<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை &#187; India</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/tag/india/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளத்தனையது உயர்வு</description>
	<lastBuildDate>Wed, 14 Dec 2011 22:20:21 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>விநோதமான தமிழாக்கம்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 12 Nov 2011 17:03:33 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Norway]]></category>
		<category><![CDATA[pawn]]></category>
		<category><![CDATA[pawns of freedom]]></category>
		<category><![CDATA[peace talks]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நார்வே]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பகடைக்காய்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=451</guid>
		<description><![CDATA[நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன &#034;அமைதிக்கான அடமானங்கள்&#034;? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது &#034;Pawns of Peace&#034; என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது! &#034;Pawn&#034; என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு: அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.</p>
<p><a href="https://lh6.googleusercontent.com/-oBaAabzTJjU/Tr6g8JIDVeI/AAAAAAAAE-M/bwUDOkZFwtk/s800/pawns-1.jpg"><img src="https://lh6.googleusercontent.com/-oBaAabzTJjU/Tr6g8JIDVeI/AAAAAAAAE-M/bwUDOkZFwtk/s400/pawns-1.jpg" alt="Pawns of peace" class="aligncenter" /></a></p>
<p>அது என்ன &#034;அமைதிக்கான அடமானங்கள்&#034;? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது &#034;Pawns of Peace&#034; என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!</p>
<p>&#034;Pawn&#034; என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:
<ol>
<li>அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது</li>
<li>செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர் </li>
<li>பிறரால் &#034;பகடைக்காயாக&#034; பயன்படுத்தப்படுதல்</li>
</ol>
<p>மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் &#034;pawn&#034; என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.<br />
<span id="more-451"></span><br />
&#034;They were used as mere pawn&#034; என்னும் சொல்லாட்சி சாதாரணமாக நீங்கள் காணக்கூடியது. The term &#034;pawn&#034; gets the meaning of &#034;a person, group, etc., manipulated by another&#034; in such a context.</p>
<p>இணயத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு வலைத்தளைத்திலோ வலைப்பதிவிலோ ஒரு தவறான ஆக்கம் பதிப்பிக்கப்பட்டால் அது பலரால் எடுத்துக் கையாளப்பட்டு ஈசல் போல் பரவிவிடும். இதோ பாருங்கள் இநத &#034;அடமானங்கள்&#034; பல்கிப் பெருகிக் கிடப்பதை!</p>
<p><a href="https://lh3.googleusercontent.com/-5z09GUDWkHo/Tr6g8AosKeI/AAAAAAAAE-Q/GMmAJodN60A/s800/pawns.jpg" title="அமைதிக்கான அடமானங்கள்"><img src="https://lh3.googleusercontent.com/-5z09GUDWkHo/Tr6g8AosKeI/AAAAAAAAE-Q/GMmAJodN60A/s400/pawns.jpg" alt="அமைதிக்கான அடமானங்கள்" /></a></p>
<p>நார்வே நாட்டின் இலங்கை அமைதி முயற்சிகள் பற்றிய <a href="http://www.norad.no/en/tools-and-publications/publications/evaluations/publication?key=386346" title="Download the report "Pawns of peace"" target="_blank">அந்த ஆய்வறிக்கையில்</a> அடிநாதமாக அமைந்திருக்கும் வாதம் நார்வே நாடு இந்தப் பிரச்னை தொடர்பான நாடுகள் மற்றும் இயக்கங்களால் பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்பதுதான். அவ்வறிக்கையில் காணும் கீழ்க்கண்ட பகுதிகளை வாசியுங்கள்:</p>
<blockquote><p>
The Norwegian team were aware of these limitations and feared becoming a ‘pawn<br />
in domestic politics’.</p>
<p>While there was awareness amongst the Norwegians of<br />
the growing risks of Norway becoming a pawn in Sri Lanka’s domestic politics, Nor-way should have been more alert to its possible consequences.</p></blockquote>
