பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் ஆகஸ்டு, 2008

உன் சமர்த்து!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

சீனிராஜ் சிவகுமார் என்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான கவிதைகள் பல ஆக்கி அளித்துள்ளார், தம் "சிவமகா" என்னும் வலைத்தளத்தில். அங்கு உதிர்ந்துள்ளதொரு முத்து இது:

வாழையடி வாழை

வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே
வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும்
விழுக்காடு கூடுவதும் தெரிய வில்லை
வங்கியிலே கேட்டாலும் புரிய வில்லை
இழக்காமல் சேர்ப்பதற்கு முடிய வில்லை
ஏன்தம்பி சரிகிறது நிஃப்டி, சென்செக்ஸ்?
ஒழுங்காக மேற்கல்வி பயின்றி ருந்தால்
ஓடாகத் தேய்ந்திருக்கத் தேவை யில்லை

பேஸிக்கும் டீஏவும் ஏறி னாலும்
பேர்பாதி தவணைக்கே போத வில்லை
யோசிச்சு யோசிச்சு செலவு செஞ்சும்
எட்டாம்நாள் அக்கவுன்டில் ஏது மில்லை
ஆசைக்கோர் அரைவேட்டி எடுக்க வில்லை
அவளுக்கோ துணிக்கடையே தீர்ந்து போச்சு
பூசைகள் செய்தாலும் ஏற்ற மில்லை
பூங்காவில் அமர்ந்தாலும் இளைக்கும் மூச்சு

காதுகுத்தல் கல்யாணம் வந்து விட்டால்
கவரோடு போய்நின்று கை குலுக்கிப்
பாதிமுகம் ஒளிப்படத்தில் தெரியு மாறு
பல்வரிசை காட்டிவிட்டு வருவ தற்குப்
போதாது நான்பார்த்த நாலு OT
போகலைன்னா புலம்பிடுவா எம்பொண் டாட்டி
போதிமரம் எங்கிருக்கு சொல்லுங் கப்பா
பொதுவாய்த்தான் கேட்கின்றேன் உதவு மில்ல?

இன்பங்கள் துறப்பதற்குப் புத்தன் இல்லை
இருந்தாலும் நச்சரிப்புத் தாங்க வில்லை
பெண்பார்த்த போதெனக்குப் புத்தி தூங்கி
பவுடர் பூ பசப்பலில்தான் விழுந்துட் டேனோ?
உண்பதற்கு வாய்திறக்கும் வேளை யில்தான்
உயிரெடுக்க வாய்திறப்பாள் என்னில் பாதி.
அன்பான சொல்கூடத் தேவை யில்லை
அமைதியாக இருந்தாலே அவள்தான் சாமி.

வகையறாக்கள் வந்துவிட்டால் சிரித்து வைத்து
வகைசெய்ய வேண்டுமடா மூன்று நாட்கள்
பகையெல்லாம் இவர்கள்தாம் என்ற போதும்
போய்ச்சேர்ந்தால் வேண்டுமடா எட்டு கால்கள்
மகனுக்கு உதட்டின்மேல் கறுக்கும் போது
மாட்டாமல் உருப்பட்டால் நல்ல வேளை.
மகளுக்குத் தேடவேண்டும் பொன்கொ டுத்து
மத்தபடி மருமவனே உன்ச மர்த்து.

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 262 முறை) ::

பண்பாடு

நல்வாழ்வு :: 5 மறுமொழிகள் »


YouTube - வீடியோவைக் காணுங்கள் How responsible are we towards the society?

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 312 முறை) ::

கணினி வல்லுனர்கள்

கணினி :: மறுமொழி இனிமேல்தான் »

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் music collection பற்றி நிறைய பில்டு அப் கொடுத்தார்.

