<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை</title>
	<atom:link href="http://kichu.cyberbrahma.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளம் நிறைந்த உணர்வுகள்!</description>
	<lastBuildDate>Fri, 19 Mar 2010 08:13:23 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>பிரியங்காவின் அட்டகாசமான குரல் வளம்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2010/01/brilliant-performance-by-priyanka-in-airtel-super-singer-junior/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2010/01/brilliant-performance-by-priyanka-in-airtel-super-singer-junior/#comments</comments>
		<pubDate>Sat, 09 Jan 2010 15:56:01 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[airtel]]></category>
		<category><![CDATA[mellifuous voice]]></category>
		<category><![CDATA[priyanka]]></category>
		<category><![CDATA[super singer junior]]></category>
		<category><![CDATA[ஏர்டெல்]]></category>
		<category><![CDATA[சூப்பர் சிங்கர்]]></category>
		<category><![CDATA[ஜூனியர்]]></category>
		<category><![CDATA[பிரியங்கா]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=431</guid>
		<description><![CDATA[என் அபிமான பாடகி செல்வி. பிரியங்கா தன் தயக்கத்தை விட்டுப் பாடிய இந்த நிகழச்சியை (வடு மாங்காயை!) ரசியுங்கள்!

]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் அபிமான பாடகி செல்வி. பிரியங்கா தன் தயக்கத்தை விட்டுப் பாடிய இந்த நிகழச்சியை (வடு மாங்காயை!) ரசியுங்கள்!</p>
<p><object width="500" height="400"><param name="movie" value="http://www.youtube.com/v/twhFWfdlJI8&#038;fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/twhFWfdlJI8&#038;fs=1" type="application/x-shockwave-flash" width="500" height="400" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2010/01/brilliant-performance-by-priyanka-in-airtel-super-singer-junior/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/12/airtel-super-singer-junior-priyanka/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/12/airtel-super-singer-junior-priyanka/#comments</comments>
		<pubDate>Mon, 28 Dec 2009 06:36:57 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[airtel]]></category>
		<category><![CDATA[beauty]]></category>
		<category><![CDATA[culture]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[junior]]></category>
		<category><![CDATA[music]]></category>
		<category><![CDATA[parents]]></category>
		<category><![CDATA[priyanka]]></category>
		<category><![CDATA[super singer]]></category>
		<category><![CDATA[vijay tv]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[குயில்]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சூப்பர் சிங்கர்]]></category>
		<category><![CDATA[ஜூனியர்]]></category>
		<category><![CDATA[பிரியங்கா]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=428</guid>
		<description><![CDATA[என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி  முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”
ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்&#8230; பெரும்பாலும் &#039;கிரீச் கிரீச்&#039; என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி  முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”</p>
<p>ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்&#8230; பெரும்பாலும் &#039;கிரீச் கிரீச்&#039; என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/priyanka-3.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/priyanka-3-130x150.jpg" alt="Priyanka" title="Airtel Super Singer Junior Priyanka" width="130" height="150" class="alignleft size-thumbnail wp-image-429" /></a>ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!</p>
<p>அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?</p>
<p>இதோ இவர்தான் -- அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.</p>
<p>என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:<br />
<span id="more-428"></span></p>
<p><object width="500" height="400"><param name="movie" value="http://www.youtube.com/v/PnOhxF_oQHw&#038;fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/PnOhxF_oQHw&#038;fs=1" type="application/x-shockwave-flash" width="500" height="400" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
<p>அந்த செல்லக் குயில் பிரியங்கா பாடிய மற்ற பாடல்கள் இவை:</p>
<p>	<!-- Smart Youtube -->
	<span class="youtube">
		<object type="application/x-shockwave-flash" width="425" height="355" data="http://www.youtube.com/p/0297200EF75762E9&amp;rel=1&amp;color1=d6d6d6&amp;color2=f0f0f0&amp;border=0&amp;fs=1&amp;hl=en&amp;autoplay=0&amp;showinfo=0&amp;iv_load_policy=3&amp;showsearch=0" >
			<param name="movie" value="http://www.youtube.com/p/0297200EF75762E9&amp;rel=1&amp;color1=d6d6d6&amp;color2=f0f0f0&amp;border=0&amp;fs=1&amp;hl=en&amp;autoplay=0&amp;showinfo=0&amp;iv_load_policy=3&amp;showsearch=0" />
			<param name="allowFullScreen" value="true" />
			<param name="allowscriptaccess" value="always" />
		</object>
	</span><a href="http://www.youtube.com/watch?v=0297200EF75762E9">www.youtube.com/watch?v=0297200EF75762E9</a></p>
<p>பிரியங்கா பாடும் நேர்த்தியைப் போல் அவருடைய அமைதியான தோற்றம், கள்ளம் கபடில்லாத சிரிப்பு, அவருடைய உடை, முடி அலங்காரம் எல்லாமே அழகு!</p>
<p>அந்தப் பெண்ணின் குரல் அநாயாசமாக மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்கிறது. சிறிதளவுகூட பிசிறில்லாமல் பலவித ஜாலங்களைப் புரிகிறது. ஆனால் அவருடைய தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது; ஒரே “அமரிக்கையான” சிரிப்புதான் அந்த முகத்தில் குடிகொண்டிருக்கும்! இத்தனை குழைவும், பிருகாக்களும், மேல் “நோட்ஸ்” பாடும்போடு ஒலிக்கும் அலைக்கற்றைகளும் பல பாடகர்களை பொறாமை கொள்ளச் செய்யும் என்ப்து நிச்சயம். நாமும் பார்க்கிறோமே, கர்நாடக இசை மேடைகளில், என்னென்னமோ கைகால்களை ஆட்டி, முகத்தைச் சுளித்து பலவித அங்க சேஷ்டைகளைச் செய்தவண்ணம் இருக்கிறார்கள்; ஆனால் பாவம், குரல்தான் பேச மறுக்கிறது!</p>
<p>பிரியங்காவின் பெற்றோர்கள் உணமையிலேயே பெரும் பாக்கியசாலிகள்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/12/airtel-super-singer-junior-priyanka/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>ஜிஎன்பி நூற்றாண்டு விழா</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/12/%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/12/%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Wed, 16 Dec 2009 08:05:34 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[alapana]]></category>
		<category><![CDATA[briga]]></category>
		<category><![CDATA[brigha]]></category>
		<category><![CDATA[carnatic]]></category>
		<category><![CDATA[carnatic music]]></category>
		<category><![CDATA[centenary]]></category>
		<category><![CDATA[gnb]]></category>
		<category><![CDATA[kambodhi]]></category>
		<category><![CDATA[raga]]></category>
		<category><![CDATA[sakunthalai]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[காம்போதி]]></category>
		<category><![CDATA[சகுந்தலை]]></category>
		<category><![CDATA[ஜி.என்.பி]]></category>
		<category><![CDATA[ஜிஎன்பி]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=423</guid>
		<description><![CDATA[இந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.
மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/gnb_old.jpg" alt="GNB practicing at home" title="GNB practicing at home" width="144" height="164" class="alignleft size-full wp-image-424" />இந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை <a href="http://kichu.cyberbrahma.com/tag/gnb/">ஜிஎன்பி</a> அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து <a href="http://www.gnbalasubramaniam.com/CentSched.html" target="_blank">மாதா மாதம்</a> இசை நிகழ்ச்சிகளையும் ஜிஎன்பி பற்றிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். உண்மையில் ஜிஎன்பியின் நினைவு நாளை ஆண்டு தோறும் தவறாமல் சிரத்தையாக இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் நிகழ்த்தி வருவது மிகவும் போற்றத்தக்கதாகும்.</p>
<p>மேலும் கிருஷ்ண கான சபா, முத்ரா போன்ற அமைப்புக்களும் அவ்வப்போது கச்சேரி மற்றும் ஜிஎன்பியின் இசையின் பெருமைகள், நுணுக்கங்கள் பற்றிய விளக்கவுரைகள் போன்றவற்றை டாக்டர். எஸ்.ஏ.கே.துர்கா போன்ற வல்லுனர்களைக் கொண்டு நிகழ்த்தி அந்த மேதையின் நினைவைப் போற்றி வருகின்றன.</p>
<p>இவற்றைத் தவிர திரு. இராமபத்திரன் அவர்கள் தலைமையில் இயங்கும் Shanthi Arts Foundation and Endowments (<a href="http://www.safe.org.in/">SAFE</a>) என்னும் அமைப்பினர், கிளீவ்லேண்ட் சுந்தரம் போன்ற இசைப் புரவலர்களுடன் இணைந்து ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை அகில உலக அளவில் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சென்ற மாதம் SAFE நிகழ்த்திய வளர்ந்துவரும் இளைய வித்வான்களின் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஜிஎன்பியின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தன. அவருடைய சாகித்யங்கள் பல எல்லோராலும் பாடப்பட்டன.</p>
<p>இவ்வளவு சிறப்பாக ஜிஎன்பி என்னும் இசை மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருப்பது என்போன்ற பல ஜிஎன்பி பக்தர்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண நேர்ந்தபொது மனத்தில் விஞ்சி நின்றது என்னவோ ஏமாற்றமும் கசப்புணர்ச்சியும்தான் என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை!<br />
<span id="more-423"></span><br />
ஒவ்வொரு மாதமும் ஜிஎன்பியைப் பற்றி சொற்பெருக்காற்றுவதற்காக நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் பேச்சாளர்களில் சிலர் கர்நாட இசைக்கோ, ஜிஎன்பி அவர்களுக்கோ எந்தவித “ஸ்நானப் பிராப்தி”யும் இல்லாதவர்களாக அமைந்திருந்ததுதான் ஒரு தமாஷாக இருந்தது. அந்த  விருந்தினர் ஏதேனும் ஒருவகையில் பலர் அறிந்த பெரிய மனிதராக இருந்தால் மட்டும் போதுமா? பேச எடுத்துக் கொண்ட பொருளுக்கு சற்றேனும் தொடர்பு இருக்க வேண்டாமா?</p>
<p>ஒரு மாத நிகழ்ச்சிக்கு பிரபல வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ்.சுவாமிநாதனை அழைத்திருந்தார்கள். அவரை ஏதேனும் வேளாண் கருத்தரங்கிற்கு பேச ஆழைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அவர் பாவம். “நீங்கள் எல்லோரும் ஜிஎன்பியைப் பற்றி மிகவும் சிறப்பாக புகழ்ந்திருக்கிறீர்கள். அதனால் அவர் ஒரு தலை சிறந்த வித்துவானாகத்தான் இருந்திருக்க வேண்டும். நான் அவர் பாட்டைக் கேட்டதில்லை. நான் தான் எப்போதும் பல வெளிநாட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேனே” என்று ஏதோ பேசி ஒப்பெத்தினார். நம்மூர் வழக்கப்படி அதற்கும் சபையோர் அனைவரும் கரவொலி எழுப்பி தங்கள் கடமையைச் செவ்வனே செய்தனர்.</p>
<p>இன்னொருவர் வேறு விதம். என் நண்பர் லலிதா ராம் எழுதியுள்ள ஜிஎன்பியின் சுயசரிதை நூலை கையில் பிடித்துக் கொண்டு “ஜிஎன்பியின் தந்தையின் பெயர் ஜி.விநாராயணசாமி ஐயர்” என்று படிக்க ஆரம்பித்தார். அத்தோடு விட்டாரா. ஜிஎன்பி ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றும்போது அவருக்கு நான் உதவி செய்திருக்கிறேன் என்று சுய புராணத்தை வேறு அவிழ்த்து விட்டார். வயதையும் வருடங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது நிச்சயம் நடந்திருக்கும் சாத்தியம் லவலேசமும் இல்லை என்பது புரியும். ஆனால் சந்தடி சாக்கில் தன் புராணத்தையும் சிந்திவிட்டுப் போகும் போக்கு சாதாரணமாகவே பலரிடம் இருப்பதால் எவரும் அதை லட்சியம் செய்யவில்லை.</p>
<p>இன்னொரு கூத்து நடந்தது. ”சங்கீதப்பிரியா” என்னும் இசை ஆர்வலர்கள் கொண்ட குழுவினர், பதிவு செய்யப்பட்ட ஜிஎன்பி இசையை செவி மடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நகரத்தில் உள்ள பெரிய மனுஷாளின் சபை ஒன்றில் நடத்த ஏற்பாடு செய்து விட்டனர். அங்கு ஒரு பிரபல திரைப்பட வரலாற்றாளர் (Film historian) பேச எழுந்து ”சகுந்தலையில் ஏதோ ஜிஎன்பி மூக்கால என்னமோ பாடியிருப்பாரே, பைரவியோ என்னமோ, என்ன அது” என்று எகத்தாளமாகப் பேசி தன் இசை மேதாவிலாசத்தை அறங்கேற்றினார். உண்மையில் அன்று வருகை தந்திருந்த ஜிஎன்பியின் ரசிகர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ரத்தம் கொதித்திருக்கும். நாகரிகம் கருதி அமைதி காத்தனர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!</p>
