பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் 2007

கர்நாடக இசையும் தமிழிசையும்!

இசை :: 4 மறுமொழிகள் »

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 371 முறை) ::

ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யலாமே!

நல்வாழ்வு :: 2 மறுமொழிகள் »

வேண்டாமே இந்த வேலை!

குறிச்சொற்கள்: ,
:: (பார்வை 268 முறை) ::

கழுத்துக்குட்டை (tie) கட்டுவது எப்படி!

எப்படி :: மறுமொழி ஒன்று »

நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். நம் நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லாத அலங்காரம் என்று நமக்குத் தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த குட்டை தேவையாகத்தானே இருக்கிறது!

என்னைபோல் நீங்களும் சிரமப்படக்கூடாதே என்பதற்காக இந்த செய்முறை விளக்கம். இதைவிட சிறந்த விளக்கப்படம் உங்கள் கைவசம் இருந்தால் தெரிவியுங்கள். சுட்டுவிடலாம்! :lol:
(படத்தைக் தட்டினால் பெரிசாகும் - உங்களுக்குத் தெரியாதா என்ன!)

டை
:: (பார்வை 265 முறை) ::

சின்ன ஐடியா!

எப்படி :: 2 மறுமொழிகள் »

இரட்டை தீப்பெட்டி

நன்றி
!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 269 முறை) ::

இழு-பிணை (zipper)

எப்படி :: 4 மறுமொழிகள் »

நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் - விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்!

ஸிப்பர் இணைப்பு

ஸிப்பர் அவிழ்ப்பு

ஸிப்பர்

zipper-open.gif

zipper

நன்றி:-

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 295 முறை) ::

காணுமிடமெல்லாம் கழிப்பிடமா?

நல்வாழ்வு :: 5 மறுமொழிகள் »

கழிப்பிடம்தேடி களிப்பீர்! எதெதெற்கோ போர்டுகளையும் கட்-அவுட்டுகளையும் வைத்து சாலையை அடைக்கிறார்களே, நம் மக்கள் கண்ட இடங்களையெல்லாம் நரகலாக்கும் நாகரிகமற்ற பழக்கத்தை மாற்றும் வகையில் இந்த அறிவிப்புப் பலகையை அனைத்துப் பொது இடங்களிலும் வைத்தாலென்ன?

இதுக்கெல்லாம் அசருவோமா நாங்கள் என்கிறீர்களா!!

படம் - நன்றி: Mike Jolley

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 300 முறை) ::

தையல் இயந்திரம்

எப்படி :: 2 மறுமொழிகள் »

தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?

தையல் இயந்திரம்

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 359 முறை) ::

நாலரைப் பாலா நச்சுப் பாலா!

நல்வாழ்வு :: 2 மறுமொழிகள் »

aavin "வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு" என்று எங்கோ வாசித்திருக்கிறேன்! ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று "வெளுத்தவர்கள்" இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை!

cow இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம் - இங்கு பால் என்று நாம் குறிப்பிடுவது பசு மற்றும் எருமைப் பாலைப் பற்றித்தான் - புலிப்பால், ஆட்டுப் பால், தாய்ப்பால் இவைகளைப் பற்றியல்ல!

child-milk அடிப்படையில் பால் அருந்துவதே மனிதனுக்குக் கெடுதல் என்று கூவி பால்காரர்கள்தம் வாழ்வாதாரத்தில் கைவைக்க முயல்வோர் பலருண்டு பாரில்! அந்த பால் எதிர்ப்புக் கழகத்தார்களிடம் "குறையென்ன கண்டீர் எந்தம் மக்கள் அன்றாடம் பருகிடும் ஆவின் பாலில்?" என்று கேட்போமா:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 333 முறை) ::

இனிமே நாங்கதான்!

இசை :: 2 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 306 முறை) ::

மறைந்து போகும் மனக்கணக்கு

மனித மனம் :: 5 மறுமொழிகள் »

மனக் கணினிசாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் - உடனே அவர்களின் கைகள் தன்னையறியாமல் பைக்குள் செல்லும், கால்குலேட்டர்களை எடுக்க!

என்னுடன் பணியாற்றும் ஒருவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு படுக்கை வசதி வண்டியில் 6 டிக்கெட், குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் மூன்றரை டிக்கெட், மூன்றாம் வகுப்பில் 7 டிக்கெட் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எவ்வளவு கூட்டுத் தொகை என்பதைச் சட்டென்று சொல்லிவிடுவார். அந்த அளவுக்கு இல்லாவிடிலும், சாதாரண பெருக்கல், கூட்டல் கூட மனதால் செய்யமுடியாத சமுதாயமாக நம் இளைஞர்கள் மாறிவிட்டார்கள்.

இதற்குக் காரணம் இதுபோன்ற மனப் பயிற்சி அவர்களின் கல்வித் திட்டத்திலும் இல்லை, பெற்றோர்களும் இத்தகைய மனதாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாரில்லை. கணினியும், இணையமும், கூகிளும் கைவசம் இருக்கும்போது மனக்கணக்கென்று ஒன்று எதற்கு என்பது இந்தக் கால கட்டத்தில் எழும் வாதம். ஆனால் மனத்துக்குளேயே இத்தகைய நுன்ணிய செயல்களை இயக்கும் (processing) ஆற்றலை வளர்த்தல், அவர்களின் உணர்வுபூர்வ செயலாற்றல் மற்றும் ஒரு பிரச்னையின் பல கோணங்களையும் தன் மனத்தினுள் ஆராய்ந்து உடனுக்குடன் சரியான முடிவெடுக்கும் திறன் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பதால் அது ஒரு முக்கிய பயிற்சியாகும். This kind of brain games will help improve cognitive capabilities.

அடுத்த முறை ஒரு இளைஞரை காணும்போது இந்தக் கணக்கைப் போட்டு காகிதம், பேனா இல்லாமல் விடை சொல்லச் சொல்லுங்கள்:-

ஒரு டிஸ்கி: (இதனால் உங்களுக்கு சூட்டப்படப்போகும் பட்டப் பெயர்களுக்கும், உடற் காயங்களுக்கும், உடையப் போகும் கன்னாடிகளுக்கும் நான் பொருப்பல்ல!)

"இரெண்டரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் மூன்றரையே அரைக்கால் ரூபாய் என்றால், நாலரையே அரைக்கால் கிலோ வாழைக்காய் எவ்வளவு ரூபாய்?"

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 287 முறை) ::

 

5-ல் இது-112345»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in