துளித்துளி

காண்பதுவே உறுதிகண்டோம்
காண்பதல்லால் உறுதியில்லை
— பாரதியார்

காதல் என்பதே சுத்த ஹம்பக்!

1

இப்படிச் சொல்பவர் யார்?

“உலகத்துக்கு காமசூத்ரா கொடுத்த நாடு இந்தியா. ஆனால் இங்குதான் பெண்களுக்கு ‘தெய்வம், புனிதம்’ என்று பட்டம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். ’காதல்’ என்னும் சொல்லே சுத்த ஹம்பக். பெண்ணின் உடலைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம்தான் காதலுக்கு மூல காரணம். பெண்ணின் உடலமைப்பின் மர்மம், அவள் ‘தேவதையோ’ என்று கற்பனை செய்யவைத்து ஆண்களை ஈர்க்கிறது.

மூடி மறைத்தால்தான் எதன்மீதும் ஆர்வம் பெருகும். திறந்து வைத்துவிட்டால் ஆர்வம் ஆவியாகிவிடும்”

இந்தக் கருத்தைச் சொல்பவர் இயக்குனர் வேலு பிரபாகரன்.

அத்தகைய ஆர்வம் குறையவேண்டும் என்ற எண்ணத்தில்தன் இப்போதெல்லாம் பெண்கள் திறந்து போட்டுக்கொண்டு வருகிறார்களோ!

மறுமொழிகள் கருத்துக்களை விதைக்க..

2009-01-13

செந்தில் குமரன் @ 8:08 காலை #

காமத்தினால் உந்தப்படுவதே காதல். ஆனால் அதற்கு ஒரு பெண்ணின் உடலைக் காண விழையும் ஆணின் வேட்கை மட்டும் காரணமன்று. ஆணை அனுபவிக்கத் துடிக்கும் பெண்ணின் உள்ளக் கிடக்கையும் காரணியாகும்.

கருத்துக்களை விதைக்க..

(*) குறியிட்ட தகவல் தேவை

கருத்து ஏதும் அளிக்காமல் பதிவு மட்டும் செய்ய