பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் ஜனவரி, 2008

அபிதான கோசம்

புத்தகப் பரண் :: 2 மறுமொழிகள் »

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது "அபிதான கோசம்" என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், "Asian Educational Services" நிறுவனத்தினர்.

அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-

இது
யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ. முத்துதம்பிபிள்ளையால்
செய்து,

இலங்கை இராஜ்மந்திர சபை
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி
ஸ்ரீமான். பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய
வித்தியாபிமான ஞாபகச்சின்னமாகச் சமர்ப்பித்துப்
பிரகடனஞ் செய்யப்பட்டது.

இந்நூலை ஆக்கியோரான முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம், நாவலர் தோட்டம் முகவரியிட்டு எழுதியுள்ள முகவுரை இவ்வாறு தொடங்குகிறது:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 239 முறை) ::

வாரியாரின் மணிமொழிகள்

நல்வாழ்வு :: மறுமொழி ஒன்று »

கிருபானந்த வாரியார்திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் "கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி" எடுத்த "மணிமொழிகள்" (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:

  • இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.
  • பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.
  • அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் — இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.
    • பார்த்துக் கெட்டது பிள்ளை
    • பார்க்காது கெட்டது பயிர்
    • இட்டுக் கெட்டது காது
    • இடாது கெட்டது கண்
    • கேட்டுக் கெட்டது குடும்பம்
    • கேளாது கெட்டது கடன்
    • உண்டு கெட்டது வயிறு
    • உண்ணாது கெட்டது உறவு
    • கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்
    • திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்
    • ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்
    • பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்
    • கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்
    • நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்
  • சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே
  • மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் — நெருப்பு, கடன், பகைவன்.
  • வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது
  • அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.
  • சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது
  • விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.
  • கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் - இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.
  • மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.
  • தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.
  • நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.
  • ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.
  • இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்
    மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்
    தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்
    வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும்
  • இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் - இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.
  • ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.

அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 225 முறை) ::

சிறுவர்கள் ஜாக்கிரதை!

மனித நேயம் :: மறுமொழி ஒன்று »

இரயில் பயணங்களில் சில சிறுவர்கள் ஒரே இடத்தில் போரடித்துக்கொண்டு உட்காராமல் பெட்டிக்குப் பெட்டி இணைப்புக் கூண்டு (vestibule) வழியே தாண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு த்ரில்! அதுபோல் தாவித்தாவி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் சில சமயம் நம் எதிரில் வந்து மோதிக்கொள்வதுண்டு. அதன் எதிர்வினை பெரும்பாலும் "பாத்துப் போங்கப்பா", "ஏய், விழுந்தூடப்போற", "பைய, பைய" போன்றவையாக இருக்கும். இன்னும் சிலர் கோபமாக முறைப்பதும் உண்டு. ஆனால் அந்தச் சிறுவர்கள் சிரித்துவிட்டுச் செல்வார்கள்; அல்லது தங்களுக்குள் நமக்கு ஒரு பெயர் வைத்து ஜோக்கடித்துக்கொண்டே செல்வார்கள்.

அதுபோன்ற தருணங்களில் நான் பெரும்பாலும் அவர்களைப் பார்த்து ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, ஏதாவது கடி ஜோக்கையோ, சொல் விளையாட்டையோ, யுக்தியான வினாக்களையோ சொல்லிவிட்டு உடனே கழண்டிவிடுவேன் (அவர்களாகக் கழளுவதற்கு முன்னால்!) :)

வெற்றிக்கொடிகட்டுஇது எனக்கு ஒரு பழக்கமாகவே தொற்றிக்கொண்டு விட்டது. சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நண்பர் வீட்டுத் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தபோது கும்பலாக வந்த சிறுவர், சிறுமியர்களிடம் அமேரிக்க "தேசி"களையும், இந்தியப் பெண்களையும் இணைத்து சில ஜோக்குக்களையும், சில விடுகதைகளையும் சொல்லி சிரிக்கவைத்தேன். பிறகு உணவருந்தச் சென்றோம். அதற்குள் அங்கு குழுமியிருந்த குழந்தைகளுக்கிடையே நான் மிகப் பிரபலமாகிவிட்டேன்.

