‘இசை’ வகைசார்ந்த இடுகைகள்

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

இசை :: மறுமொழி இனிமேல்தான் »

MMDandapanidesikar தேசிகர் தேன்குரல் தேசிகர்

எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 - 1972)

பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். 'பட்டினத்தார்' தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த 'நந்தனார்' படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), 'முதல் தேதி' (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், "ஜகஜனனீ ", "என் அப்பன் அல்லவோ…", "தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்", "வழிமறித்து நிற்குதே", "காண வேண்டாமா" முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் தீர்க்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?"

அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகாளையும் அவர் புனைந்துள்ளர்.

தென்றல் இணைய இதழில் "ஆதி" அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் - குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண 'இசை விருந்து' இருக்க வேண்டும். இதற்கான 'இயக்கம்' வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

… இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் - இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, "ஏன் முடிக்கிறார்?" என்று தோன்றியது.

"நந்தனார்" மற்றும் "திருமழிசை ஆழ்வார்" திரைப்படங்களில் தேசிகரின் பாடல்களைக் கேட்க இங்கே செல்லுங்கள்:-

[1] "சங்கீத யோகம்" - தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு - தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 221 முறை) ::

கர்நாடக இசையும் தமிழிசையும்!

இசை :: 4 மறுமொழிகள் »

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மிகுதியையும் வாசிக்க »

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 371 முறை) ::

இனிமே நாங்கதான்!

இசை :: 2 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 306 முறை) ::

மலரே மௌனமா….!

இசை :: 5 மறுமொழிகள் »

"கர்ணா" படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!

வேறென்ன வேண்டும்!

நீங்களும் சிறிது ரசிக்கலாமே!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,
:: (பார்வை 234 முறை) ::

பூங்காவில் எட்டிப் பார்த்தேன்

இசை :: 10 மறுமொழிகள் »

தமிழ்மணம் நடத்தும் வலைப்பதிவிதழ் பூங்காவை இதுவரை நான் பிரட்டிப் பார்த்ததில்லை. சமீபத்தில் அந்த இதழில் நடந்துவரும் தேசிய எதிர்ப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளைப் பற்றி ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் எழுதியுள்ளதைப் படித்தபின் சென்றுதான் பார்ப்போமே என்று தோன்றியது.

முகப்பிலேயே கண்ணில் பட்டது ஒரு சிறப்புப் பேட்டி மற்றும் சிறப்பு ஒலிப்பேழை (podcasting). முனைவர் திருமுருகன் அவர்களின் இசைத்தமிழ் பற்றிய பேட்டி வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி ஆசிரியர் குழு எழுதியுள்ள அறிமுகத்தில் இவ்வாறு காணப்படுகிறது:

முனைவர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார்.

ஒலிப்பேழையை இயக்கினால், திருமுருகன் அவர்கள் தெளிவான, சற்றே ஈழத்தின் சாயல் அடிக்கும் தமிழில் அரிய பல தகவல்களைத் தருகிறார். ஆனால் அவர் முதலில் கூறியுள்ளது என்னவென்றால் சங்க காலத்தில் "நெய்வளம்" என்றழைக்கப்பட்ட பண் தேவார காலத்தில் "நட்டபாடை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காரைக்காலம்மையார், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது என்பது. அதன் ஸ்வரங்களை பாடிக்காண்பித்து இன்றைக்கு அதே பண்ணை தமிழர்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதன் இப்போதைய பெயர் "கம்பீர நாட்டை". அந்த இராகத்தில் "ஞான விநானயகனே" என்ற பாடலின் பல்லவியையும் பாடிக் காண்பிக்கிறார்; சில திரைப்படப் பாடல்களையும் பாடிக்காண்பிக்கிறார். மேலும் செஞ்சுருட்டி, மத்யமாவதி போன்ற இராகங்கள் சில ஸ்வரங்களை மாற்றி வெவ்வேறு புது இராகங்களாக எவ்வாறு உண்டாகிறது என்பதையும் விளக்குகிறார். தாளங்களின் இப்போதைய பெயர்களையும் அவற்றின் முந்தைய பெயர்களையும் விவரிக்கிறார். ஆனால், எங்கையுமே பூங்கா ஆசிரியர்களின் கூற்றுப்படி "எப்படி மொழி மாற்றம் செய்யப்பட்டன, அதன் பின்னணி என்ன" என்று விவரிக்கவில்லை. திருமுருகன் அவர்கள் மிகுந்த அறிவாற்றலுடனும் முதிர்ச்சியுடனும் யார்மனதும் நோகாதவண்ணம், எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி நடந்ததை மட்டும் கூறியிருக்கிறார்.

