<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை &#187; சங்கீதம்</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/tag/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளத்தனையது உயர்வு</description>
	<lastBuildDate>Wed, 14 Dec 2011 22:20:21 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>இசையுலக இளவரசர் ஜி.என்.பி</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2006/12/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2006/12/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Thu, 21 Dec 2006 12:41:16 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[carnatic]]></category>
		<category><![CDATA[gnb]]></category>
		<category><![CDATA[music]]></category>
		<category><![CDATA[சங்கீதம்]]></category>
		<category><![CDATA[ஜிஎன்பி]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=127</guid>
		<description><![CDATA[தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான &#034;லலிதா ராம்&#034; அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். &#034;நேசமுடன்&#034; வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. இந்நூலின் இன்னொரு சிறப்பு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="/wp-images/images_ISAI.jpg" width="150" height="200" alt="கந்தர்வர்" title="கந்தர்வர்" class="alignleft" />தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான &#034;லலிதா ராம்&#034; அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். &#034;நேசமுடன்&#034; வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.</p>
<p><img src="/wp-images/gnb.jpg" width="143" height="200" alt="Prince charming" title="Prince charming" class="alignright" />இந்நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளிவந்துள்ள பல கிடைத்தற்கரிய படங்கள். அவை சங்கீத ரசிர்கர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு. லலிதா ராம் அவர்கள் ஜிஎன்பியின் இசையின் நுணுக்கங்களை விவரித்து எழுதியுள்ளார். இது அவருடைய ஆழ்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் பலரைப் பேட்டிகண்டு, இதுவரை எவரும் அறியாத பல நிகழ்வுகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.</p>
<p>இந்த சீறிய பொக்கிஷத்தின் விலை வெறும் ரூ. 65 தான்! இதை இணையத்தில் பெற இந்த உரலை க்ளிக் செய்க:<br />
<a href="http://www.vikatan.com/Publication/new_pub/category.asp?id=la">விகடன்.டாட் காம் இணையத்தில் வாங்கும் வசதி</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2006/12/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அகடம் விகடம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2004/10/%e0%ae%85%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2004/10/%e0%ae%85%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 14 Oct 2004 22:16:33 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[carnatic]]></category>
		<category><![CDATA[carnatic music]]></category>
		<category><![CDATA[music]]></category>
		<category><![CDATA[raga]]></category>
		<category><![CDATA[vidwan]]></category>
		<category><![CDATA[அகடம் விகடம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கல்யாணி]]></category>
		<category><![CDATA[கானடா]]></category>
		<category><![CDATA[கீரவாணி]]></category>
		<category><![CDATA[சங்கீதம்]]></category>
		<category><![CDATA[டுபாக்கூர்]]></category>
		<category><![CDATA[தாளம்]]></category>
		<category><![CDATA[பந்தா]]></category>
		<category><![CDATA[பீலா]]></category>
		<category><![CDATA[ராகம்]]></category>

		<guid isPermaLink="false">/?p=9</guid>
		<description><![CDATA[எஸ்.வி.வி-யின் &#034;உல்லாஸ வேளை&#034;யில் &#034;சங்கீதப் புளுகு&#034; பற்றி எழுதி யிருப்பார். கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட &#034;ஸ்டிரைட் ட்ரைவ்&#034;, &#034;கவர் ட்ரைவ்&#034; என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி, தொடையைத் தட்டி, மேலும் தன் கைகளையோ அல்லது தாம் அமர்ந்திருக்கும் சேர் மேலேயோ உரக்கத் தட்டி, &#034;தப்புத்&#034;தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணர் போல [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எஸ்.வி.வி-யின் &#034;உல்லாஸ வேளை&#034;யில் &#034;சங்கீதப் புளுகு&#034; பற்றி எழுதி யிருப்பார். </p>
<p>கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட &#034;ஸ்டிரைட் ட்ரைவ்&#034;, &#034;கவர் ட்ரைவ்&#034; என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி, தொடையைத் தட்டி, மேலும் தன் கைகளையோ அல்லது தாம் அமர்ந்திருக்கும் சேர் மேலேயோ உரக்கத் தட்டி, &#034;தப்புத்&#034;தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணர் போல பீலா விடுபவர்கள் அநேகம். நீங்கள் கேட்கும் பாட்டின் இராகம் தெரியவில்லையென்றால் பக்கத்தில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் (பெரும்பாலும் அவர்கள்தான் கொஞ்சம் ஞானஸ்தராக இருப்பார்கள்) &#034;இது என்ன&#034; ராகம்&#034; என்று கேட்டால் ”ஏதோ இந்த ஒரு ராகம்தான் இவருக்குத் தெரியாது போலிருக்கிறது” என்று நினைத்துக் கொள்ள சான்ஸ் இருக்கிறது. ஆனால் நீங்கள் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்கள் பாடப்படும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் சுத்த &#034;ஞான சூனியம்&#034; என்று சந்தேகமில்லாமல் தெரிந்துவிடும் அபயம் இருக்கிறது!</p>
<p>இதைத் தவிர்க்க என் நண்பரொருவர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். திடீரென்று, &#034;இது பேகடாவா, தர்பாரா&#034; என்று கேட்பார். பக்கத்தில் இருப்பவர் தலையில் அடித்துக் கொண்டு, &#034;ரெண்டுமில்லை, கீரவாணி&#034; என்றால், &#034;ஒஹோ, அதான் கொஞ்சம் சாயல் அடிக்கிறதே-ன்னு பாத்தேன்&#034; என்பார். இதனால் அவர் ”இது ஒரும் வெத்து &#034;ஃபிலிம்&#034; கம்பெனி. சும்மா பந்தா காட்டுது” என்று நினைத்துக் கொண்டாலும், பக்கத்தில் இருக்கும் மக்கள், ”ஆஹா, இவ்வளவு ராகத்தின் பெயரெல்லாம் இவர் தெரிந்து வைத்திருக்கிறாரரே&#034; என்று நினைக்கலாமல்லவா. அதற்குத்தான் இந்த டுபாக்கூர் வேலை.</p>
<p>இப்படியும் சிலபேர்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2004/10/%e0%ae%85%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