அதுபோல் சில சிறார்களிடம் பேசிச் சிறித்துக்கொண்டிருந்தபோது ஒரு பையனின் பெற்றோர் வந்து அவனை அழைத்துச் சென்றனர். ஆனால் அப்போது அந்தப் பையனின் தாய் என்னைப் பார்த்த பார்வை என் மனத்தில் சுட்டது. "ஒரு மாதிரியாக" என்பார்களே அதுபோல் என்னை நோக்கி "frown in consternation" ஒன்றை வீசிவிட்டுச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு என் மூடும் மாறிவிட்டது. ஒன்றும் பேசாமல் என் "ஐபாடை" வெளியில் எடுத்து காதில் மாட்டிக் கொண்டு மூலையில் அமர்ந்துவிட்டேன்.

ஓரிரெண்டு நாட்களுக்குப்பின் எங்கள் வீட்டிற்கு வந்த சிலர் மூன்று கையேடுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதில் இளம் சிறுவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தும் பாதகச் செயல் பெருகிவிட்ட விவரங்களையும், அத்தகைய நிகழ்வுகளிடமிருந்து குழந்தைகளைக் காக்கும் முறைகள் பற்றியும் எழுதியிருந்தது.

அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாக நடக்க்கின்றன. இந்தியா பொன்ற ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்தாலும், வெளிவராமலிருக்கலாம். ஆனால் அமேரிக்காவில் பல கிறிஸ்தவ மத குருமார்கள் இதுபோல் சிறார்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதும், அதனால் அவர்கள் சார்ந்த மத அமைப்புக்கள் பெருந்தொகைகளை நஷ்ட ஈடாகக் கொடுக்க நேர்வதும் ஊடகங்களில் வெளிவந்து அனைவரும் அறிந்த செய்தி. அங்கு இதுபோன்ற தவறிழைக்கும் பாதிரிகளால் ஏற்படும் இழப்புக்கள் அநேகம். "டைம்ஸ்" இதழ் செய்தியின்படி 2005 ஆண்டுவரையிலேயே சுமார் 4,000 பாதிரியார்கள் இத்தகைய கொடுஞ்செயல் புரிந்ததாக அடையாளம் காணப்பட்டு, அவற்றினால் ஏற்பட்ட நீதிமன்ற சிலவினால் சுமார் 800 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு பல மாதாகோயில்கள் மூடப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு யாஹூ செய்தித் தொகுப்பு அளிக்கும் தரவுகளின்படிப் பார்த்தால் அவர்கள் கொடுத்துள்ள நஷ்ட ஈட்டுத்துகையே "மில்லியன்" அளவுகளைத்தாண்டி "பில்லியனு"க்குச் செல்லும்போல் தோன்றுகிறது!

இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே ஒரு இலட்சத்த் தாண்டும் என மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இத்தகைய கொடுமைகள் பல இலைமறை காய்மறையாக பல சமூகங்களீல் குடும்ப சூழலிலும் நிகழ்வது மக்களுக்குத் தெரியவருவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பிறருடன் நெருங்கிப் பழகும்போது மிகக் கவனத்துடன் கண்காணிக்கிறார்கள். இதன் அவசியத்தை நானும் "திண்ணை" இணைய வார இதழில் வெளிவந்த "மக்கள் மெய்தீண்டல்" என்னும் கட்டுரைமூலம் வலியுறுத்தியிருக்கிறேன்.

ஆகையால் தோழர்களே, சிறு குழந்தைகளைக் கண்டால் ஓடுங்கள் காத தூரம். இல்லையெனில் உங்களையும் "பிள்ளை கெடுப்பவன்" லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்!

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 219 முறை) ::

அகரத்திலடங்கிய ஓங்காரம்!

ஹிந்து மதம் :: மறுமொழி ஒன்று »

திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

நன்றி: ஹைகோபி.

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 265 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in