PC-யிடம் சென்று அவர் ஒவ்வொன்றாக தடவித்தடவி கிளிக் செய்து கொண்டிருந்ததிலிருந்தே அவருடைய அனுபவ அறிவு புலப்பட்டது. பிறகு ஒரு பாட்டின் கோப்பின்மேல் கிளிக் செய்தார். கர்ஸர் பாட்டுக்கு உடுக்கடித்துக் கொண்டிருந்ததேயன்றி வேறு ஒன்றும் நடக்கக் காணோம். "என்ன இவ்வளவு நேரம் ஆகிறதே" என்று கேட்டதற்கு அவர் "பொதுவாகவே கம்ப்யூட்டரில் அவ்வளவு நேரம் ஆகும்" என்று இப்படி ஒன்றுமே தெரியாத ஞானசூனியத்திடம் பேசவேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்னார்!

இதனிடையே நான் அந்த கம்ப்யூட்டரின் விவரங்களைப் பார்த்தால் அது Pentium-2 processor, 128 mb RAM வீரியம் கொண்ட அதிவேகக் குதிரை என்பது தெரிந்தது. நண்பரிடம், "இது பழைய கான்ஃபிகரேஷனாக இருக்கிறதே, அப்கிரேடு செய்யுங்களேன். ஃபாஸ்டாக இருக்க்கும்" என்று ஆலோசனை தெரிவித்தேன்.

வதது வினை. உடனே கோபமாக என் பக்கம் திரும்பி, "என் மச்சினன் தன் கையால் பூட்டின கம்ப்யூட்டராக்கும் இது. என்ன ஜோரா லோடு எடுக்குது தெரியுமா?" என்றார்!

சரி, லோடு ஏற்றும் லாரி ரேஞ்சுக்கு கம்ப்யூட்டரைக் கொண்டு சென்ற நிபுணரிடம் பேசி ஒன்றும் ஆகப் போவத்தில்லை என்பதாலும், அவருடைய மைத்துனர் வேறு இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், மேலும் கதவிடுக்கிலிருந்து அனல் வீசும் கண்கள் எதோ தெரிந்ததுபோல் ஒரு மனப் பிராந்தி உண்டானதாலும், நான் உடனே ஜகா வாங்கி, ஜூட் விட்டு அம்பேலானேன்!

இவரை விட விஷய ஞானி ஒருவர் எனக்கு ஃபோன் செய்து மிகவும் பதட்டத்துடன், "என் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டைக் கணவில்லை" என்றார். "எந்த வலைத்தளத்திற்குச் செல்ல முயற்சித்தீர்கள், என்ன மெசேஜ் வருகிறது" என்று கேட்டேன். அவர் ஒரு பெருமூச்சு விட்டு, "இண்டெர்நெட்டே வரமாட்டேனென்கிறது. சைட்டுக்கு எப்படிப் போவது" என்றார்.

சுமார் இருபத்தி ஒன்று கேள்விகளுக்குப் பின் நான் தெரிந்து கொண்ட நிலவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடந்தது என்னவென்றால், மனிதர் எல்லா கோப்புகளையும் default-ஆக டெஸ்க்டாப்பில்தான் சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதால் ஸ்கிரீன் முழுவதும் ஒரு அம்புக்குறிக்குக் கூட இடமில்லாத படி ஐகானாக நிரம்பியிருக்கிறது. அவற்றில் உலாவிக்கான (வேறு என்ன - ஐ.யி கண்றாவிதான்!) ஷார்ட்கட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் இருக்கும். அதை கிளிக் செய்து வெப்சைட்டுகளுக்கு அவர் செல்வது வழக்கம். இடையில் அவரோ வேறு யாரோ ஐகான்களை இடம் மாற்றிவிட்டார்கள். அதான் அந்த வல்லுனர் "இண்டெர்நெட்டை"த் தெடிக் கொண்டிருக்கிறார்!

அவர் அதைத் தேடட்டும். நாம் போய் கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சியாக எதையாவது தேடுவோம்!

குறிச்சொற்கள்: , , , , ,
:: (பார்வை 369 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in