<p>ஆனால் இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது ஈழத் தமிழர்கள்தான் பகடைக்காய்களாக ஆனார்கள் என்பது பலரது வாதம். இதோ பாருங்கள்:</p>
<p><a href="https://lh5.googleusercontent.com/-CDxeTp3em_Y/Tr6g8IR2VOI/AAAAAAAAE-c/5K9kYQqMdGA/s800/pawns-2.jpg" title="பகடைக்காய்"><img src="https://lh5.googleusercontent.com/-CDxeTp3em_Y/Tr6g8IR2VOI/AAAAAAAAE-c/5K9kYQqMdGA/s400/pawns-2.jpg" alt="பகடைக்காய்" /></a></p>
<p>இதுபோன்ற பல &#034;குண்டக்க முண்டக்க&#034; வகை தமிழாக்கங்களை அன்றாடம் காணமுடிகிறது. நினைவு வரும்போது அவற்றை உங்கள்முன் வைக்கிறேன்!</p>
<p>&#8212;</p>
<p>அது கிடக்கட்டும், நார்வே நாட்டின் அந்த ஆய்வறிக்கையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்? என் பார்வையை அடுத்த பதிவில் பகிர முயற்சிக்கிறேன்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/12/airtel-super-singer-junior-priyanka/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/12/airtel-super-singer-junior-priyanka/#comments</comments>
		<pubDate>Mon, 28 Dec 2009 06:36:57 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[airtel]]></category>
		<category><![CDATA[beauty]]></category>
		<category><![CDATA[culture]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[junior]]></category>
		<category><![CDATA[music]]></category>
		<category><![CDATA[parents]]></category>
		<category><![CDATA[priyanka]]></category>
		<category><![CDATA[super singer]]></category>
		<category><![CDATA[vijay tv]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[குயில்]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சூப்பர் சிங்கர்]]></category>
		<category><![CDATA[ஜூனியர்]]></category>
		<category><![CDATA[பிரியங்கா]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=428</guid>
		<description><![CDATA[என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்&#8230; பெரும்பாலும் &#039;கிரீச் கிரீச்&#039; என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி  முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”</p>
<p>ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்&#8230; பெரும்பாலும் &#039;கிரீச் கிரீச்&#039; என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/priyanka-3.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/priyanka-3-130x150.jpg" alt="Priyanka" title="Airtel Super Singer Junior Priyanka" width="130" height="150" class="alignleft size-thumbnail wp-image-429" /></a>ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!</p>
<p>அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?</p>
<p>இதோ இவர்தான் &#8211; அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.</p>
<p>என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:<br />
<span id="more-428"></span></p>
<p><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/PnOhxF_oQHw?fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/PnOhxF_oQHw?fs=1" type="application/x-shockwave-flash" width="480" height="385" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
<p>அந்த செல்லக் குயில் பிரியங்கா பாடிய மற்ற பாடல்கள் இவை:</p>
<p><a href="http://www.youtube.com/view_play_list?p=0">www.youtube.com/watch?v=0</a></p>
<p>பிரியங்கா பாடும் நேர்த்தியைப் போல் அவருடைய அமைதியான தோற்றம், கள்ளம் கபடில்லாத சிரிப்பு, அவருடைய உடை, முடி அலங்காரம் எல்லாமே அழகு!</p>
<p>அந்தப் பெண்ணின் குரல் அநாயாசமாக மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்கிறது. சிறிதளவுகூட பிசிறில்லாமல் பலவித ஜாலங்களைப் புரிகிறது. ஆனால் அவருடைய தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது; ஒரே “அமரிக்கையான” சிரிப்புதான் அந்த முகத்தில் குடிகொண்டிருக்கும்! இத்தனை குழைவும், பிருகாக்களும், மேல் “நோட்ஸ்” பாடும்போடு ஒலிக்கும் அலைக்கற்றைகளும் பல பாடகர்களை பொறாமை கொள்ளச் செய்யும் என்ப்து நிச்சயம். நாமும் பார்க்கிறோமே, கர்நாடக இசை மேடைகளில், என்னென்னமோ கைகால்களை ஆட்டி, முகத்தைச் சுளித்து பலவித அங்க சேஷ்டைகளைச் செய்தவண்ணம் இருக்கிறார்கள்; ஆனால் பாவம், குரல்தான் பேச மறுக்கிறது!</p>
