description><![CDATA[உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்:- டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள். புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள். காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் &#034;பண்டிட்&#034; பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்:-
<ul>
<li>டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.</li>
<li>புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.</li>
<li>காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.</li>
<li>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் &#034;பண்டிட்&#034; பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.</li>
<li>ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.</li>
<li>தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்</li>
<li>ஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.</li>
<li>பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.</li>
<li>தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.</li>
</ul>
<p>இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் &#034;ஆதிக்க சாதியினர்&#034; என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?</p>
<p>உண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்?</p>
<ul>
<li>பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்?</li>
<li>&#034;இரெட்டைக் குவளை&#034; முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்?</li>
<li>தலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்?</li>
<li>தலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்?</li>
</ul>
<p>இவர்களெல்லாம் யார் தெரியுமா?</p>
<p>பிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் &#034;ஆதிக்க சாதியினர்&#034;தான்!</p>
<p>இவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்!</p>
<p>ஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்!</p>
<p>உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.</p>
<p>தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.</p>
<p>ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து &#034;பஞ்சமர்&#034; என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.</p>
<p>ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?</p>
<p>இது இன்றைய நிலைமை &#8211; பழைய கதை அல்ல!</p>
<p>யார் அவர்கள்?</p>
<p>இனம் கண்டுகொள்ளுங்கள் தலித்துக்களே!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/10/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>