மேலும் "இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன?" என்று அவர் விளக்கியுள்ளதுபோல் அறிமுகத்தில் கண்டிருக்கிறது. ஆனால் அதுபோன்று எதனையும் அவர் கூறவில்லை.

அடுத்தபடியாக மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 916 முறை) ::

இசையுலக இளவரசர் ஜி.என்.பி

இசை :: மறுமொழி ஒன்று »

கந்தர்வர்Prince charming தற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான "லலிதா ராம்" அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே உரித்தான மேன்மையான தரத்துடன், பளபள காகிதத்தில் அமர்க்களமாக பதிப்பித்திருக்கிறார்கள். "நேசமுடன்" வெங்கடேஷ் அவர்கள் விகடன் பதிப்புப் பகுதியில் முக்கியப் பொறுப்பேற்றபின் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று.

இந்நூலின் இன்னொரு சிறப்பு அதில் வெளிவந்துள்ள பல கிடைத்தற்கரிய படங்கள். அவை சங்கீத ரசிர்கர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரு. லலிதா ராம் அவர்கள் ஜிஎன்பியின் இசையின் நுணுக்கங்களை விவரித்து எழுதியுள்ளார். இது அவருடைய ஆழ்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் பலரைப் பேட்டிகண்டு, இதுவரை எவரும் அறியாத பல நிகழ்வுகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்த சீறிய பொக்கிஷத்தின் விலை வெறும் ரூ. 65 தான்! இதை இணையத்தில் பெற இந்த உரலை க்ளிக் செய்க:
விகடன்.டாட் காம் இணையத்தில் வாங்கும் வசதி

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 697 முறை) ::

கொஞ்சம் செவிக்குணவு!

இசை :: மறுமொழி ஒன்று »


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

பையப் பைய வருகிறேன்!

:: (பார்வை 935 முறை) ::

பஞ்ச ரத்தினம்

இசை :: மறுமொழி ஒன்று »

எனக்கு மிகவும் "டென்ஷண்" ஏற்றிவிடும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தியாகராஜ ஆராதனையின் முத்தாய்ப்பான "பஞ்சரத்ன கீர்த்தனை" கோஷ்டி கானம்தான். தொலைக்காட்சி இல்லாத காலத்தில் ரேடியோ நேரடி ஒலிபரப்பின்போதும் அப்படித்தான். ஒவ்வொரு பாடகரும் நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு, பலவிதமான் சுருதிகளில் ஒரு cacophony-ஐ கிளப்பிக் கொண்டிருப்பார்கள். டி.வி வந்தவுடன் இது இன்னும் மோசமாகிவிட்டது. பக்தியோ, சிரத்தையோ சிறிதுமில்லாமல், டி.வியில் முகம் காண்பிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு, அங்கு அடிக்கப்படும் லூட்டியைக் கண்டால் சாதாரணமானவர்களுக்குக் கூட பிரஷர் ஏறிவிடும்.

இன்று காலை பொதிகையில் பஞ்சரத்ன கீர்த்தனை நேரடி ஒளிபரப்பு. அங்கே வெளிச்சமாகக் காணமுடிந்தது பகட்டும், படாடோபமும் தான். "பஞ்ச"மாக இருந்த ரத்தினங்கள், பக்தியும், ஈடுபாடும், தியாகராஜர்மேல் நன்றியுணர்வும்!
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 884 முறை) ::

விரைந்துவா கண்ணா

இசை :: 4 மறுமொழிகள் »

என் ஆங்கிலப் பதிவில் Podcasting சோதனை முயற்சிக்குப் பிறகு இங்கு ஒரு பாடலை ப்ளாஷ் (Flash) முறையில் பதிவிலிருந்தே கேட்க ஒரு நிரல் மூலம் முயற்சிக்கிறேன்.

இந்த பஜனைப் பாடலில் வாதிராஜஸ்வாமி "பேக பாரோ, பேக பாரோ" (சீக்கிரம் ஓடி வா) என்று கிருஷ்ணனை அழைக்கிறார். மாண்டு ராகம் மற்றும் ஆதி தாளத்தில் அமைந்த இந்தப் பாடலை விறுவிறுப்பாக, ப்ருகாக்களுடன் பாடியவர்கள் பிரபல கர்னாடக இசை இரட்டையர்கள் "மாம்பலம் சகோதரிகள்". கேட்டு மகிழுங்கள்.

:: (பார்வை 1028 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in