<p>பிரியங்காவின் பெற்றோர்கள் உணமையிலேயே பெரும் பாக்கியசாலிகள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/12/airtel-super-singer-junior-priyanka/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்திரா கான் இந்திரா காந்தியான கதை!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/07/how-indira-khan-became-indira-gandhi/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/07/how-indira-khan-became-indira-gandhi/#comments</comments>
		<pubDate>Sat, 05 Jul 2008 10:16:54 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[indira gandhi]]></category>
		<category><![CDATA[indira khan]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்திரா காந்தி]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=255</guid>
		<description><![CDATA[நன்றி: ஜெயா டிவி.]]></description>
			<content:encoded><![CDATA[[There is a video that cannot be displayed in this feed. <a href="http://kichu.cyberbrahma.com/2008/07/how-indira-khan-became-indira-gandhi/">Visit the blog entry to see the video.]</a>
<p>நன்றி: ஜெயா டிவி.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/07/how-indira-khan-became-indira-gandhi/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்கள் ஜாக்கிரதை</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/06/womenfolk-beware/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/06/womenfolk-beware/#comments</comments>
		<pubDate>Sun, 15 Jun 2008 16:42:52 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[498a]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[men]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[victims]]></category>
		<category><![CDATA[women]]></category>
		<category><![CDATA[ஆண்கள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=235</guid>
		<description><![CDATA[சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்: இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் &#8211; அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:</p>
<ol>
<li>இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் &#8211; அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும்  என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.</li>
<li>ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர். </li>
<li>ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.</li>
<li>ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.</li>
</ol>
<p>இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.</p>
<p>அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் &#8211; ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.</p>
<p>கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/06/womenfolk-beware/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>தான் தனது எனும் பெண்கள்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 23 Mar 2008 15:27:43 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[marriage]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/233</guid>
		<description><![CDATA[விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம். அனைத்தையும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம்.</p>
<p>அனைத்தையும் கேட்டபிறகு நமக்குத் தெளிவாகத் தெரிவது, இக்காலப் பெண்கள் தெரிவு செய்யும் துணைவன் தன் வீட்டில் வளரும் நாய் போல் பெண்கள் விருப்பங்களை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கக் கூடாது.</p>
<p>மணவழ்வு என்னும் ஒரு சமூகக் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறிர்கள்?</p>
[There is a video that cannot be displayed in this feed. <a href="http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">Visit the blog entry to see the video.]</a>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மறைக்கப்படும் உண்மைகள்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 14 Mar 2008 18:19:15 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[தேசீயம்]]></category>