<p>அப்படி அவர் போகிற போக்கில் குறிப்பிட்ட பாடல் எது தெரியுமா? காம்போதி ராகத்தில் வேறு ஒருவருமே கையாண்டிராத வகையில் இரண்டு நிமிடத்திற்கும் சற்றுக் குறைவான நேரத்தில் அந்த ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் குழைத்து ஜிஎன்பி பாடியுள்ள &#034;எனை மறந்தனன்” என்று தொடங்கும் விருத்தம் (<a href="http://kichu.cyberbrahma.com/2008/10/gnb-sakunthalai-enai-maranthu/" target="_blank" title="சகுந்தலை காம்போதி விருத்தம் வீடியோ">இங்கே கிளிக் செய்து கேட்கலாம்</a>). அதைக் கேட்பதற்காகவே அந்தக் காலத்து நாதஸ்வர வித்வான் திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை மீண்டும் மீண்டும் சகுந்தலை திரைப்படத்தின் அந்தக் காட்சியை மட்டும் பார்த்தாராம். மேலும் மகாராஜபுரம் சந்தானம் தனக்கு இசை கற்பதற்கான ஆர்வம் வந்ததே அந்த காம்போதி விருத்தத்தைக் கேட்ட பிறகுதான் என்று கூறியிருக்கிறார்.</p>
<p>அது தவிர ஜிஎன்பியைப் பற்றி ஒருவர் தயாரித்துள்ள டிவிடியை ஒரு நாள் காண்பித்தார்கள். அதில் ஆடியோவும் சரியில்லை, வீடியோவும் சரியில்லை. ஒரு டாகுமெண்டரி எப்படி தயாரிக்கக் கூடாது என்பதற்கு அது ஒரு உதாரணம் என்றுதான் அதைக் கண்டவர்கள் பலர் விமரிசித்தனர்.</p>
<p>சரி. ஜிஎன்பியைப் பற்றி அறியாதவர்கள்தான் அவ்வாறு எதோ பேசி சமாளித்தனர். ஆனால் அவருடன் பழகியவர்கள், வேறு வகையில் தொடர்பு கொண்டவர்கள், அவரால் ஆதாயமடைந்தவர்கள் &#8211; இந்த வகையினர் பேசியவைதான் இன்னும் கொடுமையாக இருந்தது.</p>
<p>ஒரு பெரிய மனிதர் தன் தந்தைக்கு ஜிஎன்பி கால் பிடித்துவிட்ட பெருமையை சொல்லி மகிழ்ந்தார்.  மேலும் ஜிஎன்பியின் நல்ல தரத்துடன் கூடிய பாடல் பதிவுகள் பல அவருடைய ரசிகர்களுடைய சேமிப்புகளில் இருக்கும் நிலையில், அந்த நபர் ஒரு திராபையான ரெகார்டிங்கைப் போட்டு வலுக்கட்டாயமாக வந்திருந்தோரைக் கேட்க வைத்து, அதற்குச் சிகரம் வைத்தாற் போல் அதைப் பற்றிய விவரங்களையும் தப்பும் தவறுமாகச் சொல்லி பேஜார் பண்ணியது ஒரு காமெடியாக இருந்தது!</p>
<p>ஜிஎன்பியின் ஆதாமார்த்த நண்பராக அறியப்பட்ட இன்னொருவர், தனக்குச் செல்லமான ஒரு மிருதங்க வித்வான் பக்கவாத்தியம் வாசித்ததால்தான் ஜிஎன்பிக்கு பெருமை வந்தது என்று சரித்திரத்தையே மாற்றி எழுத முற்பட்டது அந்த மேதையின் நினைவுக்கு அவர் செய்த துரோகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.</p>
<p>எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் பல கச்சேரிகளில் ஜிஎன்பியுடன் பின்பாட்டுப் பாடிய அவருடைய சீடர் ஒருவர் பேசும்போது தன் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து ஜிஎன்பி வீட்டிலேயே தங்கியிருந்து அவரிடமிருந்து சங்கிதம் கற்று அவருடன் பாடிவந்த கதையைச் சொல்லிவிட்டு, அவருடைய வேலையில் புரோமோஷன் ஆகி “கிளாஸ் ஒன்” ஆபீசர் ஆனதால் அவருடன் கச்சேரிக்கு தொடர்ந்து “உடன் பாடுவது” இயலாது என்று விலகிவிட்டதாக அறிவித்தார். அந்த நேரம் அடுத்தடுத்து நேர்ந்த இதயக் கோளாறினால் ஜிஎன்பியின் உடல் நிலை மிகவும் தளர்ந்துபோன காலகட்டம். அப்போது கட்டாயம் அந்த சீடருடைய உதவி அவருக்குத் தேவைப்பட்டிருக்கும். ஆனல் அதற்காக அந்த சீடர் தன் சொந்த வாழ்வின் முன்னேற்றத்தை தியாகம் செய்ய முடியுமா? அதை விடுங்கள். அதற்குப் பிறகு அவர் சொன்னதுதான் “சுரீரென்று” மனத்தைத் தைத்தது.</p>
<p>அதற்கு முன்னால் பேசிய பலர் ஜிஎன்பியின் பரந்த மனத்தையும், பணம் பண்ணுவதை அவர் ஒரு பெரிய நோக்கமாகக் கொள்ளாதவர் என்றும், தன்னோடு தொடர்புள்ள அனைவருக்கும் அவர் வாரி வழங்கிய வள்ளல் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்திருந்தனர். மேலும் தன் சிஷ்யர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, சம்பிரதாயமான பழங்காலத்து வித்வான்களைப் போல தனக்கு வேஷ்டி துவைத்துப் போட வைத்தவர் இல்லை என்றும் புகழ் பாடினார்கள். இதுபோல் பலருக்கும் &#8211; தன் பக்க வாத்திய்க்காரர்கள் உட்பட &#8211; அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே வாரி வழங்கியது உணமையிலேயே போற்றத்தக்கதுதானா என்பதில் எனக்கு சில கருத்துவேற்றுமைகள் உள்ளன. இந்த உலகத்தில் தனக்கு மிஞ்சித்தான் தருமம் எல்லாம். எதிலும் ஒரு கணக்கு வேண்டும். சுறுக்குப் பையை இறுக்கிப் பிடிப்பதில் தவறேதுமில்லை. பத்து குழந்தைகளைப் பெற்ற பெரிய குடும்பஸ்தர் தன் எதிர்காலத்திற்காக பணம் சேர்த்துவைக்க வேண்டியது கடமை. பக்க வாத்தியக்காரர்களுக்கு என்ன நியாயமோ அதை ஏமாற்றாமல் கொடுத்தால் போதுமானது. மெயின் வித்துவானுக்கு இணையாகவொ அல்லது அதற்கு அதிகமாகவோ கொடுப்பது சரியில்லை, அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். அதைப் பற்றி பிரிதொரு நாள் பேசுவோம். இப்போது அந்த சிஷ்யர் உதிர்த்த முத்துக்கு வருவோம்!</p>
