<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை &#187; அரசியல்</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/tag/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளத்தனையது உயர்வு</description>
	<lastBuildDate>Wed, 14 Dec 2011 22:20:21 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>விநோதமான தமிழாக்கம்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 12 Nov 2011 17:03:33 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Norway]]></category>
		<category><![CDATA[pawn]]></category>
		<category><![CDATA[pawns of freedom]]></category>
		<category><![CDATA[peace talks]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[thamizh]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நார்வே]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[பகடைக்காய்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=451</guid>
		<description><![CDATA[நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன &#034;அமைதிக்கான அடமானங்கள்&#034;? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது &#034;Pawns of Peace&#034; என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது! &#034;Pawn&#034; என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு: அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.</p>
<p><a href="https://lh6.googleusercontent.com/-oBaAabzTJjU/Tr6g8JIDVeI/AAAAAAAAE-M/bwUDOkZFwtk/s800/pawns-1.jpg"><img src="https://lh6.googleusercontent.com/-oBaAabzTJjU/Tr6g8JIDVeI/AAAAAAAAE-M/bwUDOkZFwtk/s400/pawns-1.jpg" alt="Pawns of peace" class="aligncenter" /></a></p>
<p>அது என்ன &#034;அமைதிக்கான அடமானங்கள்&#034;? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது &#034;Pawns of Peace&#034; என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது!</p>
<p>&#034;Pawn&#034; என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:
<ol>
<li>அடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது</li>
<li>செஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர் </li>
<li>பிறரால் &#034;பகடைக்காயாக&#034; பயன்படுத்தப்படுதல்</li>
</ol>
<p>மேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் &#034;pawn&#034; என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.<br />
<span id="more-451"></span><br />
&#034;They were used as mere pawn&#034; என்னும் சொல்லாட்சி சாதாரணமாக நீங்கள் காணக்கூடியது. The term &#034;pawn&#034; gets the meaning of &#034;a person, group, etc., manipulated by another&#034; in such a context.</p>
<p>இணயத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு வலைத்தளைத்திலோ வலைப்பதிவிலோ ஒரு தவறான ஆக்கம் பதிப்பிக்கப்பட்டால் அது பலரால் எடுத்துக் கையாளப்பட்டு ஈசல் போல் பரவிவிடும். இதோ பாருங்கள் இநத &#034;அடமானங்கள்&#034; பல்கிப் பெருகிக் கிடப்பதை!</p>
<p><a href="https://lh3.googleusercontent.com/-5z09GUDWkHo/Tr6g8AosKeI/AAAAAAAAE-Q/GMmAJodN60A/s800/pawns.jpg" title="அமைதிக்கான அடமானங்கள்"><img src="https://lh3.googleusercontent.com/-5z09GUDWkHo/Tr6g8AosKeI/AAAAAAAAE-Q/GMmAJodN60A/s400/pawns.jpg" alt="அமைதிக்கான அடமானங்கள்" /></a></p>
<p>நார்வே நாட்டின் இலங்கை அமைதி முயற்சிகள் பற்றிய <a href="http://www.norad.no/en/tools-and-publications/publications/evaluations/publication?key=386346" title="Download the report "Pawns of peace"" target="_blank">அந்த ஆய்வறிக்கையில்</a> அடிநாதமாக அமைந்திருக்கும் வாதம் நார்வே நாடு இந்தப் பிரச்னை தொடர்பான நாடுகள் மற்றும் இயக்கங்களால் பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்பதுதான். அவ்வறிக்கையில் காணும் கீழ்க்கண்ட பகுதிகளை வாசியுங்கள்:</p>
<blockquote><p>
The Norwegian team were aware of these limitations and feared becoming a ‘pawn<br />
in domestic politics’.</p>
<p>While there was awareness amongst the Norwegians of<br />
the growing risks of Norway becoming a pawn in Sri Lanka’s domestic politics, Nor-way should have been more alert to its possible consequences.</p></blockquote>
<p>ஆனால் இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது ஈழத் தமிழர்கள்தான் பகடைக்காய்களாக ஆனார்கள் என்பது பலரது வாதம். இதோ பாருங்கள்:</p>
<p><a href="https://lh5.googleusercontent.com/-CDxeTp3em_Y/Tr6g8IR2VOI/AAAAAAAAE-c/5K9kYQqMdGA/s800/pawns-2.jpg" title="பகடைக்காய்"><img src="https://lh5.googleusercontent.com/-CDxeTp3em_Y/Tr6g8IR2VOI/AAAAAAAAE-c/5K9kYQqMdGA/s400/pawns-2.jpg" alt="பகடைக்காய்" /></a></p>
<p>இதுபோன்ற பல &#034;குண்டக்க முண்டக்க&#034; வகை தமிழாக்கங்களை அன்றாடம் காணமுடிகிறது. நினைவு வரும்போது அவற்றை உங்கள்முன் வைக்கிறேன்!</p>
<p>&#8212;</p>
<p>அது கிடக்கட்டும், நார்வே நாட்டின் அந்த ஆய்வறிக்கையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்? என் பார்வையை அடுத்த பதிவில் பகிர முயற்சிக்கிறேன்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2011/11/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இலவசங்களின் மறுபக்கம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/#comments</comments>
		<pubDate>Sun, 16 Aug 2009 05:16:31 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[freebies]]></category>
		<category><![CDATA[laziness]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலவசம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சோம்பல்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=394</guid>
		<description><![CDATA[இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு (நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.) தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு</p>