		<category><![CDATA[aurengzeb]]></category>
		<category><![CDATA[history]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[mughal]]></category>
		<category><![CDATA[vigil]]></category>
		<category><![CDATA[அவுரங்கஜீப்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/231</guid>
		<description><![CDATA[2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் &#034;விஜில்&#034; அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில் கண்டதில்லை; தொலைக்காட்சியில்தான். அவர் ஒரு காமெடியான அரசியல்வாதி, சுவாரசியம் மிக்கவர். எனதான் சொல்கிறார் பார்ப்போமென்னும் ஆர்வம். அரங்கின் வாயிலில் அமைப்பாளர் திருமதி. இராதாராஜன் எல்லோரையும் வரவேற்றுக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் &#034;விஜில்&#034; அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில் கண்டதில்லை; தொலைக்காட்சியில்தான். அவர் ஒரு காமெடியான அரசியல்வாதி, சுவாரசியம் மிக்கவர். எனதான் சொல்கிறார் பார்ப்போமென்னும் ஆர்வம்.</p>
<p>அரங்கின் வாயிலில் அமைப்பாளர் திருமதி. இராதாராஜன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். ஆங்கேயிருந்தோரிடமிருந்து அறிந்து கொண்ட செய்தி, கடைசி நிமிஷத்தில் சுவாமியும், இரதாகிருஷ்ணனும் வரமறுத்துவிட்டார்களென்பதுதான். பாவம், அரசியல்வாதிகளுக்கு பலவித சோலிகள் இருக்கும். நம்மூரில் அரசியல் என்பது நேர்க்கோட்டு சிந்தனை வயப்பட்டதன்று. இணைவு, பிரிவு, பின் பிணைவு இப்படி பன்னோக்குப் பார்வையில் போய்க் கொண்டிருக்கும். சிறுவர்கள் கையில் வைத்து உருட்டிப் பார்க்கும் &#034;கலைடாஸ்கோப்&#034;பில் எப்படி விதவிதமாக வண்ணக் கோலங்கள் மாறிவருகிறதோ அதுபோல்தான் அரசியல் வியூகங்களும்!</p>
<p>முக்கிய பேச்சாளர்கள் வரவில்லையே, என்ன செய்யலம் என்று அமைப்பாளர்கள் யோசித்திருக்கும் வேளையில் வந்திருந்தோர் அனைவரும் அந்த அரசியல்வாதிகள் இருவரும் இல்லாமலேயே கூட்டத்தை நடத்துங்கள் என்று ஒருமித்துக் கேட்டுக் கொண்டதால் கூட்டம் தொடங்கியது.<br />
திருமதி ராதா ராஜன் லலித் கலா அகாடமியில் அவுரங்கஜீப் பற்றிய படக் கண்காட்சியில் நிகழ்ந்த அராஜகங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் கூறியவற்றில் என் நினைவிலிருப்பவை:-<br />
<span id="more-231"></span></p>
<blockquote>
<ul>
<li>உதவிக் கமிஷனர் முரளி சட்டத்திற்குப் புறம்பாக மூன்று பெண்களை இரவில் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த நிகழ்வும், வலுக்கட்டாயமான கண்காட்சி முடுதலும், படங்களை உடைத்ததும்  மேன்மை தங்கிய ஆற்காடு நவாப் அங்கு வந்து சென்றபின்தான் நடந்திருக்கின்றன.</li>
<li>உதவிக் கமிஷனர் திரு. முரளி முன்பு கோவையில் நடந்த கலவரங்களின்போது அங்கு பணியாற்றியவர். அவருக்குத் தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்துவருகிறது.</li>
<li>காவல் ஆணையருக்கும், டிஜிபிக்கும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக முரளி இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார் என்பது ஆணையரிடம் நான் பேசியதிலிருந்து தெரியவந்தது.</li>
<li>ஆற்காட்டு நவாபுக்கு ஒவ்வொரு ஆண்டும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பூரணகும்ப மரியாதை அளித்துவருகிறார்கள். அந்த நேரத்திலெல்லாம் தவறாமல் &#034;எங்கள் முன்னோர்கள்தான் இந்தக் கோயிலின் தெப்பக்குளத்திற்கு நிலத்தை வழங்கனார்கள்&#034; என்று பெருமையடித்துக் கொள்கிறார். நான் கேட்கிறேன், &#034;இந்த நிலத்தை உங்கள் முன்னோருக்கு கொடுத்தது யார்? இது எங்கள் பூமியில்லையா?&#034; இது ஏன் நம் மக்களுக்குப் புரியவில்லை?</li>
<li>இந்த ஆற்காடு நவாப் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார், பழைய சரித்திர நிகழ்வுகளைப் பற்றிப் பேசக்கூடாது என்றும் அதனால் மத நல்லிணக்கம் கெட்டுவிடும் என்றும். அவரும் நானும் முன்பு ஒரு முறை ஒரு அமேரிக்க தூதுக்குழுவுடன் நேர்காணலில் பங்கெடுக்கும்போது, &#034;நான் பாப்ரி மஸ்ஜித்தை பற்றிப் பேசுவேன்&#034; என்று மேஜையில் அடித்து ஓங்கிப் பேசினார். அவருக்கு பாப்ரி மஸ்ஜித்தைப் பற்றிப் பேச உரிமையுண்டென்றால் அவுரங்கஸீபைப் பற்றியும் பேச எனக்கும் அதே உரிமை உண்டு.</li>
<li>மன்னர் மானியங்களும், பட்டங்களும் அனைத்து முன்னாள் மன்னர்களுக்கும் நிறுத்தப்பட்ட போதிலும், இவருக்கு மட்டும் இன்னமும் நவாப், இளவரசர் போன்ற பட்டங்களைத் தரிக்க ஏன் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.</li>