<p>ஜிஎன்பி மிகவும் தாராள மனதுள்ளவர், சீடர்களை நண்பர்கள்போல் நடத்தி அவர்களுடைய முன்னேற்றாத்திற்கு மிகவும் உதவியாக இருப்பார், அதனால்தான் ஜிஎன்பியின் காலத்திலேயே டி.ஆர்.பாலு, எம்.எல்.வி போன்ற சீடர்கள் பிரபலமாக முடிந்தது,  என்றுதான் அனைவரும் பேசினார்கள். இந்த சாதனை வேறு எந்த வித்வானுக்கும் கிடையாது என்ற உணமையையும் பலர் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட அந்த சீடருக்கு இது பொறுக்கவில்லை போலும். “அப்படி ஒரு பெருமையை தன் குருவுக்கு கொடுத்துவிடக் கூடாது” என்பதற்காகவே அதுபோல் பேசியவரை பார்த்து அவர் சொல்கிறார், “நான் வேஷ்டி தோய்ச்சும் போட்டிருக்கிறேன்” என்று! <strong>&#034;This was the most unkindest cut of all&#034;</strong> என்பது என் தாழ்மையான அயிப்பிராயம். ஜிஎன்பியின் வீட்டில் உண்டு, அவருடைய நிழலில் அனுபவித்து, ஒரு பரந்த மனதுடைய பெரிய மனிதரால் பயனடைந்து முடிந்தபின், அவர் காலமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி அவருடைய பெருமைக்கு இழுக்கு வரும்படியான விமரிசனம் ஒன்றைச் செய்யலாமா? இப்படியும் சில செய்நன்றி மறந்த மனிதப் பிறவிகள்!</p>
<p>இதோ நாள் நெருங்கி விட்டது. அடுத்த மாதம் ஜிஎன்பியின் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கப் போகிறது. அதைப் பற்றி ஆனந்த விகடனில் ஒரு சில கிசுகிசுக்கள் வந்திருந்த்தாக அறிகிறேன். நான் இன்னும் அதை வாசிக்கவில்லை. படித்தபின் அதைப்பற்றி என் விமரினங்களை எழுதுகிறேன்.</p>
<p>அதுவரை பொறுத்திருங்கள்!</p>
<p>ஒரு <acronym title="Disclaimer">டிஸ்கி</acronym>:</p>
<p>இக்கட்டுரையில் என் விமரிசனங்கள் மூலம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் இண்டியன் ஃபைனார்ட்ஸ் அமைப்பின் அர்ப்பணிப்பையோ, ஈடுபாட்டையோ குறைகூறவில்லை. அவர்கள் சிரத்தையுடன் தான் செய்கிறார்கள். ஆனால் பங்களிப்பாளர்களை சரியாகத் தேர்வு செய்யவேண்டும் என்பது என் விருப்பம். மேலும் நூற்றாண்டு விழாக்குழுவின் அமைப்பாளர் திரு. மண்டலம் சுப்பிரமணியம் அவர்களும், இசைப் புரவலர் திரு. நல்லி குப்புசாமி செட்டி அவர்களும் மிகவும் ஈடுபாட்டுடன் ஜிஎன்பியின் நூற்றாண்டு விழாவை நடத்தி வருவது பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/12/%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இப்படியும் சில வித்துவான்கள்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/10/ariyakudi-ramanuja-iyengar/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/10/ariyakudi-ramanuja-iyengar/#comments</comments>
		<pubDate>Fri, 30 Oct 2009 14:53:48 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[ariyakudi ramanuja aiyengar]]></category>
		<category><![CDATA[carnatic music]]></category>
		<category><![CDATA[g.n.balasubramaniyam]]></category>
		<category><![CDATA[gnb]]></category>
		<category><![CDATA[அரியக்குடி]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[ஜிஎன்பி]]></category>
		<category><![CDATA[ராமானுஜ அய்யங்கார்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=418</guid>
		<description><![CDATA[எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://lh3.ggpht.com/_NyM04PwskmU/Sul8oPr5kCI/AAAAAAAAAEc/GU_NJ2e0ML8/s800/img429.jpg"><img class="alignleft" src="http://lh3.ggpht.com/_NyM04PwskmU/Sul8oPr5kCI/AAAAAAAAAEc/GU_NJ2e0ML8/s288/img429.jpg" alt="எம்.எஸ்.சௌந்தரம்" /></a>எம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய இப்புத்தகத்தில் பாசாங்கில்லாத எளிய நடையில், உள்ளது உள்ளபடி அவர் காலத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் விவரமாக எழுதியுள்ளார் அந்த அம்மையார். நூல்நிலையத்தின் தூசி படிந்த புத்த அடுக்குகளினூடே இடுக்கில் பதுங்கியிருந்த இந்த சிறு நூல் மூலம் கர்நாடக இசையைப் பற்றி மட்டும் இல்லாமல் மனித நேயம், அக்கால வாழ்க்கையின் கூறுகள் ஆகியவற்றை அறிய முடிகிறது.<br />
<span id="more-418"></span><br />