<p>(நன்றி. <a href="http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16126">தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009</a>.)</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/plough.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/plough-150x100.jpg" alt="உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்" title="உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்" width="150" height="100" class="alignright size-thumbnail wp-image-396" /></a>தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.</p>
<p>சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச &#034;டிவி&#039;, காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.</p>
<p>நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.</p>
<p>இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.</p>
<p>சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.</p>
<p>மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. &#034;உழைத் தால் தான் உணவு&#039; என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.</p>
<p>குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.</p>
<p>ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு &#034;டிவி&#039; தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு &#034;டிவி&#039;க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>யார் குற்றவாளி?</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2008/04/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2008/04/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Mon, 28 Apr 2008 11:32:00 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தடுப்பு ஊசி]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=239</guid>
		<description><![CDATA[தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன. இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். &#034;எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன. </p>
<p>இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். &#034;எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு அறிகையை அளிப்போம்&#034; என்று கூறிவிட்டனர். அந்த அறிக்கை என்ன்வாகும்? இதற்குமுன் நடந்த பல்வேறு விசாரணை அறிக்கைகளின் கதிதான் இதற்கும்.</p>
<p>ஆனால், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார்? மத்திய அரசும், மத்திய அரசில் சுகாதாரப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரும் இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று கூறிவிட்டனர். மாநில அரசும் கைவிரித்தாகி விட்டது. நர்சுகள்தான் தவறு செய்துவிட்டனர் என்றனர். அவர்களும் இது அநியாயப் பழி எங்கள் மேல் என்கின்றனர்.</p>
<p>குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் இந்த அறிக்கைகளைப் படித்து திருப்தி அடைய வேண்டியதுதானா!</p>
<p>பின் யார்தான் குற்றவாளி? இறந்த குழந்தைகளா!!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2008/04/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழனை அந்நியனாக்கிய அரசியல்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2007/09/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2007/09/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Thu, 27 Sep 2007 21:49:35 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[தேசீயம்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தி]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/archives/157</guid>
		<description><![CDATA[தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும்! இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், <a href="http://ennar.blogspot.com/2005/08/blog-post_13.html">அறிவானந்தன் என்பவர் தன் பதிவில்</a>! மேலும் பி.எஸ்.நரேந்திரனின் &#034;<a href="http://www.thinnai.com/?module=displaystory&#038;story_id=20304065&#038;edition_id=20030406&#038;format=html" title="தமிழை அழிக்க திமுக ஆட்சியே போதும்!">இந்தியும். நந்திகளும்</a>&#034; என்னும் தலைப்பிட்ட &#034;<a href="http://www.thinnai.com/">திண்ணை</a>&#034;க் கட்டுரையும் வாசியுங்கள்.</p>
<p>&#034;திராவிட&#034; என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது? பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது? இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி! மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.</p>
<p>தமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர!). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். &#034;மதராசியா, அவன் ஒரு &#039;அகடம் பகடம்&#039; ஆளய்யா&#034; என்பார்கள்!</p>
<p>இந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு? இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா? தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா? தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.</p>
<p>இந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் <em>செல்வம் &#8211; அது இந்தியில்தான் பேசுகிறது!!</em></p>
<p>நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?</p>
<p>சிந்தித்துப் பாருங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2007/09/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>என்று தணியும் இந்த இரத்த தாகம்?</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2005/10/unending-terrorism/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2005/10/unending-terrorism/#comments</comments>
		<pubDate>Sat, 29 Oct 2005 15:09:17 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[terrorism]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=96</guid>
		<description><![CDATA[வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது. தமிழ்ப்பதிவுகள்]]></description>
			<content:encoded><![CDATA[<p>வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள  மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது.  மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது.</p>
<p><span style="font-size: 9px;"><a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="tag">தமிழ்ப்பதிவுகள்</a></span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2005/10/unending-terrorism/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>