<li>ஜம்மு கஷ்மீருக்கு என்று தனி அரசியமைப்புச் சட்டம் (constitution) இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்து ஜம்முவில் குடியேறினவர்கள் இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க இயலுகிறது. ஆனால் அவர்கள் ஜம்மு கஷ்மீர் மாநிலப் பிரஜகளாக ஆக முடியாது. அங்கு தேர்தல்களில் பங்களிக்க இயலாது.</li>
<li>இதற்கெல்லாம் மேலாக ஒரு வேடிக்கையான விஷயம், ஜம்மு கஷ்மீர் மாநிலம் தன் அரசியலமைப்பில் &#034;மதச் சார்பின்மை&#034; (secularism) என்பதையே அங்கீகரிக்கவில்லை!</li>
<li>காந்தி, &#034;வெள்ளையனே வெளியேறு&#034; இயக்கம் துவங்கியபோது அவரை சில வெளிநாடு நிருபர்கள் பேட்டி கண்டார்கள். அப்போது அவர், &#034;இந்தியாவில் இந்து பெரும்பான்மை அரசு அமையாதவாறு நானும் என்னைச் சார்ந்தவர்களும் பார்த்துக் கொள்வோம். மேலும் இந்துக்கள் பெரும்பான்மை பெற இயலாதவாறு ஒரு கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்துவோம். முஸ்லீம் லீக் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் இந்துக்களின் பிரதிநிதியாக ஒருபோதும் இருக்காது&#034; என்றார். அதே நடைமுறையைத்தான் நேருவும் கடைப்பிடித்து இந்துக்களை இன்றிருக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டனர்.</li>
<li>இந்துத்துவம் என்பது இந்த பூமி சார்ந்தது. இந்த நாட்டுக்ககே உரியது. இந்திய இறையாண்மை, தேசப்பற்று, நம் இந்திய மண், எல்லை, சமூகம் இந்த எல்லா பரிமாணங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது (Indian nationhood, polity, statehood, dharma, culture, ethos et al). இதில் எதனையும் தனியாகப் பிரித்து நோக்கக் கூடாது.</li>
</ul>
</blockquote>
<p>அவருடைய பேச்சு, அவருடைய ஆளுமை, அவருடைய துணிவு இவையெல்லாம் காணும்போது இவர் தலைமையேற்று ஒரு சாதாரண இந்துவுக்கும் தன் மதத்தின்மேல் ஒரு மதிப்பு, பிணைப்பு, ஆர்வம், ஒரு குழு மனப்பான்மை ஆகியவைகளைத் தோற்றுவிக்க இயலுமானால் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் பொற்காலமாய்த் திகழும் என்பதில் ஐயமில்லை.</p>
<p>நியூஸ் டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் சிறப்பாக உணர்ச்சி ததும்பப் பேசினார்.</p>
<p>பின்னர் ஆடியன்ஸிலிருந்து ஓரு ஆர்.எஸ்.எஸ் சேவக் மிக ஆணித்தரமாக இந்து ஓட்டு வங்கியை கட்டுக் கோப்பாக அமைக்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றிப் பேசினார். பின்பு அவுரங்கஜீப் கண்காட்சியில் தொண்டராகப் பணியாறிய ஒரு பெண்மணி அங்கு நிகழ்ந்த வற்றை எடுத்துரைத்தார்.</p>
<p>முதலில் ஆங்கிலத்தில் உரைகள் தொடங்கினாலும் பிறகு தமிழில் தொடர்ந்தன.</p>
<p>கூட்டம் தொடங்கும்போது சுமார் 60 நபர்கள். முடியும் தருவாயில் 80-90 பேர் இருந்தனர். அதில் பாதி இளைஞர்கள். கடைசிவரை யாரும் எழுந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>சபையிலிருந்த பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். முடிவில் என் எதிர் வரிசையில் இருந்த பெண்மணி தேசிய கீதத்தைப் பாடவில்லை என்று என் அருகிலிருந்த இளைஞர் சண்டைக்குப் போய்விட்டார். அவர் மனதிற்குள் பாடியிருப்பார் என்று நான் சமாதானம் செய்யவேண்டியிருந்தது.</p>
<p>சுட்டிகள்:-</p>
<p>அவுரங்கஜீப் கண்காட்சி நிகழ்வுகள்:-</p>
<ol>
<li><a href="http://www.fact-india.com/news.php">ஃபாக்ட் அமைப்பு செய்தி</a></li>
<li><a href="http://outlookindia.com/full.asp?fodname=20080309&#038;fname=raman&#038;sid=1&#038;pn=1">அவ்ட்லுக் செய்தி</a></li>
<li><a href="http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEM20080309222512&#038;Title=Main+Article&#038;rLink=0">இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி</a></li>
<li><a href="http://cuziyam.wordpress.com/2008/03/09/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/">சுழியம் வலைப் பதிவில் படங்களுடன் செய்தி</a></li>
<li><a href="http://www.newstodaynet.com/col.php?section=20&#038;catid=33">சுந்தரம் அவர்களின் கருத்துக்கள்</a></li>
<li><a href="http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=20803135&#038;format=html">அருணகிரியின் திண்ணைக் கட்டுரை</a></li>
