<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை &#187; morals</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/tag/morals/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளத்தனையது உயர்வு</description>
	<lastBuildDate>Wed, 14 Dec 2011 22:20:21 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>வாரியாரின் மணிமொழிகள்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/01/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/01/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 05 Jan 2008 11:21:57 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[நல்வாழ்வு]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[morals]]></category>
		<category><![CDATA[வாரியார்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/212</guid>
		<description><![CDATA[திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் &#034;கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி&#034; எடுத்த &#034;மணிமொழிகள்&#034; (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்: இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே. பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும். அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் &#8212; [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/variar.jpg' title='கிருபானந்த வாரியார்'><img src='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/variar.thumbnail.jpg' alt='கிருபானந்த வாரியார்' class="alignleft" /></a>திருமுருக. <a href="http://variyarswamigal.com/">கிருபானந்தவாரியார்</a> அவர்கள் தன் &#034;கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி&#034; எடுத்த &#034;மணிமொழிகள்&#034; (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:</p>
<ul>
<li>இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.</li>
<li>பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.</li>
<li>அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் &#8212; இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.</li>
<li>
<ul>
<li>பார்த்துக் கெட்டது பிள்ளை</li>
<li>பார்க்காது கெட்டது பயிர்</li>
<li>இட்டுக் கெட்டது காது</li>
<li>இடாது கெட்டது கண்</li>
<li>கேட்டுக் கெட்டது குடும்பம்</li>
<li>கேளாது கெட்டது கடன்</li>
<li>உண்டு கெட்டது வயிறு</li>
<li>உண்ணாது கெட்டது உறவு</li>
</ul>
</li>
<li>
<ul>
<li>கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்</li>
<li>திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்</li>
<li>ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்</li>
<li>பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்</li>
<li>கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்</li>
<li>நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்</li>
</ul>
</li>
<li>சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே</li>
<li>மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் &#8212; நெருப்பு, கடன், பகைவன்.</li>
<li>வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது</li>
<li>அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.</li>
<li>சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது</li>
<li>விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.</li>
<li>கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் &#8211; இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.</li>
<li>மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.</li>
<li>தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.</li>
<li>நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.</li>
<li>ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.</li>
<li>இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.</li>
<li>
கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்<br />
மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்<br />
தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்<br />
வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும்
</li>
<li>இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் &#8211; இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.</li>
<li>ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.</li>
</ul>
<p>அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/01/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>