<a href="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuluNxixLRI/AAAAAAAAADY/movxiZDCNhk/s800/img430.jpg"><img class="alignright" src="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuluNxixLRI/AAAAAAAAADY/movxiZDCNhk/s288/img430.jpg" alt="அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்" /></a>அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சில பிரபல வித்துவான்களின் சிறப்பியல்புகள் மிகவும் சுவாரசியமாக உள்ளன. அதிலும் அக்காலத்தில் மிகப் பிரபலமான அரியக்குடி இராமானுஜ ஐயங்காரைப் பற்றி அந்த இசைக் கலைஞர் எழுதியுள்ளவை ஒரு பிரபலமான மனிதரின் மற்றொரு முகத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன. இக்கட்டத்தில் நீங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய உணமை என்னவெனில் இந்நூலின் ஆசிரியரான சௌந்திரம் அம்மையாருடைய தகப்பனார் நாமக்கல் சேஷ ஐயங்கார் மிகப் பெரிய சங்கித வித்துவானாகத் திகழ்ந்தவர். நடிகர் சித்தூர் வி.நாகையா, நடிகை வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா தேவி, குன்னக்குடி வெங்கடராம ஐயர், துறையூர் இராஜகோபால சர்மா, வி.வி.சடகோபன், கீவளூர் மீனக்ஷிசுந்தரம் பிள்ளை, நடிகர் ரஞ்சன் மற்றும் <strong>அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்</strong> போன்ற பலருக்கு அவர் குருவாக இருந்து சங்கீதத்தை போதித்திருக்கிறார்.</p>
<p>தன் மகளுக்கு அவருடைய சிஷ்யர் அரியக்குடியை விட்டு சங்கீதம் பயிற்றுவிக்க வைத்தார். அதாவது தன் குருவின் மகளுக்கு அரியக்குடி (ஏனோ அவரை &#034;அய்யங்கார்&#034; என்றுதான் பலர் அடையாளம் காட்டுகிறார்கள்) குருவானார்.</p>
<p>இந்த முன்னுரையுடன் உங்களை எம்.எஸ்.சௌந்தரம் அம்மையாரிடம் ஒப்படைக்கிறேன். அரியக்குடியின் குணாதிசயங்களைப்பற்றி அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை வாசியுங்கள்:-</p>
<p><a href="http://lh5.ggpht.com/_NyM04PwskmU/SuluWnaxzmI/AAAAAAAAADo/moKlnwIBJCw/s800/img428-1.jpg"><img src="http://lh5.ggpht.com/_NyM04PwskmU/SuluWnaxzmI/AAAAAAAAADo/moKlnwIBJCw/img428-1.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuluTwTVmFI/AAAAAAAAADk/g-dwzhxiqNs/s800/img424.jpg"><img src="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuluTwTVmFI/AAAAAAAAADk/g-dwzhxiqNs/img424.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuludcorayI/AAAAAAAAAD0/9MilxA2sHH4/s800/img424-1.jpg"><img src="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuludcorayI/AAAAAAAAAD0/9MilxA2sHH4/img424-1.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh5.ggpht.com/_NyM04PwskmU/SuluRtTV9RI/AAAAAAAAADg/qs6UoenJGlM/s800/img425.jpg"><img src="http://lh5.ggpht.com/_NyM04PwskmU/SuluRtTV9RI/AAAAAAAAADg/qs6UoenJGlM/img425.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh4.ggpht.com/_NyM04PwskmU/Sulua1c3JjI/AAAAAAAAADw/K-5voUJMkew/s800/img425-1.jpg"><img src="http://lh4.ggpht.com/_NyM04PwskmU/Sulua1c3JjI/AAAAAAAAADw/K-5voUJMkew/img425-1.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh3.ggpht.com/_NyM04PwskmU/SuluPQOMSSI/AAAAAAAAADc/X3v7GXSIRH4/s800/img426.jpg"><img src="http://lh3.ggpht.com/_NyM04PwskmU/SuluPQOMSSI/AAAAAAAAADc/X3v7GXSIRH4/img426.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuluYhUWzFI/AAAAAAAAADs/rc_NWphYW6U/s800/img426-1.jpg"><img src="http://lh6.ggpht.com/_NyM04PwskmU/SuluYhUWzFI/AAAAAAAAADs/rc_NWphYW6U/img426-1.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p><a href="http://lh4.ggpht.com/_NyM04PwskmU/Sur5pBWFJ6I/AAAAAAAAAEk/pspqFmevVi8/s800/img427.jpg"><img src="http://lh4.ggpht.com/_NyM04PwskmU/Sur5pBWFJ6I/AAAAAAAAAEk/pspqFmevVi8/img427.jpg?imgmax=640" alt="" /></a></p>
<p>ஆனால், தான் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் தன் சீடர்களுக்கும், பக்கவாத்தியக் காரர்களுக்கும், நண்பர்களுக்கும் திறந்த கரங்களுடன் பகிர்ந்து கொடுத்த வள்ளலாகத் திகழ்ந்த மறைந்த சங்கீத மேதை <a href="http://www.sangeethapriya.org/tributes/gnb/">ஜி.என்.பாலசுப்பிரமணியம்</a> (<a href="http://kichu.cyberbrahma.com/2008/10/gnb-sakunthalai-enai-maranthu/">ஜிஎன்பி</a>) அவர்களைப் போலும் சிலர் வாழ்ந்திருக்கின்றனர்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/10/ariyakudi-ramanuja-iyengar/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வியவஸ்தை இல்லாதவர்கள்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/09/inappropriate-pictures/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/09/inappropriate-pictures/#comments</comments>
		<pubDate>Wed, 23 Sep 2009 16:05:19 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[கால்கள்]]></category>
		<category><![CDATA[கிளர்ச்சி]]></category>
		<category><![CDATA[குமுதம்]]></category>
		<category><![CDATA[பெண்]]></category>
		<category><![CDATA[மனம்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=406</guid>
		<description><![CDATA[மூட்டுவலிக்குக் கூட இப்படித்தான் படம் போட வேண்டுமா!