</ol>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/03/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>என்று நிரம்பும் இவர்தம் வயிறு</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 17 Nov 2007 03:36:33 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித நேயம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[poor]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஏழ்மை]]></category>
		<category><![CDATA[பசி]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/181</guid>
		<description><![CDATA[இந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது! இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே கேட்டுவிட்டு ஒருவருக்கொருவர் கைகுலுக்க்கிக் கொண்டோம்! உண்மையில் நம் நாட்டில் அத்தனை சுபிட்சம் நிலவுகிறதா? பங்கு மார்க்கெட் குறியீடு 20,000-த்தை தாண்டிய அதே நாளில் 20,000 ஏழைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/poor.jpg' title="பசியோடு கையேந்தி நிற்கும் ஏழைகள" rel="lightbox"><img src='http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/poor.thumbnail.jpg' alt="பசியோடு கையேந்தி நிற்கும் ஏழைகள" class="alignleft" /></a>இந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது! இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே கேட்டுவிட்டு ஒருவருக்கொருவர் கைகுலுக்க்கிக் கொண்டோம்!</p>
<p>உண்மையில் நம் நாட்டில் அத்தனை சுபிட்சம் நிலவுகிறதா?</p>
<p>பங்கு மார்க்கெட் குறியீடு 20,000-த்தை தாண்டிய அதே நாளில் 20,000 ஏழைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே நடந்து தலைநகர் புதுடில்லி வந்து தர்னா செய்திருக்கிறார்கள்.</p>
<p>அவர்கள் வேண்டியது என்ன? பல காரணங்களுக்காக அரசு கையகப்படுத்திய நிலம் திரும்ப வேண்டும். அவர்களுக்கு ஜீவனத்திற்கு வேறு ஒன்றுமே கிடையாது. முழுப் பட்டினி. ஆம் பட்டினி! பட்டினி, பசி இதற்கெல்லாம் நமக்கு &#8211; நன்கு தின்று கொழித்து கொலெஸ்டிராலைக் குறைக்க காலையில் சோம்பலோடு நடை பழகுகிறோமே அந்த நமக்கு &#8211; என்னவென்று தெரியுமா?</p>
<p>நம் நாட்டில் இன்னமும் பல கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள். அரசியல்வாதிகளைக் கேளுங்கள். ஏழைகளின் துயர் தீர்க்க அவதாரமெடுத்தவர்கள். உணர்ச்சி பொங்க வீராவேசத்துடன் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, காரில் பவனி வந்தபின் கைத்தடிகள் படைசூழ விமானமேறிச் சென்று விடுவார்கள். பிரச்னை தீர்ந்ததா!</p>
<p>இரெயில் வண்டியில் நெடு தூரம் பயணம் செய்திருக்கின்றீர்களா? வண்டியில் கொடுக்கப்படும் உணவை நீங்கள் சாப்பிட்டபின் அதில் ஒட்டியிருக்கும் எச்சில் உணவுத் துண்டுகளை வழித்து உண்ணும் ஏழைச் சிறுவர்களைப் பார்த்திருக்கிறீர்களா! இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. வயிற்றை என்னமோ செய்கிறது. <img src='http://kichu.cyberbrahma.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':sad:' class='wp-smiley' />  </p>
<p>என்று விடியும் இது போன்ற ஏழைகளுக்கு!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழனை அந்நியனாக்கிய அரசியல்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/09/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/09/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Thu, 27 Sep 2007 21:49:35 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[தேசீயம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தி]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/157</guid>
		<description><![CDATA[தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும்! இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், <a href="http://ennar.blogspot.com/2005/08/blog-post_13.html">அறிவானந்தன் என்பவர் தன் பதிவில்</a>! மேலும் பி.எஸ்.நரேந்திரனின் &#034;<a href="http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=20304065&#038;edition_id=20030406&#038;format=html" title="தமிழை அழிக்க திமுக ஆட்சியே போதும்!">இந்தியும். நந்திகளும்</a>&#034; என்னும் தலைப்பிட்ட &#034;<a href="http://www.thinnai.com/">திண்ணை</a>&#034;க் கட்டுரையும் வாசியுங்கள்.</p>
