சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் "ப்ரேக்ஃபாஸ்ட்" என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் ஸ்டேஷனில் வண்டி ஏறித்தான் பொன்மலை செல்லவேண்டும். இரவு சாப்பாடு "மாயவரம் லாட்ஜ்" அல்லது "ஆர்.டி.ஸி"யில்.
அந்த ஆனந்தா லாட்ஜில் ரெகுலராக சாப்பிடுபவர்களுக்கு "பில்" கொடுப்பது கிடையாது. சாப்பிட்ட பிறகு "கல்லா"வில் இருக்கும் கணக்கு நோட்டில் நம் பக்கத்தை எடுத்து நாமாக எவ்வளவு அணாவுக்கு சாப்பிட்டோம் என்று கணக்கு போட்டு எழுதிவைக்க வேண்டியதுதான். அடுத்த மாத ஆரம்பத்தில் கூட்டுப் புல்ளி போட்டு கணக்கை நேர் பண்ணவேண்டும். அநேகமாக யாரும் ஏமாற்றுவது கிடையாது. இப்படி நம்பிக்கையிலேயேதான் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனந்தா லாட்ஜில் டிஃபன் மிக ருசியாக இருக்கும். ஒருநாள் காலையில் "கமகம"வென்று நெய்ப்பொங்கல். நல்ல பசி வேறு எனக்கு. ஒரு "பிடி" பிடித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு "புஸ்தி" மீசைக்காரப் பெரியவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: ஜன 21st, 2006. 11 மறுமொழிகள்.
இன்று மனைவிக்கு பிறந்த நாள். மகள் சென்னைஆன்லைன்.காம் மூலமாக அனுப்பியுள்ள மலர்க்கொத்து வந்து சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெலிவரி கிடையாதாம்.
சரி ஏதாவது புதிதாக செய்வோம் என்று தேடியதில், ஒரு இயற்கை உணவகத்திற்கு சென்றாலென்ன என்று தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் எங்கும் நிறைந்திருக்கும் "குடிசை", "முக்கு" கடைகளில் கிடைக்கும் ("சார், உங்களுக்காக சிறப்பு சலுகை. இரெண்டு வாங்கினால் ஒரு குட்டியூண்டு வெக்கி இலவசம்") "சப்புச்சரவு" வரட்டி போன்ற பன்ரொட்டிமேல் சீஸால் மெழுகி "பீட்ஸா" என்றழைக்கப்படும் வஸ்து வேட்பாளராக வராமலிருந்தால் சரி என்று நிம்மதியாக இருந்தேன். தவிர "சுத்த சைவ" ஓட்டல்களின் அசுத்தங்களையும், ஐந்து, ஆறு தாரகைகள கொண்ட உணவகங்களில் ஆழுறை நிலையில் (deep freeze) வைக்கப்பட்டு சூடேற்றப்பட்ட உயிரில்லாத "பொஃப்fபே" (வயிற்றுக்கு "பெப்பே") சாப்பாட்டையும் அனவரதமும் உள்ளே தள்ளிச் சலித்த எனக்கு, இயற்கை உணவு ஒரு மாறுதலாக இருக்குமே என்று தோன்றியது. முன்பெல்லாம் இயற்கை உணவு என்று சொன்னால் எங்கோ படித்த "People who eat natural food will die of natural causes" என்ற வாசகத்தை ஒப்பித்துவிட்டு அந்த தத்துவத்தையே கிண்டல் செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெட்டர் ஹாஃப் "பிட்டர் ஹாஃப்" ஆவதற்கு முன் "சரி"யென்றேன்.
சரி, சுருங்கச் சொல்வதானால் கேரளத்தைச் சேர்ந்த "ச்சோலையில்" நிறுவனத்தாரின் "சஞ்சீவனம்" நடத்தும் "கதலிவனம்" என்னும் முழுமையான இயற்கை உணவு நிலையத்திற்கு புறப்பட்டேன். இதற்காக காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் சாப்பிட்டு பக்குவமான பசியைத் தயார் நிலையில் வைத்திருந்தேன்.
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: நல்வாழ்வு :: நாள்: அக் 23rd, 2005. 7 மறுமொழிகள்.
சமீபத்திய மறுமொழிகள்