]]></description>
			<content:encoded><![CDATA[<p>மூட்டுவலிக்குக் கூட இப்படித்தான் படம் போட வேண்டுமா!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/mootu-vali-2.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/mootu-vali-2-300x226.jpg" alt="மூட்டு வலிக் காட்சி" title="மூட்டு வலிக் காட்சி" width="300" height="226" class="aligncenter size-medium wp-image-407" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/09/inappropriate-pictures/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மெல்ல மறையும் பின்னல் அழகு!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/09/beauty-of-plaited-hairstyle/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/09/beauty-of-plaited-hairstyle/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 13:36:41 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[beauty]]></category>
		<category><![CDATA[hairstyle]]></category>
		<category><![CDATA[plait]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[ஒழுக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[பின்னல்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>
		<category><![CDATA[முடியலங்காரம்]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=400</guid>
		<description><![CDATA[எங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். &#034;ஆத்தாடி மாரியம்மா!&#034; என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!

பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/tossed-up-hair.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/tossed-up-hair-150x100.jpg" alt="tossed-up-hair" title="tossed-up-hair" width="150" height="100" class="alignleft size-thumbnail wp-image-401" /></a>எங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம்? எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து அழகாக நடந்து வருவர்! ஆனால் இப்போது? ஹும். &#034;ஆத்தாடி மாரியம்மா!&#034; என்று சிலிர்த்துப் பேயாடிக் கொண்டு பவனி வருகின்றனர். இரவில் பார்த்தால் பயமாக இருக்கிறது!</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hairstyle.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hairstyle-300x246.jpg" alt="hairstyle" title="hairstyle" width="300" height="246" class="aligncenter size-medium wp-image-404" /></a></p>
<p>பள்ளி செல்லும் நாளில் இரட்டைப் பின்னல், பின் ஒத்தை. காலேஜ் நாட்களிலோ, &#034;இதென்ன, கட்டுப் பெட்டியைப் போல் தலை முடியைப் பின்னுவது. அவிழ்த்து விடு. அது நம் விடுதலை மனப்பான்மையை முழுதும் பிரதிபலிக்கட்டும்!&#034;</p>
<p>பிறெகென்ன, தலைவிரி கோலம்தான். மேலை நாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு அவர்கள் மனத்தில் அது அழகு சேர்ப்பதாகவும், அப்டுடேட் நாகரிகமாக இருப்பதாகவும் கனவு காண்கின்றனர். சிக்குப் பிடித்துக் கொண்டு காணச் சகிக்க வில்லை என்பதுதான் உணமை!</p>
<p>பின்னல் போய் வந்தது &#034;போனி டெயில்&#034;. பின் முடி கொட்டி நூடில்ஸானவுடன் பரட்டைத்தலைதான் மிஞ்சும்!</p>
<p>உண்மை நிலை இப்படியிருக்கும் போது கொஞ்சம் கனவாவது காண்போமே!</p>
<blockquote><p>ப‌டிய‌ வாரிய‌ த‌லை<br />
முத்தில்லா கொலுசு<br />
ஒற்றைப் பின்னல்<br />
கை நிறைய‌ வ‌ளைய‌ல்<br />
க‌ட்டிக் கொள்ள‌ சேலை<br />
சாயம் இல்லா உதடு<br />
மை இல்லா கண்கள்<br />
நகம் இல்லா விரல்கள்<br />
க‌வ‌லை இல்லா சிரிப்பு </p></blockquote>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/girls-of-tamil-nadu.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/girls-of-tamil-nadu-300x225.jpg" alt="பின்னல் அழகுறும் தமிழ்நாட்டுப் பெண்கள்" title="பின்னல் அழகுறும் தமிழ்நாட்டுப் பெண்கள்" width="300" height="225" class="aligncenter size-medium wp-image-403" /></a></p>
<blockquote><p>நல்லெண்ணெய் தேய்த்து விட்டு<br />
நன்றாக ஊற விட்டு<br />
சிகைக்காய்த் தூளெடுத்து<br />
சிகையெங்கும் பரவ விட்டு<br />
வாசனைப் பொடி போட்டு<br />
வாகாக அலசி விட்டு<br />
சாம்பிராணிப் புகை போட்டு<br />
சந்தனம் போல் மணக்க விட்டு<br />
பாசமுடன் விரல்களினால்<br />
பட்டுப் போல் கோதி விட்டு<br />
அழகாக வகிடெடுத்து<br />
அளவாகப் பிரித்தெடுத்து<br />
அம்மா இடும் பின்னலில்தான்<br />
அம்மம்மா எத்தனை ரகம்!</p>
<p>ஆயிரங் கால் பின்னல்<br />
அழகான ஒற்றைப் பின்னல்<br />
பள்ளிக் கென்றே பக்குவமாய்<br />
மடித்துக் கட்டும் இரட்டைப் பின்னல்<br />
பின்னாலே பாலம் கட்டும்<br />
பாரமில்லா சைக்கிள் பின்னல்<br />
கூட்டமாய்ப் பூக்கள் தைத்த<br />
குஞ்சலம் வைத்த பின்னல்&#8230;</p></blockquote>
<p style="text-indent: 20px;">நன்றி: <a href="http://kavinaya.blogspot.com/2009/03/blog-post_20.html">கவிநயா</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/09/beauty-of-plaited-hairstyle/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>இவ்வளவுதான் உலகம்!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/09/unfair-world/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/09/unfair-world/#comments</comments>
		<pubDate>Tue, 08 Sep 2009 07:58:07 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[ஒழுக்கம்]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[நாகரிகம்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=398</guid>
		<description><![CDATA[
]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/guru_en_aalu.jpg" alt="புரிந்துகொள் மகனே!" title="புரிந்துகொள் மகனே!" width="255" height="280" class="aligncenter size-full wp-image-397" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/09/unfair-world/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலவசங்களின் மறுபக்கம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/#comments</comments>
		<pubDate>Sun, 16 Aug 2009 05:16:31 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[freebies]]></category>
		<category><![CDATA[laziness]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலவசம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சோம்பல்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=394</guid>
		<description><![CDATA[இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு
(நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.)
தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.
சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு</p>
<p>(நன்றி. <a href="http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=16126">தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009</a>.)</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/plough.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/plough-150x100.jpg" alt="உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்" title="உழுதுணடு வாழ்வாரே வாழ்வார்" width="150" height="100" class="alignright size-thumbnail wp-image-396" /></a>தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வெற்றி பெற்றதும் எதிர்க்கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுகின்றனர். இதன் விளைவு தான், இன்று தமிழக மக்களிடையே ஆட்டிப் படைத்து வரும் சோம்பேறித்தனம்.</p>
<p>சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவசங் களை வைத்தே எளிதில் குடும்பம் நடத்தி விட முடியும் என்ற புதிய கலாசாரம், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இலவச &#034;டிவி&#039;, காஸ், மண் ணெண்ணெய், குடிசைக்கு மின் சாரம், சைக்கிள், பாடநூல் உள் ளிட்ட பல திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. இவற்றில் மாதந்தோறும் பணத் தை ஈட்டி தருவதற்கென்றே சில இலவசங்கள் வழங்கப்படுகின்றன.</p>
<p>நகரங்களில் வசிப்பவர்களுக்கு போதியளவு சமையல் காஸ் கிடைப்பதில்லை. ஆனால், கிராமப்புற மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பை அரசு இலவசமாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்த பலருக்கு தெரியாத காரணத்தாலும், கூடுதல் செலவு பிடிக்கும் என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விறகில் சமையல் செய்து கொண்டு, அரசு வழங்கும் காஸ் சிலிண்டரை விற்பனை செய்து காசாக்கி வருகின்றனர்.</p>
<p>இதற்காக, 20 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கின்ற காஸ் சிலிண்டரை 275 ரூபாய்க்கு வாங்கி ஓட்டலில் விற்றால், 525 ரூபாய் உடனடியாக பணம் கிடைக்கிறது. ரேஷன் அட்டை மூலம் கார்டு ஒன்றுக்கு கிடைக்கும் 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டர் 8.60 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 164 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது.</p>
<p>சாதாரண தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு முதியோர் பென்ஷன் தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக 1,000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றின் மொத்த கூடுதல், மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாயை எட்டுகிறது. இதுதவிர முதியோர்களுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை, பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் சாப்பிட கடைசி மூன்று மாதமும், குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதமும் 6,000 ரூபாய் உதவித்தொகை, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இலவச உணவு, புத்தகம், திருமண உதவி என அனைத்து மே அரசு வழங்குகிறது.</p>
<p>மாதந்தோறும் அரசு மூலம் கிடைக்கின்ற இலவசங்கள் தான் அடித்தட்டு மக்களின் மனதை புரட்டிப் போட்டுள்ளது. &#034;உழைத் தால் தான் உணவு&#039; என்பதை பொய்யாக்கும் வகையில், உழைக்காவிட்டாலும் உணவு என அரசின் திட்டங்கள் மாற்றியுள்ளது. அரசின் இந்த இலவசங்கள் மூலம் கிடைக்கும் 2,000 ரூபாயில் கிலோ ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி, மானியத்தில் கிடைக்கும் கோதுமை, ரவை, மைதா, மளிகை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளிலேயே 200 ரூபாயில் வாங்கி விடலாம். மீதியுள்ள 1,800 ரூபாயில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய, இதர பொருட் கள் வாங்கி எளிதில் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதனால், கிராமங்களில் மாடு உழவு, களை எடுப்பது, அறுவடை போன்ற விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதில்லை. என்ன தான் இயந்திரமயமாக்கலில் அரசு ஈடுபட்டாலும், இயந்திரத்தை இயக்குவதற்கும் மனித ஆற்றல் தேவை. இதனால், மனித ஆற்றல் பயன்படுத்தாத சவுக்கு, கரும்பு, பாமாயில், மூங்கில் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டுக்கு, அன்னிய நாட்டில் இருந்து உணவை இறக்குமதி செய்து சமாளிக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், அரசு வழங்கும் இலவசங்களை தகுதி உள்ளவர்களுக்கு வழங்கினால், உணவுக்காக அன்னிய நாட்டிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.</p>
<p>குறைந்த விலைக்கு விற்கப்படும் அரசின் இலவச பொருட்கள் : அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் பல குடும்பங்களில் தேவையை விட கூடுதலாக இருப்பதால், குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஷன் கார்டை வைத்து தான் இலவசங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தால், அவர்களுக்கு தனித்தனியே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.</p>
<p>ஆனால், மூன்று வீடுகள் இல்லை. இது போன்ற குடும்பத்திற்கு ஒரு &#034;டிவி&#039; தான் பார்க்க முடியும். தேவையற்று கிடக்கும் இரண்டு &#034;டிவி&#039;க்களை 1,000 முதல் 1,200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலையை பெரும்பாலான மக்கள் உடுத்துவதில்லை. இவை அனைத்தும் பாத்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் வேட்டி, சேலை ஜதை ஒன்று வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/08/perils-of-freebies/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>தகடுகள் ஜாக்கிறதை!</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/06/disposal-of-hard-disks/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/disposal-of-hard-disks/#comments</comments>
		<pubDate>Mon, 29 Jun 2009 08:27:30 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[கணினி]]></category>
		<category><![CDATA[cellphone]]></category>
		<category><![CDATA[hard disk]]></category>
		<category><![CDATA[memory card]]></category>
		<category><![CDATA[security]]></category>
		<category><![CDATA[வண் தகடு]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=390</guid>
		<description><![CDATA[நேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?
எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hard-disk.jpg"><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/hard-disk-150x150.jpg" alt="hard-disk" title="hard-disk" width="150" height="150" class="alignleft size-thumbnail wp-image-391" /></a>நேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?</p>
<p>எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. <em>(ஊரெல்லாம் இதைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசுவார்கள்!)</em></p>
<p>சரி, அந்த பலான கிளுகிளு படங்கள் பப்ளிக்காக வெளியே தெரிய வந்தது எப்படி என்று  தினந்தோறும் ”நம்பர் ஒன்” நாளிதழைப் படித்து அறிவைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருக்கும் நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.</p>
<p>எல்லாம் அந்த “வண்தகடு” செய்த சேஷ்டைதான்! அதுதான் சார் ஹார்டு டிஸ்க்.</p>
<p>பலான கம்ப்யூட்டர் வாத்தியாருடைய “லாப்டாப்” கணினிக்குள் வைரஸ் புகுந்துவிட்டது. இவர் பண்ணும் ஜல்சாக்களால் பொறாமை கொண்ட எவனோ வைரஸ் அனுபிவிட்டான் என்கிறார் இவர். அந்த லாப்டாப்பின் பழுதை நீக்க திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கணினி ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் வைரைஸை நீக்கியபின் வண்தகட்டினுள் நுழைந்து பார்த்தால், “தோடா” என்று மூக்கில் விரல் வைக்குமளவிற்கு பலான படங்கள் &#8211; பல போஸ்களின் (வத்தியார்தான்) பலபல கிளுகிளு இளம் பெண்களுடன் &#8211; கொட்டிக் கிடக்கின்றன.</p>
<p>அவ்வளவுதான். மேட்டர் பரவலாக மென்தகடுகள் (CD) மற்றும் செல்ஃபோன் கார்டுகள் மூலம் பல்கிப் பரவத் தொடங்கி விட்டன. ஆசாமி இப்போது கைது!</p>
<p>அது கிடக்கட்டும். இப்போது என் இடுகையின் மேட்டர் என்னவென்றால், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம் அந்தரங்க விஷயங்களை அடுத்தவர் கண்ணுக்கும் கருத்துக்கும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதுதான்.</p>
<p>ஒரு பெண் தன் கணவனிடம் வாழாமல் தனியாக இருந்தார். மணமுறிவுக்கு ஒப்பாமல் கணவனிடமிருந்து  ஒருகணிசமான துகையைக் கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவளுடைய செல்ஃபோனை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்தார். அதில் இருந்த கார்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய குறிப்புகள், பான் கார்டு விவரங்கள் இன்னும் சில முக்கிய தரவுகள் பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் சிலரோடு சேர்ந்து இருக்கும் ஃபோட்டோக்களும் இருந்தன. அந்த ரிப்பேர் கடையின் முதலாளி கணவனுக்கு வேண்டியவர். அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பெண்ணின் வழக்கு தோற்றுவிட்டது.</p>
<p>உங்கள் கணிப்பில் ஒன்று முக்கிய விவரமாகத் தோன்றா விட்டாலும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாமல்லவா. அதனால் செல் ஃபோனை பிறரிடம் கொடுப்பதற்கு முன்னால் அதிலுள்ள மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுங்கள். அதற்கு முன் ஃபோன் மெமரியிலுள்ள அனைத்து சமாசாரங்களையும் கார்டுக்கு மாற்றிவிடுங்கள். அதன்பின் ஃபோன் மெமரியை சுத்தம் செய்துவிடுங்கள். நிறைய சேமித்து வைத்திருந்தால் அனைத்தையும் உங்கள் கணினியில் back-up செய்துவிடுங்கள்.</p>
<p>சரி. கணிணியின் Hard disk-ல் முக்கிய கோப்புக்களை (files) நீக்கிவிட்டால் (delete) யாரும் பார்க்க முடியாதே என்கிறீர்களா? ஐயா, நீங்கள் டெலீட் செய்த கோப்புகள் உணமையில் அழிக்கப் படுவதில்லை. அவற்றைப் பற்றிய விவரம் மட்டும் வண் தகட்டின் அட்டவணையிலிருந்து (index) நீக்கப் படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் தகட்டின் அந்த பிரதேசங்களில் வேறு கோப்பு எழுதப்படும் வரை அவை அங்கே பத்திரமாக இருக்கும். இதனால் நீக்கியவற்றை சுலபமாக மீள் கொணரலாம் (Undelete).</p>
<p>தவிர, பழுதான ஹார்டு டிஸ்கிலிருந்து கோப்புக்களை மீட்பதற்காக சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன (data recovery software). இவற்றின் துணை கொண்டு தகடுகளில் ஆழப் பதிந்திருக்கும் 0-களையும் 1-களையும் வெளிக் கொணர இயலும்.</p>
<p>ஆகையால் மகா ஜனங்களே, உங்கள் வண் தகடு பழுதாகிப் போனால், அல்லது அது தேவையில்லை என்று எண்ணினால், யாரிடமும் தானம் கொடுக்காதீர்கள்; பழைய சாமான் வாங்குபவரிடம் போடாதீர்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு சுருட்டிக் கொண்டு கிடக்குமோ! ஹார்டு டிஸ்கை ஒரு நல்ல சுத்தியல் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். மென் தகடுகள், மெமரி கார்டுகளுக்கும் இதே மரண அடி முறைதான் சிறந்தது. </p>
<p>அமேரிக்க தற்காப்பு அமைச்சக அலுவலங்களில் (Pentagon) வண் தகடுகளை நூடில்ஸ் போல் shredding செய்துவிடுவார்களாம்.</p>
<p>மைக்ரோசாஃப்டின் <a href="http://www.microsoft.com/smallbusiness/resources/technology/security/clean-the-hard-drive-before-dumping-your-pc.aspx#Cleanyourharddrive">இந்த வலைப் பக்கத்தில்</a> இந்த விஷயத்தைப் பற்றி விவரமாக பல அறிவுரைகளை எழுதியிருக்கிறார்கள். படியுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/disposal-of-hard-disks/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்று தந்தையர் தினம்</title>
		<link>http://kichu.cyberbrahma.com/2009/06/fathers-day/</link>
		<comments>http://kichu.cyberbrahma.com/2009/06/fathers-day/#comments</comments>
		<pubDate>Sun, 21 Jun 2009 11:59:27 +0000</pubDate>
		<dc:creator>எஸ்.கே</dc:creator>
				<category><![CDATA[மனித நேயம்]]></category>
		<category><![CDATA[dad]]></category>
		<category><![CDATA[father]]></category>
		<category><![CDATA[fathers day]]></category>
		<category><![CDATA[loving dad]]></category>

		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=388</guid>
		<description><![CDATA[தந்தையின் பாசம்!

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் &#8230; 
(கவிதைக்கு நன்றி: அமுதா)
]]></description>
			<content:encoded><![CDATA[<p>தந்தையின் பாசம்!</p>
<p><img src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/happy_fathers_day.jpg" alt="Happy Fathers Day" title="Happy Fathers Day" width="314" height="410" class="aligncenter size-full wp-image-389" /></p>
<p>என் செல்லப் பெண்ணே!!!<br />
பத்து மாதம் சுமக்க முடியவில்லை<br />
என்று சேர்த்து வைத்து<br />
இயலும் வரை சுமக்கிறேன்<br />
தோளிலும் முதுகிலும் &#8230; </p>
<p><em>(கவிதைக்கு நன்றி: <a href="http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_27.html">அமுதா</a>)</em></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kichu.cyberbrahma.com/2009/06/fathers-day/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>