<p>&#034;திராவிட&#034; என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது? பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது? இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி! மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.</p>
<p>தமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர!). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். &#034;மதராசியா, அவன் ஒரு &#039;அகடம் பகடம்&#039; ஆளய்யா&#034; என்பார்கள்!</p>
<p>இந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு? இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா? தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா? தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.</p>
<p>இந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் <em>செல்வம் &#8211; அது இந்தியில்தான் பேசுகிறது!!</em></p>
<p>நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?</p>
<p>சிந்தித்துப் பாருங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/09/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/07/caste-division-is-the-chief-enemy-of-hinduism/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/07/caste-division-is-the-chief-enemy-of-hinduism/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jul 2007 05:10:29 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[ஹிந்து மதம்]]></category>
		<category><![CDATA[caste]]></category>
		<category><![CDATA[hindu]]></category>
		<category><![CDATA[hinduism]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[இந்து]]></category>
		<category><![CDATA[இந்து மதம்]]></category>
		<category><![CDATA[சாதி]]></category>
		<category><![CDATA[ஜாதி]]></category>
		<category><![CDATA[பண்பு]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>
		<category><![CDATA[வர்க்கம்]]></category>
		<category><![CDATA[ஹிந்து]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/151</guid>
		<description><![CDATA[ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். &#039;200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்&#039; என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், &#039;பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை&#039; என்றனர். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote>
<p>ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். &#039;200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்&#039; என்று அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள், &#039;பாரதத்தில் பல இந்துக்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதுவே எங்கள் ஆட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படிப் பட்டவர்கள் இருக்கும்போது பாரதத்தை அடிமைப் படுத்தவோ தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவோ நாங்கள் சிரமப்பட வேண்டியதில்லை&#039; என்றனர். </p>
<p>ஆங்கிலேய அதிகாரிகள் சொன்ன இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் தேசிய சக்திகள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் சமமானவர்கள்; சம உரிமையுடைய குடிமக்கள். இது உறுதிப்படாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் இரண்டாந்தர குடிமக்கள் என்றால் அதற்குக் காரணம் ஹிந்துக்களே தவிர வேறு யாருமில்லை.</p>
<p>இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு தேசிய எண்ணம் கொண்டவர்களுக்கு உல்ளது. யாரையும் இகழ்வாக நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அடிமையாக இருக்க மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும். சம உரிமையுள்ளவர்களாகச் செயல்படும்போதுதான் எழுச்சி மிக்க பாரதத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.</p></blockquote>
<p><em><br />
(ஜூன் 16-ம் தேதி டில்லியில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஓய்வு பெர்ற I.F.S அதிகாரி ஓ.பி.குப்தா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)</em></p>
<p>நன்றி: &#034;விஜய பாரதம்&#034; வார இதழ்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/07/caste-division-is-the-chief-enemy-of-hinduism/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
	</channel>
</rss>

